"அடியேன் அதற்கெல்லாம் இல்லை. உங்கள் விருப்பமே போதும்" என்றேன்.
'சிரித்துக் கொண்டே "பயந்துட்டயா!" என்றார்.
"உண்மை சொல்வதானால், ஆம்!" என்றேன்.
சட்டென்று "கண் மூடி தியானித்தால், உள்ளே பார்க்கலாம் என்றேனே, அதைத்தான் சித்தர்கள் "உள்பூசை" என்பார்கள். உள்ளே த்யானத்தில் பூசை செய்து, கோவில் கட்டி வாழ்ந்தவரை பெருமை படுத்தவே, தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று இறை உணர்த்தவே, ஒரு அரசனுக்கு பாடம் புகட்டவே, அந்த முனிவருக்கு முதல் மரியாதை செய்தார், இறைவன். அந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.
"ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால் அதில் பூடகமாக நாம் அறிந்ததை விட உயர்வான ஏதோ ஒரு செய்தி, இருப்பதாக அடிக்கடி தோன்றும். ஆனால் அது என்ன என்று இதுவரை உணர முடியவில்லை" என்றேன்.
"ஆம் அது உயர்ந்த செய்திதான். அதை பார்க்க வேண்டுமானால், சற்று தள்ளி நின்று அந்த விஷயத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அது புரியும்" என்றார்.
"இதுதான் உண்மையை உணரவேண்டிய காலம் போலும். அதையும், தாங்கள் தெளிவாக உரைக்கலாமே" என்றேன்.
"த்யானத்தில் இருக்கும் ஒருவன், ஒரு நிலையில் தன்னை மறக்கிறான், தான் இருக்கும் சூழலை இழக்கிறான், எதை த்யானிக்கிறானோ, அதிலேயே ஒன்றி, அதுவாக மாறிவிடுகிறான். அவனை சுற்றி நடப்பவை எதுவுமே அவனை பாதிப்பதில்லை. அவன் கவனம் முழுவதும் அந்த ஒரு புள்ளியிலேயே. அந்த நேரத்தில், அவனுக்கு உடல் பற்றிய சிந்தனையே இல்லை. இந்த நிலையைத்தான் ஒரு மனிதன் அடையவேண்டும் என்பதே இறைவன் எண்ணம்.
உடல் பற்றி சிந்தனை இருப்பவனுக்கு, எல்லா அதிர்வுகளும் இருக்கும், அவை அவன் கவனத்தை பாதிக்கும். சற்று முன் அரவத்தை கண்டு நீ இருந்த நிலை. ஒரு நொடியில், உடலை பற்றிய சிந்தனை வந்த பொழுது, எத்தனை பெரிய ஆபத்தின் அருகில் அமர்ந்திருந்தேன் என்று சிந்தனை செய்தாய். மற்றவர்கள் அனைவரும், சகஜ நிலையில் இருந்தார்கள். எதுவுமே ஆபத்தாகவோ, அனுபவமாகவோ தோன்றவில்லை. ஏன்?" என்று கேள்வியை போட்டு நிறுத்தினார்.
"உங்கள் அனுபவம், ஒரே நிலையில் அதிராமல் தொடர்ந்து இருக்கும் மனநிலை காரணமாக இருக்கும்" என்றேன்.
"ஓரளவுக்கு நீ கூறியது உண்மையாயினும், நிரந்தர உணர்ந்த உண்மை என்பது, "அனைத்தும் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது என்பதனால்". அவன் எண்ணத்தை மீறி ஒரு அணுவும், இங்கு அசைவதில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என்கிற, திட நம்பிக்கை தான் காரணம். அந்த நிலை எய்தவனுக்கு மனம் ஒரே நிலையில் வசப்படும். பின்னர் எல்லாம் இயல்பாகவே தோன்றும்." என்றார்.
"அசையாத திட நம்பிக்கையை, அந்த திட நிலையை அடைய ஒரு சாதாரண மனிதன் எங்கு தொடங்க வேண்டும்! எதை பயிற்சி செய்ய வேண்டும்?" எனக் கேட்டேன்.
"ஏற்கனவே, நீ கேள்விப்பட்டதுதான். சித்த மார்கத்தில் முதல் பாடம் "முகம் மறக்க வேண்டும்" என்று கூறி நிறுத்தினார்.
சித்தன் அருள்...... தொடரும்!
'சிரித்துக் கொண்டே "பயந்துட்டயா!" என்றார்.
"உண்மை சொல்வதானால், ஆம்!" என்றேன்.
சட்டென்று "கண் மூடி தியானித்தால், உள்ளே பார்க்கலாம் என்றேனே, அதைத்தான் சித்தர்கள் "உள்பூசை" என்பார்கள். உள்ளே த்யானத்தில் பூசை செய்து, கோவில் கட்டி வாழ்ந்தவரை பெருமை படுத்தவே, தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று இறை உணர்த்தவே, ஒரு அரசனுக்கு பாடம் புகட்டவே, அந்த முனிவருக்கு முதல் மரியாதை செய்தார், இறைவன். அந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.
"ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால் அதில் பூடகமாக நாம் அறிந்ததை விட உயர்வான ஏதோ ஒரு செய்தி, இருப்பதாக அடிக்கடி தோன்றும். ஆனால் அது என்ன என்று இதுவரை உணர முடியவில்லை" என்றேன்.
"ஆம் அது உயர்ந்த செய்திதான். அதை பார்க்க வேண்டுமானால், சற்று தள்ளி நின்று அந்த விஷயத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அது புரியும்" என்றார்.
"இதுதான் உண்மையை உணரவேண்டிய காலம் போலும். அதையும், தாங்கள் தெளிவாக உரைக்கலாமே" என்றேன்.
"த்யானத்தில் இருக்கும் ஒருவன், ஒரு நிலையில் தன்னை மறக்கிறான், தான் இருக்கும் சூழலை இழக்கிறான், எதை த்யானிக்கிறானோ, அதிலேயே ஒன்றி, அதுவாக மாறிவிடுகிறான். அவனை சுற்றி நடப்பவை எதுவுமே அவனை பாதிப்பதில்லை. அவன் கவனம் முழுவதும் அந்த ஒரு புள்ளியிலேயே. அந்த நேரத்தில், அவனுக்கு உடல் பற்றிய சிந்தனையே இல்லை. இந்த நிலையைத்தான் ஒரு மனிதன் அடையவேண்டும் என்பதே இறைவன் எண்ணம்.
உடல் பற்றி சிந்தனை இருப்பவனுக்கு, எல்லா அதிர்வுகளும் இருக்கும், அவை அவன் கவனத்தை பாதிக்கும். சற்று முன் அரவத்தை கண்டு நீ இருந்த நிலை. ஒரு நொடியில், உடலை பற்றிய சிந்தனை வந்த பொழுது, எத்தனை பெரிய ஆபத்தின் அருகில் அமர்ந்திருந்தேன் என்று சிந்தனை செய்தாய். மற்றவர்கள் அனைவரும், சகஜ நிலையில் இருந்தார்கள். எதுவுமே ஆபத்தாகவோ, அனுபவமாகவோ தோன்றவில்லை. ஏன்?" என்று கேள்வியை போட்டு நிறுத்தினார்.
"உங்கள் அனுபவம், ஒரே நிலையில் அதிராமல் தொடர்ந்து இருக்கும் மனநிலை காரணமாக இருக்கும்" என்றேன்.
"ஓரளவுக்கு நீ கூறியது உண்மையாயினும், நிரந்தர உணர்ந்த உண்மை என்பது, "அனைத்தும் இறைவன் விருப்பப்படியே நடக்கிறது என்பதனால்". அவன் எண்ணத்தை மீறி ஒரு அணுவும், இங்கு அசைவதில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என்கிற, திட நம்பிக்கை தான் காரணம். அந்த நிலை எய்தவனுக்கு மனம் ஒரே நிலையில் வசப்படும். பின்னர் எல்லாம் இயல்பாகவே தோன்றும்." என்றார்.
"அசையாத திட நம்பிக்கையை, அந்த திட நிலையை அடைய ஒரு சாதாரண மனிதன் எங்கு தொடங்க வேண்டும்! எதை பயிற்சி செய்ய வேண்டும்?" எனக் கேட்டேன்.
"ஏற்கனவே, நீ கேள்விப்பட்டதுதான். சித்த மார்கத்தில் முதல் பாடம் "முகம் மறக்க வேண்டும்" என்று கூறி நிறுத்தினார்.
சித்தன் அருள்...... தொடரும்!
No comments:
Post a Comment