சித்தம் நிலைத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரையேரத் தொடங்கிவிடும். அங்குதான் சித்த நிலையின் முதல் விதை விதைக்கப்படுகிறது. இதற்காக, ஒரு மனிதன், வெளியுலக தேடலை குறைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே ஏன்? எது? எப்படி? என்று கேள்விகளை எழுப்பி அமைதியாக, பொறுமையாக காத்திருந்தால் அனைத்தும் சரியானபடி விளங்கும். இவ்வுலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும், காரண காரியங்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஜென்மத்தில் ஏதேனும் ஒரு நிமிடத்தில், சித்தர்களுடன் தொடர்பிருந்தால் தான், இந்த பாதையில் நடத்து செல்லவும் முடியும். ஒரு உண்மை தெரியுமா? இறைவனும், சித்தர்களும், தன் சேய்களிடம் பேச, தகவல் பரிமாற, அந்த ஒருவனை நேர்வழிப்படுத்த மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், நேரம் இல்லை. ஏன் என்றால், வாழ்க்கையில், அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தின் திசை வேறு வேறு புறமாக இருப்பதால்தான். எவனொருவன், தன் மனதை கட்டுப்படுத்தி, ஒரே நேர் கோடில் கொண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது நம் புருவங்களுக்கிடையில் சுழுமுனையில் உள்ளது) நிறுத்துகிறானோ, அவனுக்கு அவர்கள் வாக்கு கேட்க்கும். அந்த வாக்கும் உண்மை என்று கண் முன் நடக்கும் பொழுது உணரலாம். நம்பிக்கை, நிறைய தனிமை தான் இதற்கு தேவை. தவம் செய்பவர்கள், காடு மலை, குகை என்று தனிமையான இடங்களை தேடிப்போவது, இதனால் தான். எத்தனையோ விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசலை நோக்கித்தான் அழைத்துச் செல்லும்" என்று நிறுத்தினார்.
"இந்த தசவாசலை நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்" என்றேன்.
"ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"
"ஆமாம்!"
"ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"
'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"
"எப்படி இருக்கும் என்று கூறேன்?"
"தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.
"உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த தசவாசல் வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும். அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு. இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும். இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் "மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி" என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார்.
"இந்த தசவாசலை நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்" என்றேன்.
"ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"
"ஆமாம்!"
"ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"
'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"
"எப்படி இருக்கும் என்று கூறேன்?"
"தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.
"உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த தசவாசல் வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும். அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு. இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும். இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் "மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி" என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார்.
No comments:
Post a Comment