Sunday, July 22, 2018

அகத்தீசா என்றால்

அகத்தீசா என்றால் :
புண்ணியவான்களுக்குத்தான் உண்மைப்பொருள் அறிந்தவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும், தன்னை நாட்டிற்கு அர்ப்பணிக்கக்கூ
டிய சாது சங்க தொடர்பு கிடைக்கும்.
பாவிகளுக்கு பொருள் பற்று உள்ளவனாகவும், காமுகனாகவும், ஜாதி, மத, துவேசம் உள்ளவனாகவும், யான் என்ற கர்வம் உள்ளவனாகவும், யாரேனும் இடரிப் பேசினால் கொலையும் செய்யக்கூடிய பாவிகளான மகாபாவிகளின் நட்பு அமையும். போலியான ஆன்மீகத்தில் உள்ளவன் பொருள் பற்று உள்ளவனாக இருப்பான். பொருள் பற்று உள்ளவன் நிச்சயம் காமுகனாக இருப்பான். அவன் நிச்சயம் ஆன்மீக துரோகி. அவனால் நாளுக்கு நாள் மூடத்தனம் நாட்டில் மிகுதியாகும், பருவமழை தவறும், இயற்கை சீற்றங்கள் உருவாகும். இயற்கை சீற்றங்களாலும் பருவமழை தவறுவதாலும் விளைச்சல் குன்றி விவசாயம் அழிந்துபோய் உணவிற்கே பஞ்சம் ஏற்பட்டு வறுமை நாடெங்கும் தாண்டவமாடும்.
மக்கள் வளம் குன்றினால் அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குன்றிவிடும். போலி ஆன்மீகவாதிகளால் அரசு பலமிழந்துவிடும் என்பதை அறிந்து அகத்தீசனை வணங்க வணங்க உண்மை ஆன்மீகம் வளர்ந்து போலி ஆன்மீகவாதிகள் மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு விலக்கப்படுவார்
கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முற்றுப்பெற்ற ஞானிகளை முன்னிறுத்தி ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைவனாக உள்ள ஞானியர் வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உண்மை ஆன்மீகம் பரவினால் நாடெங்கும் புண்ணியச் செயல்களும், ஞானியர் ஆசிகளும் வெகுவாக பெருகி இயற்கை சீராக இயங்கும், பருவமழை தவறாது, இயற்கை சீற்றங்கள் ஏற்படாது, தீடீரென ஏற்படும் பேரழிவுகள் ஏற்படாது, நல்லபடியாக விவசாயம் நல்ல விளைச்சலோடு நடைபெறும், மக்கள் நன்னெறி செல்வார்கள், மக்களிடத்து துவேசங்கள் குறைந்து காணப்படும், செல்வ வளம் பெருகும், விவசாயம் சிறக்கும், நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவும், அரசு செம்மையாக ஆட்சி புரியும், அரசிற்கு வருவாய் மிகுந்து காணப்படுவதினால் நலத்திட்டங்கள் ஏராளமாய் செயல்பட்டு நாடெங்கும் சுபிட்சநிலை பெருகி நாடே சொர்க்கம் போல் காட்சி தரும் என்பதை அறிந்து அகத்தீசனை ஒவ்வொரு தனி மனிதனும் வணங்க வணங்க அந்த நாடே சுபிட்சமாகும் என்பதை அறியலாம்.
-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments: