Saturday, July 14, 2018

அரங்கர் மகிமை

முருகா ! அரங்கா ! நன்றி ! அரங்கரின் ஆசி பெற்ற சேலம் தொண்டரின் பதிவு !!!!!! ஓம் அகத்தீசாய நம.....
" * * *அரங்கரின் மகிமை* * * "
இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் அந்த நொடிபொழுது முதல் பயபக்தியுடன் செல்வோம் தானே..
அன்றும் இரண்டு அன்பர்கள் அரங்கரை தரிசிக்க சென்றார்கள்....வாகனத்தை இயக்கிவந்த அன்பர் ஆசான் பெருமையை பேசிய படி வந்தவர் சட்டென அமைதியாக வந்துள்ளார்,..
அருகில் அமர்ந்து வந்த மற்றொரு நபர் ஏன் இவர் அமைதியாக வருகிறார் என குழப்பமாக இருந்தும் அரங்கரின் புகழ்மாலை கேட்டு கொண்டே செல்கிறார்கள்....அன்பர் ஏன் இந்த அமைதி என்ன காரணம் என வினவ!!??
அன்பரே, இதோ இந்த சாலையில் நடுவில் எத்தனை அழகாக மலர்கள் மலர்ந்து உள்ளதை பாருங்கள்
இவை அனைத்தும் " அரங்கரின் திருமலரடியை" சென்று அடைய வேண்டும் என மனதில் நினைத்து பூஜித்துகொண்டே செல்வது எனது வழக்கம் என கூறி இருக்கிறார்....
.....அட !!. என்னப்பா இப்படி ஒரு பூஜையா , இவ்வளவு எளிமையாக !!??? ஆசான் இதை ஏற்றுக்கொள்வாரா!!?? என மனதில் பல கேள்வியோடு இவரை பார்க்க...
குடிலும் வந்தது , ஆசானை தரிசிக்க சென்றார்கள்....
ஆசான் இருவரையும் பார்த்து சிரிப்புடன் , நாங்களும் அந்தரங்கத்தில் கூடை கூடையாக மலர்களை மலைபோல் குவித்து அகத்தீசருக்கு பூஜை செய்வோம் ப்பா என கூற!!! இருவரும் மெய்சிலிர்த்து ஆசான் திருவடிகளை வணங்கி ஆசி பெற்றோம் என்றனர்.........ஆம் உண்மை எப்போதும் எளிமையாக இருக்கும்!!!!!
தூய பக்தி என்பது இதுபோல தான், அரங்கா முருகா ....
நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க முடியாது என்று நினைத்த பல செயல்களை குருநாதரை சந்தித்த பிறகு மிகவும் எளிமையாக, நடக்கிறது என்பது அன்பர்கள் அனைவரும் உணர்ந்துதானே.....
குருவே வாழ்க வாழ்க...
திருவடிகள் சரணம் சரணம்.

No comments: