Wednesday, December 25, 2024
அகத்தியர் உத்தரவு❤️
சித்தன் அருள் - 1754 - அகத்தியப் பெருமானின் உத்தரவு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப் பெருமானின் ஜீவநாடியில் ஒரு தனிப்பட்ட விஷகயத்துக்காக உத்தரவு கேட்ட பொழுது பொதுவாக எல்லோரும் கடைபிடிக்க ஒரு உத்தரவை இட்டுள்ளார். அந்த உத்தரவை எளிதாக கீழே விளக்குகிறேன்.
1 இந்த மார்கழி மாதத்தில் அனைவரும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒருமுறையாவது வீட்டில் கூற வேண்டும்! கூற முடியாதவர்கள்,
2. ஒலியாக ஒலிக்கவிட்டு கேட்க வேண்டும். அதுவும் முடியாதவர்கள்
3. ஏதேனும் ஒரு பெருமாள் கோவிலுக்கு தினமும் சென்று முப்பது நிமிடங்கள் த்யானத்தில் அமர வேண்ண்டும்.
மேலும் தை பிறந்த பின், ஒருநாள் ஆணும், பெண்ணும் உடுத்த உடைகளையும், உணவையும் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்திட வேண்டும்!
இவ்வாறு செய்திட, பெருமாள் மனம் மகிழ்ந்து, ஒவ்வொருவரின் கரை ஏறாத பித்ரு ஆத்மாக்களுக்கு மோக்ஷத்திற்கான வழியை கொடுப்பார். ஒவ்வொருவரின் கர்மாவிலும் சேர்ந்திருக்கும் பித்ரு சாப/தோஷங்களை இச்செயல் கரைக்கும். வாழ்வு வளமாகும்.
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment