Thursday, January 30, 2025
மௌனி அமாவாசை வாக்கு ❤️
Thursday, 30 January 2025
சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு!
29/1/2025 மௌனி அமாவாசை அன்று கங்கை யமுனை சரஸ்வதி திருவேணி சங்கமம் தீர்த்தக்கரையில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு மற்றும் உத்தரவு.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அனைத்து சித்தர்களும் இங்கு வந்தோம் அப்பா நல்விதமாகவே அப்பனே.
ஆனாலும் பின் ஏக்கங்கள் அனைவருக்கும் இருக்குமப்பா !!
(கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் வந்து கலந்து கொண்டு நீராட ஏக்கங்கள்)
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இல்லத்திலே அப்பனே பின் நல் முறையாகவே சில மந்திரங்களைக் கூட நிச்சயம் தெரியுமப்பா!!! உண்மை பக்தி இருந்தால் அப்பனே அவர்களுக்கே சில மந்திரங்கள் தெரியுமப்பா!!!
(குருநாதர் பொது வாக்குகளில் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா பாலாம்பிகை மந்திரம் ஆன ஓம் ஐம் க்லீம் சௌம்... என பல மந்திரங்களையும் பொதுவாக்குகளிலும் தனிநபர் வாக்குகளிலும் பல மந்திரங்களை தினசரி செப்பி வர பல மந்திரங்களை உபதேசம் செய்திருக்கின்றார்...)
அப்பனே ஒரு ஐந்து நிமிடம் எங்கு இருந்தாலும் அப்பனே பின் அவ் நீரில் அப்பனே இரு கைகளையும் வைத்து ஈசனையும் கூட அனைத்து தேவர்களையும் கூட இந்திரனையும் கூட சித்தர்களையும் கூட ஞானிகளையும் கூட ரிஷிகளையும் கூட குருமார்களையும் கூட காசி சிவனையும் கூட (காசிநாதன் விஸ்வநாதன்) கூட பின் அறிந்தும் அனைத்து பஞ்சபூத ஸ்தலங்களை கூட நினைத்து..(சிதம்பரம் காஞ்சி ஏகாம்பரம் திருவண்ணாமலை திருக்காளஹஸ்தி திருவானைக்காவல்)
ஆறுபடை வீடுகளையும் கூட
(திருப்பரங்குன்றம் திருத்தணி ஆவினன்குடி சுவாமிமலை பழமுதிர்ச்சோலை திருச்செந்தூர்... இன்னும் 7ம் படைவீடு மருதமலை ஒன்பதாம் படைவீடு ஓதிமலை) நினைத்து வணங்கி
அனைத்து பின் நீரையும் கூட...
(அனைத்து புனித நதிகளையும் அதாவது கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி தாமிரபரணி கோதாவரி இவ் நதிகளின் பெயரை நினைத்து)
பின் இங்கு வரவேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து அப்பனே... இவை தன் அப்பனே நிச்சயம்!!
ஆனாலும்... பின் முட்டாள்தனமாகவே கேட்பானப்பா!!! எப்படி இவையெல்லாம் சாத்தியம்??? என்று!!
( சில பேர்கள்...தெய்வ வாக்கான குருநாதரின் வாக்குகளை உணராமல்)
ஆனாலும் அப்பனே எண்ண அலைகள் இருக்கின்றதே!!!
அதற்கு சக்திகள் அதிகமப்பா!!!
அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!!
"""நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை!!!
அது போல தான் அப்பனே!! நீங்கள் நினைத்தாலே!! உண்மையாக நினைத்தாலே...அப்பனே பரிபூரணமாக யாங்கள் வந்து அப்பனே பின் அதில் கூட அப்பனே நீரையும் கூட பின் எவ்வாறாக மாற்றுவோம் என்பதெல்லாம்!!
அதனால் அப்பனே பின் நிச்சயம் இல்லத்திலே...நீராடி அப்பனே நிச்சயம் சிவராத்திரி வரை அப்பனே நல்லவிதமாக அப்பனே!!
இதனால் அப்பனே சில தொந்தரவுகள் அது மட்டும் இல்லாமல் பின் அப்பனே!!
பின் நீரில் கூட!!
துளசி இலைகளையும் கூட!!
அப்பனே பின் வேம்பு (வேப்பிலை) இலைகளையும் கூட!! அது மட்டும் இல்லாமல் வில்வ இலைகளையும் கூட... அப்பனே பரிசுத்த பின் உப்பையும் கூட... அப்பனே மஞ்சளையும் இட்டு அப்பனே இன்னும் சில சில விசேஷ மூலிகைகளும் இருக்கின்றதப்பா..அவை தன் என் பக்தர்களுக்கு தெரியுமப்பா!!! நிச்சயம் அப்பனே அவை பயன்படுத்தி அப்பனே நிச்சயம் இல்லத்திலே நிச்சயம் அப்பனே!!!
(கும்பமேளாவில் வந்து திரிவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்கள்!! பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அவரவர் தமது வீட்டில் சிவராத்திரி வரையும்
நீராடும் பொழுது அந்த நீரில்
துளசி வில்வம் வேப்பிலை மஞ்சள் உப்பு ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இன்னும் மூலிகைகள் கலந்து
தமது இரு கைகளை வைத்து வணங்கி அனைத்து தெய்வங்களையும் நினைத்து தேவாதி தேவர்களையும் நினைத்து சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் குருமார்கள் அனைவரையும் நினைத்து வணங்கி!!!
பஞ்சபூத திருத்தலங்கள் அறுபடை வீடுகள் இன்னும் காசியையும் நினைத்து
அந்த நீரில் புனித புண்ணிய நதிகளை நினைத்து எல்லா நதிகளும் நாங்கள் நீராடும் நேரில் ஆஹாவனம் ஆக வேண்டும்.. என்று மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால்... அந்த வேண்டுதல் எண்ணங்கள் அதற்கு சக்திகள் அதிகம்.. இப்படி எண்ண அலைகளோடு வேண்டிக் கொண்டு சிவராத்திரி வரை பக்தர்கள் நீராடி வரவேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருக்கின்றார்)
அதாவது இன்னும் இறைவன் யார் என்று அப்பனே பின் அறிந்து கொள்ள அப்பனே இவ் உலகத்தில் ஆளே இல்லையப்பா!!!
அப்படி அறிந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றுக்குமே ஆசைப்பட மாட்டார்களப்பா!!! அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வளவு தான் வாழ்க்கை... இதுதானா இவ்வளவு தானா என்று போய் சென்று கொண்டே இருப்பான்..அப்பனே
இறைவனை அப்பனே யாருமே உணரவில்லையப்பா!!
ஆனால் அப்பனே மனிதனோ வேஷங்கள் போட்டு யான் பெரிய ஆள்!! யான் பெரியவன் என்றெல்லாம் அப்பனே சுற்றி கொண்டிருக்கின்றான்.
ஆனால் உண்மை இறைவனை உணர்ந்தவன் அப்பனே நிச்சயம் பின் எதற்கும் பின் அதாவது பஞ்சம் பிழைப்பானப்பா!! நாடோடியாக செல்வானப்பா!!! இது தான் அப்பனே!!
அதனால்தான் அப்பனே என் பக்தர்களை நிச்சயம் பக்குவப்படுத்தி அப்பனே நல்முறையாக்கி அப்பனே சில பேர்களாவது தேர்ந்தெடுத்து பின் அப்பனே பல பேர்களுக்கு நன்மைகள் செய்யும்படியாக அப்பனே யாங்கள் சித்தர்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே.
அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஒருவர் போதும் என்பேன் அப்பனே...அவ் ஒருவனை வைத்து அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வுலகத்தையே மாற்றலாம் என்பேன் அப்பனே...
அதனால்தான் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே கொடுப்பதற்கு யாங்கள் தயார் அப்பனே... நீங்கள் வாங்குவதற்கு தயாரா???
ஆனால் இதிலும் கேட்பானப்பா!!!! பின் யாங்கள் பின் வாங்க தயார்.
ஆனால் நீங்கள் தான் கொடுப்பதில்லை என்று!!
ஏனென்றால் மனிதன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்பேன் அப்பனே.
ஆனால் பின் இவ்வாறு கேட்பவன் நிச்சயம் பாவத்தில்!.
ஆனாலும் அப்பனே இதற்கெல்லாம் நிச்சயம்.. வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே... ஒருவன் குறை கூறிக் கொண்டிருக்கின்றானே !!!
(சித்தன் அருள் வலைத்தளத்தில் வந்து குருநாதர் தரும் வாக்குகளை அப்படி இப்படி என்று கருத்துக்களை பதிவு செய்து குறை கூறிக் கொண்டிருக்கும் நபருக்கு)
அவனை ஊரார் என்னவென்று சொல்கின்றார்கள் என்றால்.. நிச்சயம் இறைவனை வணங்குகின்றான் இவன்.
நிச்சயம் இறைவன் சரியானவன் தான்!
நிச்சயம் பின் இவன் என்னென்ன???!!.........
அதாவது இவனும் பிழைக்க மாட்டான்!!.... மற்றவனையும் பிழைக்க வைக்க மாட்டான்..
சரியான தண்டனைகள் தான் நிச்சயம் இவந்தனுக்கு கொடுக்கின்றான் என்று ஊரார்கள் அனைவரும் பேசுகின்றனர்.
ஆனால் இவனோ??? யான் பக்தன் பக்தன் என்று!!
ஆனால் நிச்சயம் பல பேர்.. அப்படி!!!
ஆனால் ஒருவன் இப்படி??...
யாருக்கு கொடுப்பான் இறைவன்???
அப்பப்பா!!!.... இதுதான் இன்றைய காலகட்டம் என்பேன் அப்பனே!!
இதனால் யான் சொல்லியவற்றை அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் அதாவது பின் செய்யப் போவதில்லை.
புண்ணியங்கள் இருந்தால் தான் செய்வான்.
வரும் காலத்திற்கு அப்பனே உபயோகமாக படும் என்பேன் அப்பனே இவ் வாக்குகள் என்பேன் அப்பனே.
(குருநாதருடைய வாக்குகளை தேடி தேடி பார்ப்பார்கள் அப்பா என்று ஏற்கனவே குருநாதர் வாக்குகள் கூறி இருக்கிறார்கள் குருநாதர் தரும் வாக்குகள் எக்காலத்திற்கும் பொருந்தும்... குருநாதர் திருவாய் மலர்ந்து வருங்கால சந்ததியினர் பிள்ளைகள் எல்லாரும் இதை பயன்படுத்தி நன்றாக வாழ்வார்கள் என்று ஆசிகள் தந்து வாக்குகள் தந்திருக்கின்றார் இதை பக்தர்கள் அனைவரும் கடைப்பிடித்து அனைவருக்கும் தெரியப்படுத்தி குருநாதரின் கருணை பெற செய்திடல் வேண்டும் புண்ணியம் இருப்பவர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்றும் குருநாதர் கூறி இருக்கின்றார் புண்ணியத்துடன் நம்பிக்கை வைத்து நாம் நலம் பெற குருநாதர் கூறிய வழிமுறைகளை பின்பற்றுவோம்)
அதனால் தான் அப்பனே பின் யாகங்கள் எது தடுத்தாலும்.. எவர் தடுத்தாலும் ஏனென்றால்... மனிதனுக்கு புத்திகள் இல்லை என்பேன் அப்பனே.
அறிந்தும் கூட!!..
இதனால் தான் அப்பனே நிச்சயம் (மனிதர்களின் பிரச்சாரங்கள்)அனைத்தையும் பொய்யாக்குவோம் வரும் காலத்தில் என்பேன் அப்பனே.
இவ்வுலகத்திற்கு எவை நல்லதோ அவை நிச்சயம் யாங்கள் செய்வோம் என்போம் அப்பனே.
பின் வரும் வரும் சந்ததியினர்களுக்கு...கூட அழகாக இன்னும் இதை படித்து அப்பனே பயன்படுத்தி அப்பனே நல் முறைகளாகி நல் ஒழுக்கங்களாகவே வாழ்வார்கள் என்பேன் அப்பனே பிள்ளைகள் என்பேன் அப்பனே!
அழகாக ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Wednesday, January 29, 2025
அன்புடன் அகத்தியர்
Tuesday, 28 January 2025
சித்தன் அருள் - 1788 - அன்புடன் அகத்தியர் - கதிரை மலை. இலங்கை!
17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: கதிரை மலை. இலங்கை.
வள்ளி திருவிளையாடல் படலம்!!!
மயில் மீது அழகாக!!!! அழகாக!!!! பறந்து செல்கின்ற முருகா!!!!!
உந்தனையே மனதில் பின் மீண்டும் நினைத்து... உரைப்பேன் அகத்தியனே!!!
கந்தனே!!!!
கந்தனே அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவதை எல்லாம் இப்பொழுது எடுத்துரைக்க போகின்றேன்!!!
மீண்டும் அங்கிருந்து பின் கந்தனும் கூட!!!!.
(கதிர்காமத்தில் இருந்து)
வேலவன்
அகத்தியனே!! நிச்சயம் யாம் செல்வோம்!!! பின் இங்கிருந்து நிச்சயம் இவ் மலை தெரிகின்றதே இங்கு செல்வோம்!!!..
.(கதிரை மலைக்கு)
பின் அங்கு இன்னும் பல வடிவங்களில் கூட... என்னென்ன இருக்கின்றதோ?? அவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட... ஆனாலும் பின் பார்த்து விடுவோம் வா!! என்று நிச்சயம்.
யானும் கூட!!!
அகத்திய பெருமான்
முருகா!!! இவ்வாறெல்லாம் பின்... அறிந்தும் இதனை என்று நினைக்க நிச்சயம்..
எதற்காக?? என்னை அனுப்பினார்?? உன் தந்தையான ஈசன்!!
ஆனாலும் இப்பொழுது இப்படி எல்லாம் எனை அழைத்து நிச்சயம்!!!.......
அங்கு (பாரத தேசத்தில் இருக்கும் கைலாயத்திற்கு) சென்றாலும் உன் தந்தை நிச்சயம் விடப்போவதில்லை!!!... அதாவது நீயும் இங்கு என்னை விடப்போவதில்லை!!!... அதனால் என்ன செய்வது?? சரி!!! உன் பின்னே வருகின்றேன்!! என்று!!
வேலவன்.
அகத்தியரே நிச்சயம்... நீயாவது வாரும் !! என் பின்னே!!!
பார்த்துக் கொள்வோம் என்று!!
அகத்திய பெருமான்!
ஆனாலும் நிச்சயம் இப்பொழுதே உன் தந்தை அறிந்திருப்பார்!!!... அனைத்திற்கும் காரணம் அகத்தியன் தான் என்று!!
வேலவன்
பின் நினைக்கட்டும்!! நினைக்கட்டும்!! அகத்தியரே!!.. நிச்சயம் அவ்வாறு நினைத்தால் என்ன????
யான் இருக்கின்றேன் அல்லவா!!!!
அகத்திய பெருமான்
நிச்சயம் அறிந்தும் கூட சரி!!
பின் தலையை இப்படி சாய்ப்பதா?? அப்படி சாய்ப்பதா??....
(சரி என்று சொல்வதா வேண்டாம் என்று சொல்வதா)
என்று தெரியாமல்.. பின் அதாவது நிச்சயம் உன் தந்தையைப் பற்றியும் தெரியும்...
பின் யான் உடனடியாக சென்று நிச்சயம் பின் முருகன் இப்படித்தான் (அடம்) இருக்கின்றான் என்று!! மன்னித்து விடுங்கள் ஈசனாரே!! என்று சொல்லிவிட்டால்!!!....
சரி அகத்தியனே!! என்று மன்னித்து விட்டு விடுவான்!! அவ்வளவுதான்!
ஆனாலும் இங்கு நாம் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தையும் உன் தந்தை கேட்டுக் கொண்டே இருக்கின்றான்.
சரி பரவாயில்லை!!!
வேலவன்.
அகத்தியரே வாரும்!!! வாரும்!!!
அறிந்தும் எதை என்று கூட இவை ஆனாலும் ஈசனாருக்கும் இவை தெரிந்தது!!
ஆனாலும் மீண்டும் பார்வதி தேவியிடம் ஈசன்!!
பார்வதி தேவியே!!!.. நிச்சயம்தனை கூட பின் அதாவது பின் வரப்போவதில்லை!! கந்தன்!
எப்படியாவது நிச்சயம் என்னவென்று அதாவது.. ஒரு பெண்ணை அனுப்பினால் என்ன?!! என்று யோசனை!! அதனால் ஒரு பெண்ணை அனுப்புகின்றேன்!! நிச்சயம் அதாவது அறிந்தும் கூட!! எதை என்று அறிய!!
இங்கெல்லாம் அதாவது அப்போதெல்லாம் அதாவது பின் உன் குகன் கூட நிச்சயம் அதாவது ஒன்றும் இல்லாமல் பின் இருக்கும் பெண்களை தான் பிடிக்கும்.
(ஏழை எளிய எதுவும் இல்லாமல் இருக்கும் பெண்களை முருகனுக்கு பிடிக்கும்)
ஆனாலும் அறிந்தும் கூட அதனால்... பின் ஒன்றும் இல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து அனுப்புவோம் என்று.
இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட... ஒன்றுமே இல்லாமல்... உணவிற்கு கூட வழி இல்லாமல் இருக்கும் பின் அறிந்தும் கூட பின் அழகாகவே பின் அப்படியே படைத்து நிச்சயம் அவள் தனக்கு... இச்சா சக்தியும், ஞான சக்தியும் அனைத்து சக்திகளையும் இட்டு நிச்சயம் அனைத்தும்
புரிந்து கொள்ளும் வல்லமையும் கொடுத்து நிச்சயம் பின் இங்கு வள்ளியை அனுப்பினார்.
(கதிர்காமத்திலும் கதிரை மலையிலும் வேடுவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களும் வழிபாடு செய்து வருகின்றார்கள். இன்றளவும் கூட அவர்கள் இனம் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இலங்கையில்.
காட்டில் வாழும் அவர்கள் இனத்தில் இருந்து ஈசன் வள்ளி தேவியை அனுப்பினார்)
மலையில் தனியாக நிற்கும் அப் பெண்ணை பார்த்து முருகன்!!!
வேலவன்
பின் அகத்தியரே!! அகத்தியரே!! அறிந்தும் கூட பின் அழகாக ஒரு பெண் தோன்றுகின்றாள் இங்கே! பின் எதனால் என்று!!
ஆனாலும் யான் அகத்தியன் உணர்ந்து கொண்டேன்.
அகத்திய பெருமான்
நிச்சயம் முருகா!!! அவை எவை என்று கூட யாருமே இல்லை!!! ஆனாலும் ஒன்றும் இல்லாமல் தான் கீழே இருக்கின்றார்கள்!!(வேடுவர்கள்)
ஆனாலும் நிச்சயமாய் பின் அறிந்தும் கூட...இவள் மட்டும் இங்கு அழகாக வந்திருக்கின்றாளே!! என்றெல்லாம்!!
ஆனாலும் பின் என் மனது ஆனாலும் அறிந்தது இதெல்லாம் இதன் காரணம் ஈசனாரே என்று!!
யான் முருகனைப் பார்த்து நிச்சயம் முருகா!!! எதற்காக இப்பெண் இங்கு இருக்கின்றாள்?? என்று நீயே கேள் என்று!!!
நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது அப் பெண்ணிடம் நேராகச் சென்று கந்தன்.. அப் பெண்ணை பார்த்து...
பெண்ணே யார் நீ??அழகாக இருக்கின்றாய்!!! எதற்காக? நீ இங்கு வந்தாய்??.. பின் இதெல்லாம் இங்கு அழியப் போகின்றது... இங்கிருந்து ஓடி விடு!! என்று!!
(வள்ளி) அப் பெண்.
யான் இங்கிருந்து செல்ல மாட்டேன்!!! உந்தனை விரும்புகின்றேன் என்று அப் பெண்மணியும் கூட!!
வேலவன்.
என்ன?????
நிச்சயம் நீ என்னை விரும்புகின்றாயா??! அப்படி என்ன???... எப்படி?? அறிந்தும் எதை என்று கூட!!
பின் விரும்புகின்றாயா???? எதற்கு விரும்புகின்றாய்???
(வள்ளி) பெண்மணி
நிச்சயம் உந்தனை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்று.
நிச்சயம் முருகன் பின் ஓடிவந்து அகத்தியரே!! அகத்தியரே!!
என்ன இது????!
நாம் தன் அதாவது உலகத்தை காக்க நின்றோம்... ஆனாலும் இப் பெண்மணியோ என்னை விரும்புகின்றேன் என்று இன்னும் ஏதேதோ பின் எடுத்துரைக்கின்றாள்... அதாவது பின் என்னை திருமணம் கொள்கின்றேன் என்று!!!
அகத்திய பெருமான்!!!
அப்பா!!!!!...... எந்தனுக்கு ஏதும் தெரியாது!!!! என்னை விட்டு விடு!!!
பின் நீ!!! ஆவது!! உன் தந்தை...ஆவது!!
என்றெல்லாம் !!
(நீயாச்சு உன் தந்தையாச்சு)
வேலவன்
பின் தந்தைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று!!
ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் யான் நினைத்தேன்... ஆனாலும் பின் அனைத்தையும் நடத்தி வைப்பவனும் கூட பின் ஈசனார் என்று..
ஆனாலும் எதை என்று அறிய அறிய...
அங்கிருந்தே. ஈசன். அகத்தியனே!! ஏதாவது பின் சொதப்பி விடாதே... என்ற சப்தமும் எந்தனுக்கு கேட்டது!!
பின் ஆனாலும் யான் அமைதியுற்றேன்.
(கைலாய மலையில் இருந்து அகத்தியருக்கு மட்டும் ரகசியமாக ஈசன் காரியத்தை கெடுத்து விட வேண்டாம் என்று கட்டளையை கொடுத்து விட்டார்)
அகத்திய பெருமான்
நிச்சயம்.... முருகா உன்னுடைய இஷ்டம்!!! அறிந்தும் கூட என்றெல்லாம்!! நிச்சயம் அப்பெண்மணியும் கூட முருகனின் கால்களை கூட கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
நிச்சயம் பின் கட்டிக் கொள்! என்னை என்று!
வேலவன்.
நிச்சயம் அப்படி எல்லாம் பின் அறிந்தும் நிச்சயம் பின் எதை என்று கூட முடியாது..
நிச்சயம் நீ எங்கிருந்தாயோ? நிச்சயம் உன் சொந்த பந்தங்கள் யார் ? என்ன? என்றெல்லாம் நிச்சயம்!
(வள்ளி) பெண்மணி
இதோ என் சொந்த பந்தங்கள் எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட அனைவரையும் பின் அதாவது பின் காட்டினாள்.
வேலவன்
ஆனாலும் இவர்கள்தான் உன் சொந்த பந்தங்களா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே???(காட்டில் வாழும் வேடுவர்கள்)
நீ மட்டும் எப்படி இப்படி அழகாக இருக்கின்றாயே?? என்ன? எப்படி? என்று!!!
(வள்ளி) பெண்மணி .
ஆனாலும் என்னை இறைவன் பின் படைத்து விட்டான் இப்படி.. ஆனாலும் எனக்கும் ( திரு)மணம் கூடி வரவில்லை... யாரும் என்னை (திரு)மணம் முடிக்க வரவில்லை!!!
நீயும் பின் இவ் மலையில் சென்று கொண்டிருந்தாய்... உன்னை யான் பார்த்தேன் விரும்பி விட்டேன் என்று ஏதேதோ பேசினாள்.
அகத்திய பெருமான்.. தற்போது நமக்கு
அப்பனே இதன் தாக்கத்தையும் கூட வரும் வரும் வாக்கியத்தில் சொல்கின்றேன் அப்பனே.. நிச்சயம் ஏன்? எதற்காக? இவள் தன் தேடி வந்தாள்?? என்றெல்லாம் அப்பனே பின்...
இச்சா சக்தியும்!! கிரியா சக்தியும்!! இன்னும் அப்பனே பின் அனைத்தும் அனைத்து அஷ்ட சக்திகளும் இணைந்தது தான்..
அப்பனே பின் தெய்வானையாகவே!! அப்பனே பின் வள்ளியாகவே!!!
அறிந்தும் கூட இவையெல்லாம் பின் தத்துவங்களாக வரும் காலத்தில் பின் யான் உரைப்பேன் என்பேன் அப்பனே..
நிச்சயம் பின் அதாவது பின் வள்ளியும் கூட அறிந்தும்.. பின் நிச்சயம் தன்னில் கூட..
வள்ளி தேவி!!
அதாவது என்னை திருமணம் செய்து கொள்கின்றாயா என்ன? என்று!!
வேலவன்
நிச்சயம் வேண்டாம் பின் திருமணங்கள் வேண்டாம் என்று!!!
ஆனாலும் பின் அகத்தியனே... பின் என்ன?? இது??? தொந்தரவுகள்!!... இப்படி ஆயிற்றே!!!
நாம் தன் எதற்காக?? வந்தோம்??
ஆனால் இப்படி இப்பெண்மணியே நம்மை விடவில்லை என்று..
நிச்சயம் பின் அகத்தியனே!!! இவள்தனை பின் அழகாகவே.. இவளிடத்தில் சென்று விட்டு விடு!! நிச்சயம் அறிந்தும் என்றெல்லாம்...
இவள்தன் ஒருவளாக அதாவது தனியாக இருக்கின்றாள் அல்லவா!!! நிச்சயம் இவள் ஊரில் அதாவது எந்தனுக்கு இவள் ஊரை காட்டினாள். யான் இங்கிருந்தே பார்த்துவிட்டேன்... நீ இவளை பின் பத்திரமாக இவள் ஊரில் விட்டு விடு என்று.
அகத்திய பெருமான்..
அறிந்தும் யானும் சென்று நிச்சயம் பின் ஆனாலும்...
வள்ளியோ!!!!? அறிந்தும் கூட பின்...
வள்ளி தேவி
நிச்சயம் முனிவரே!!! அனைத்தும் நீங்கள் செய்கின்றீர்கள் பின் அதாவது யான் மீண்டும் (கூட்டத்தில்) சென்றால்... என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் அவர்கள்.
(காட்டில் வாழும் வேடுவர் கூட்டம் கூட்டத்திலிருந்து தனியாக சென்ற ஒருவரை குறிப்பாக பெண்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதி முறை அதாவது ஒரு நாள் அல்லது ஒரு இரவு கூட்டத்திலிருந்து விலகி விட்டு சென்று விட்டால் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் இன்றளவும் நாடோடிகளாக இருக்கும் சில குழுக்களிலும் வனவாசிகளாக வாழும் இனங்களிடமும் இந்த நடைமுறை இப்போதும் இருக்கின்றது)
நிச்சயம் நீங்கள் ஏதாவது ஒன்றை செய்வீர்களாக என்று நிச்சயம்!!
அகத்தியர் பெருமான்
நிச்சயம் நீ செல் தாயே!! யானும் உன்னுடன் வருகின்றேன் என்று பின் நிச்சயம் அங்கு அழைத்துச் சென்று!!
கூட்டி வந்தாள்..அக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு..
பின் அவர்களோ!? அதாவது அக் கூட்டத்தினர்... அறிந்தும் கூட இவள் வேண்டாம்!!! எங்களை விட்டு விட்டு இவள் எங்கோ சென்று விட்டாள்!!! நிச்சயம் இவள் எங்களுக்கு திரும்பவும் வேண்டாம் என்று அனைவரும்!! நிச்சயம் பின் எதை எதையோ சொல்லி ஏதேதோ செய்து என்றெல்லாம் நிச்சயம் இவள்தனை விரட்டினார்கள்!
வள்ளி தேவி.
நிச்சயம் பார்த்தாயா முனிவரே!!!... அங்கு அவர்களிடம் சேர அவர்களும் விடவில்லை!!
இங்கும்...என்னை விடவில்லை!!! ஏற்றுக்கொள்ளவில்லை!!..
இனி யான் சாகத் தான் போக வேண்டும் என்றெல்லாம்.
நிச்சயம் மீண்டும் பின் முருகனிடத்தில்.(அகத்தியரும் வள்ளியும் முருகன் இருக்கும் இடத்திற்கு)
பின் முருகன் என்னை பார்த்து!!
வேலவன்!
அகத்தியரே! அகத்தியரே! இது என்ன விளையாட்டு!
யான் உன்னிடத்தில் என்ன சொன்னேன்???... நீ என்ன? பின் அறிந்தும் கூட என்ன செய்கின்றீர்கள்? என்று!!!
அகத்திய பெருமான்.
முருகா!!!.... என்னை சரியாக விட்டு விடுங்கள்!!!...
பின் மகனும் கூட! தந்தையும் கூட...! சேர்ந்திட்டு!!!!.........
நிச்சயம்.. பின் இவ்வாறு அவ்வாறு.. பின் இவ்வாறு இல்லாமல் பின் சேர்ந்திட்டு.. இப்படி என்னை செய்கின்றீர்களே எப்படி..? என்றெல்லாம்!!
(தந்தையான ஈசனும் மகனான முருகனும் சேர்ந்து என்னை ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று குருநாதர்)
அப்பனே யான் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றேன்... நீயும் நிச்சயம் இப் பெண்ணும் கூட ஏதாவது பேசி நிச்சயம்...(ஒரு முடிவுக்கு வாருங்கள்)
வேலவன்
நிச்சயம் பின் பெண்ணே!! உன்னை ஏன் உன் கூட்டத்தில் சேர்க்கவில்லை??
வள்ளி தேவி
நிச்சயம் பின் அதாவது உலகத்தை காக்க வந்தவன் நீ அல்லவா... நிச்சயம் ஏன் என்று உந்தனக்கு தெரியாதா???? என்றெல்லாம் நிச்சயம்!!
ஒரு பெண் பின் அதாவது ஒரு இரவு அதாவது கூட்டத்தில் இருந்து விலகி ஓரிடத்தில் சென்றுவிட்டால் நிச்சயம் அவர்களை மீண்டும் நிச்சயம் பின் சேர்க்கப் போவது இல்லை என்னை சேர்க்கவும் மாட்டார்கள் நிச்சயம் ஏற்கப் போவதுமில்லை... யான் நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட.
இதனால் இதனால் அறிந்தும் இதை தன் புரியாமல் கூட நிச்சயம் அதனால் நீ தான் என்னை நிச்சயம் பின் அறிந்தும் கூட திருமணம் செய்ய வேண்டும்.
நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும்.
வேலவன்.
அய்யய்யோ!!!..... அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொண்டால்....!?!?!! என் தந்தை இருக்கின்றானே... நிச்சயம் கோபம் கொள்வான்!!
பின் அதாவது நீ ஏதோ ஒன்றை வீராப்பாக பேசிவிட்டு உலகத்தை காப்பதாக சொன்னாயே!!! இங்கேயே (இலங்கை கதிர்காமத்திலே) இருக்கின்றேன்!!
நீங்கள் செல்லுங்கள் என்று சொன்னாயே!!!
இப்போது ஒரு பெண்ணை வந்து பின் அழைத்து வந்திருக்கின்றாயே என்று.. நிச்சயம் என் தந்தை கோபம் கொள்வான்.
அகத்தியர் பெருமான் நமக்கு தற்போது உரைக்கும் வாக்கு
ஆனாலும் இதுவும் ஈசன் செயலே !! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே!!! இவையெல்லாம் பின் நிச்சயம் புரியாதப்பா!!
பின் எடுத்துரைத்தால் தான் பின் புரியுமப்பா!!!... போகப் போக பின் ரகசியங்களை எல்லாம் சொல்வேன் என் பக்தர்களுக்கு அப்பனே.
தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வெற்றி உண்டு... வெற்றிகளோடு வாழலாம் என்பேன் அப்பனே... அனைத்தும் அப்பனே பின் அதாவது நீங்களே அன்பு கருணை அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழலாம்.
அதற்காகத்தான் அப்பனே பன்மடங்கு அப்பனே பின் உங்களை உயர வைக்கத்தான்.. பின் யாங்கள் யுகங்கள் யுகங்களாக அப்பனே வந்து தெளிவு படுத்துகின்றோம் அப்பனே.
அப்பனே தெளிவு பெறாமல் வாழ்ந்து வந்தாலும் நிச்சயம் அப்பனே... கலியுகத்தில் நன்றாக வாழ முடியாதப்பா!! கஷ்டங்கள் அப்பனே இன்னும் துன்பங்கள் ஏற்பட்டு அப்பனே பிரிவு நிலைகள் ஏற்பட்டு அப்பனே நிச்சயம் பின் உங்களை சார்ந்தவர்களும் அழிவு நிலைக்கு தான் செல்வீர்கள் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே அறிந்தும் கூட இதனால் நிச்சயம் பின்.. கந்தனும் கூட!!
வேலவன்.
பின் அகத்தியரே!! என்ன இது? ஏதோ ஒரு விஷயத்திற்காக நாம் வந்தோம்!!
ஆனாலும் கடைசியாக இப்படி இப்பொழுது சிக்கிக் கொண்டோமே என்றெல்லாம்..
நிச்சயம் யான் அகத்தியனும் கூட.. நிச்சயம்.. பின் அறிந்தும் கூட பின்..
அகத்தியர் பெருமான்.
குகனே!!! பின் (திருமணம்) முடித்துக் கொள்!! என்ன!!! அப் பெண்ணை யாரும் காப்பாற்றப் போவதில்லை..
பின் நீதான் இவ்வுலகத்தை காப்பாற்றுவேன் என்று சொன்னாயே.... இப்பொழுது இந்தப் பெண்ணை காப்பாற்று.. இப்போது நீ இந்த பெண்ணை திருமணம் செய்து தான் ஆக வேண்டும்...
அப்படிச் சென்றாலும் அவர்களும் விட மாட்டார்கள்.(கூட்டத்தில் சேர்க்க மறுப்பு)
. இப்படி சென்றாலும் நீயும் ஏற்க மறுக்கின்றாய்!!!
இப் பெண் எங்கு செல்லும்??? என்று!!
ஆனாலும்.. பின் அறிந்தும் கூட
வேலவன்.
அகத்தியரே... நிச்சயம் பின் எப்படி ??என்று கூட!!
இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய ஆனாலும் பக்குவமாக எடுத்துரைத்து பின் பேசினான் வள்ளியோடு.
வேலவன் வள்ளியுடன்
நிச்சயம் எனக்கு இவ் ஆசைகள் எல்லாம் இல்லை!! நிச்சயம் ஏதோ உனை யான் பார்த்தது கூட இல்லை!!!
என்னை விரும்புகின்றாய் திருமணம் செய்து கொள்கின்றாய் என்று சொல்கின்றாய்!!!
நிச்சயம் யான் இவ்வுலகத்தை காக்க வேண்டும் அவ்வளவுதான் என்று..
வள்ளி
நிச்சயம் உன் மேல் அன்பு கொண்டு உள்ளேன்!! நிச்சயம் பின் கந்தா!!! நிச்சயம் அதாவது உன் பக்கத்திலே இருக்கின்றேனே!!! (உன் பக்கத்தில் மட்டும் இருந்து கொள்கின்றேன்)
நிச்சயம் எனை நீ விரும்பவும் வேண்டாம் திருமணமும் செய்யவும் கொள்ள வேண்டாம்!!... நிச்சயம் யான்!! எந்தனுக்கு உன் பக்கத்தில் இருக்கும் பாக்கியத்தை கொடு என்று!!
வேலவன் (தனியாக ஓரமாக அமர்ந்திருந்த அகத்தியரை அழைத்து)
பின் அகத்தியரே நிச்சயம் வாரும்!!! நிச்சயம் பின் இவ்வாறு அதாவது இப்பொழுது ஒத்துக் கொண்டாள். பின் வேண்டாம் என்று திருமணமும் செய்யவில்லை என்று நிச்சயம் இவள் என் பக்கத்தில் நின்றாலே போதும் என்று சொல்கின்றாள்.. என்று
அகத்தியப் பெருமான்
நிச்சயம் பின் அடடா !! பின் அதாவது முருகா!! யான்
கூட சென்று விடுவேன்...
நிச்சயம் அதாவது உந்தனுக்கு வழி காட்டியாக பின் இருக்கலாமே இப் பெண்மணியும் கூட என்று!!
(முருகனிடம் குருநாதர் அதாவது எப்பொழுதும் நான் உன்னுடன் இருந்து கொண்டே இருக்க முடியாது யானும் அங்கு இங்கு என்று சென்று விடுவேன்! ஆனால் இந்த பெண்மணி உன்னுடன் இருந்தால் உனக்கு வழிகாட்டியாக இருப்பாள் அல்லவா என்று)
வேலவன்.
நிச்சயம் அதாவது தந்தை என்ன சொல்லுவானோ??? என்று நிச்சயம்!!
சரி செல்வோம் தந்தையிடமே செல்வோம் என்றெல்லாம் நிச்சயம் கந்தனும் கூட.
(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகன் வள்ளி மூவரும் இங்கு இருக்கும் கைலாய மலைக்கு வந்து ஈசனை சந்தித்து!!)
வேலவன்.
தந்தையே!!! (என்று தயங்கிக் கொண்டு)
ஈசனும் பார்வதி தேவியும்.
அதாவது ஒன்றும் தெரியாதவர் போல் ஈசனாரும் பார்வதி தேவியாரும் முருகனைப் பார்த்து !!!
முருகா!!! ஒரு பெண்ணை அழைத்து வந்து விட்டாயா???
நிச்சயம் நீ பின் இவ்வாறு செய்யலாமா????
உலகத்தை காக்க வேண்டும் என்று அடம் பிடித்து நின்றாயே!!!..
இப்போது ஏன் ஒரு பெண்ணை இப்படியா????
வேலவன்!!
அய்யய்யோ!! பின் தந்தையே!! அறிந்தும் கூட யான் செய்யவில்லை எதுவும்!! செய்யவில்லை!
இப் பெண் தான் அனைத்திற்கும் காரணம் என்று.
ஈசனார் குருநாதரை பார்த்து!
பின் அகத்தியனே.. என்ன இது விளையாட்டு?? அறிந்தும் எதை என்று எவை என்று புரிய புரிய... பின் நீயும் கூட இப்படி ஆகிவிட்டாயே என்று!!
ஆனாலும் அனைத்து விஷயங்களும் கூட பின் ஈசன் அறிவான்!!!
சரி!!! இப் பெண்ணை திருமணம் செய்து கொள்!! என்று ஈசனும் கூட பார்வதி தேவியும் கூட முருகனிடம் திருமணம் செய்து கொள் என்று!!!
வேலவன்.
திருமணமா??????????????
நிச்சயம் இல்லை!!!!!!!!!!
என்னிடத்தில் இவள் வந்தாள்!!.. பின் என்னை விரும்பவும் தேவையில்லை!! நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் எவை என்று புரிய.. நிச்சயம் எதை என்று அறிய அறிய... திருமணமும் செய்ய தேவையில்லை என்றாள்.
நிச்சயம் உன் பக்கத்தில் நின்றாலே போதும் என்றாள்!! என்று!!
அகத்தியர் பெருமான் நமக்கு கூறும் வாக்கு
ஆனாலும் வள்ளியை ஈசனே அனுப்பியது தான் அப்பனே!!!
ஆனாலும் பக்கத்தில் அதாவது.. முருகனும் கூட மனம் மகிழ்ந்து... நிச்சயம். அவள் தனக்கு யாரும் இல்லையே என்று!!!
நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட பின் பின் பக்கத்தில் இடம் அளித்தான் அப்பனே!!!
அனைத்து சக்திகளும் இணைந்தது தான் வள்ளி என்பேன் அப்பனே!!!
நிச்சயம் பின் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய... அப்பனே இன்னும் அப்பனே முருகனுக்கு சக்திகள் கொடுத்து (வள்ளியின் சக்தி முருகனுக்கு) இக்கலியுகத்திலும் கூட அப்பனே... பின் எவை என்று அறிய அப்பனே இன்னும் அப்பனே
""""காத்துக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!
(இலங்கை இன்றும் இருப்பதற்கு முருகனே காரணம். முருகனே லங்காபுரியை மட்டுமல்ல இவ்வுலகத்தையே காப்பாற்றி கொண்டிருக்கின்றார்)
அனைத்து சக்திகளும் இணைந்தது வள்ளி என்பேன் அப்பனே.
தெய்வானையைப் பற்றிய கூட விவரமாக விவரிக்கின்றேன் அப்பனே.
இன்னும் அப்பனே பின் எப்படி? எது என்று அறிந்தும் கூட அப்பனே அறிந்து செயல்படுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் எதை என்று அறிய அறிய
அப்பனே பின் ஈசன் அனுப்பியது தான் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே வள்ளிதனைக் கூட அப்பனே!!
சக்திகளாக இருக்கட்டும் என்று அப்பனே!!
இதுதான் அப்பனே பின் அதாவது இன்னும் சொல்கின்றேன்...
ஆனால் இப்பொழுதெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!
என்ன மனிதர்களுக்கு????
(மனிதர்களுக்கு என்ன எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரிவார்கள்)
அப்பனே பின் எதை என்று அறிய தெரியாமல் என்பேன் அப்பனே!!
(வள்ளி முருகன் குறித்து மனிதர்கள் தன் இஷ்டத்திற்கு கதைகள் கவிதைகள் என உண்மை பொருள் தெரியாமல் பரப்பிக் கொண்டிருப்பதை குருநாதர் சுட்டிக்காட்டுகின்றார்)
இதனால்தான் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
நிச்சயம் அப்பனே பின் கவலைகள் இல்லை எம்முடைய ஆசிகளும் கூட அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்வேன்!!
நடுவில் என்னென்ன நடந்ததுள்ளது?? என்பதையெல்லாம் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட
அதனால் அப்பனே காத்துக்கொண்டே இருக்கின்றாள் அப்பனே வள்ளியும் கூட மலையின் (கதிரை மலை) மீது நின்று அப்பனே பின் கீழே இருக்கும்(கதிர்காமம்) எவை என்று கூட அழகான எதை என்று அறிய அறிய அப்பனே பெண்களையும் கூட அனைவரையுமே காத்துக் கொண்டு அப்பனே சக்திகளாக திகழ்ந்து கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!
பின் முருகனுக்கு இருக்கக்கூடிய சக்தி!! பின் வள்ளிக்கும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய! உண்டு!!!
ஏனென்றால் அப்பனே முருகனைக் கூட அப்பனே ஈசன் தான் பின் அனுப்பியது!!!
அப்பனே வள்ளியையும் கூட அப்பனே ஈசன் தான் அனுப்பியது..
இதில் என்ன வித்தியாசம் என்பதெல்லாம் அப்பனே நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!
உண்மை நிலை தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் அப்பனே இறைவன் ஒன்றும் செய்யப் போவதில்லை... என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே.
உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!! இறைவனை வணங்குங்கள் பின்பு அனைத்தும் கொடுப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
பக்குவங்கள் இன்னும் வளரட்டும்!! அப்பனே பின் திருந்தட்டும் பின் மனிதர்கள் அப்பனே நன்முறைகளாக அப்பனே இன்னும் விளக்கத்தோடு அப்பனே நிச்சயம் அப்பனே பல ரகசியங்களை சொல்கின்றேன் அப்பனே!!
ஆசிகள் ஆசிகள் ஆசிகளப்பா!!!.... ஆசிகள்!!!
கதிரை மலை பற்றிய விபரங்கள்.
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் கதிரைமலை முருகனாலயத்தைத் தரிசிக்க மலையேற வேண்டும்.
கதிர்காமத்திலிருந்து 3 1/2 கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலை என அழைக்கப்படும் கதிரைமலை ஆலயத்திற்கு
படிக்கட்டுகள் உள்ளன. கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தர்கள் கதிரைமலைக்கும் செல்வார்கள்.
மலையடிவாரத்திலிருந்து சுமார் 5000 கி.மீட்டர் உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அந்தக்காலத்தில் மலைஉச்சியில் வேலுடன் கூடிய முருகனாலயம் அமைந்திருந்ததாகக் கூறுவர்.
இன்று வேலுண்டு.
நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் வேலில் நைவேத்தியங்களை (அவல் கடலை பொங்கல்) சாத்தி வழிபாடு செய்கின்றனர். சிவன் ஆலயமும் உள்ளது.அரச மரங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. எங்குமில்லாத குளிர்காற்று வீசிக்கொண்டேயிருப்பது சிறப்பம்சமாகும்.
கதிரமலை மேலே செல்வதற்கு ஜீப் வசதியும் உண்டு.
அடியவர்களுக்கு ஒரு விளக்கம்.
சமீப காலமாக சித்தன் அருள் வலைத்தளத்தில் குருநாதருடைய சித்தர்களுடைய வாக்குகள் படித்து வரும் அடியவர்கள்.. சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விளக்கம்.
அனைத்தும் அறிந்தவர்கள் சித்தர்கள். அஷ்டமா சித்திகளை அடைந்து அகிலத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சித்தர்களுக்கு அனைத்து மொழியும் தெரியும்.. அனைத்து வட்டார வழக்கு மொழியும் தெரியும்.
சித்தர்களுடைய வாக்குகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ??? இந்த வாக்குகள் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றது என்று சிலர் கருத்துக்கள் கூறுகின்றனர்.
அகத்தியர் மைந்தன் திரு ஹனுமதாசன் ஐயா காலகட்டத்தில் ஜீவநாடி ஓதும் பொழுது தூய தமிழில் வந்து குருநாதர் வாக்குகள் உரைத்த பொழுது அதில் பல்வேறு சொற்களுக்கு விளக்கம் பொருள் புரியாமல் வேண்டி கேட்டுக்கொண்டு தற்போதைய தமிழில் வந்து வாக்குகள் தாருங்கள் என்று குருநாதரிடம் மன்றாடி கேட்டு குருநாதர் தன்னுடைய வாக்கு நடைமுறையை மாற்றி மக்கள் தற்போதைய காலகட்டத்தில் பேசி வரும் மொழி ஆளுமையில் சித்தர்களும் குருநாதரும் வாக்குகள் தருகின்றனர்.
உண்மையில் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் தான் பாடம் நடத்துவார்... புரியாத மொழியில் புரியாத நடையில் பாடம் நடத்தினால் எப்படி மாணவர்களுக்கு புரியும்??
மாணவர்களுக்கு இருக்கும் புத்திக்கு தகுந்தவாறு தான் பாடம் எடுக்கப்படும்.
இங்கு சித்தர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வாக்குகள் தந்து அவர்களுக்கு புரியும்படி அவர்கள் பேசும் சொற்களை பயன்படுத்தி வாக்குகள் தந்து நமக்கு புரிய வைக்கின்றனர்.
இல்லை !! இது சித்தர்களின் மொழி இல்லை !! சித்தர்களின் வார்த்தைகள் இப்படி இருக்காது என்றெல்லாம் குழப்பங்கள்.
சித்தர்கள் இப்படித்தான் பேச வேண்டும் இந்த சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் மனிதர்கள் நாம் கட்டாயப்படுத்த முடியாது.
சித்தர்கள் தகாத வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.. எப்படி இப்படி எல்லாம் அவர்கள் கூறுவார்கள் என்று.
ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் இங்கு தகாத செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்கள் செய்யும் தகாத செயல்களை தகாத வார்த்தைகளில் கூறித்தான் புரிய வைக்க முடியும்.
காகபுஜண்டர் மகரிஷி ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என மனிதர்கள் இங்கு செய்வதை அவரது வாக்குகளில் சொல்லி புரிய வைக்கின்றார்..
சித்தர்கள் தங்களுடைய நூல்களில் உதாரணத்திற்கு அகத்தியர் 12000 ஞானக்கோவை சித்த மருத்துவம் இந்த நூல்களில் எல்லாம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் நுணுக்கமாக ரகசியமாக சில மூலிகைகள் மூலிகைகளின் கலவைகள் எப்படி செய்வது என்பதை எல்லாம் மறைமுகமாக சூட்சுமமாக எழுதி வைத்திருப்பார்கள். ஏனென்றால் அதனை அறிந்து கொள்வதற்கு அடிப்படையிலிருந்து பக்குவங்கள் பெற !
படிப்படியாக அந்த ஞானத்தை அடைந்து அந்த பாடலில் இருக்கும் பொருளை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வாழ்வு நலம் பெற அவர்களுடைய மக்களுக்கு புரியும் படி வாக்குகள் தந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றார்கள்.
சரி!! ஒரு உதாரணத்திற்கு சித்தன் அருள் 1670 பதிவு எண் அன்புடன் அகத்தியர் சபரிமலை வாக்கில்
அதாவது சாதாரண உரைநடை வழியில்
நீரின் !!!....
நீரிலே ஊற்றி
ஊற்றிய பின்
பின் எடுத்து
எடுத்தபின் அறிந்தும் இதற்கென்ன லாபம்
லாபம் கிட்டி அறிந்தும் கூட அதையும் தப தப வென ஓட
ஓடிய நீரை எடுத்து!!!
எடுத்தானாம் ஒருவன்
ஆனால் வரவில்லையே
ஆனால் இதற்கு எப்படி பின் எடுத்தால் பின் வருமோ!!!
அறிந்தும் கூட அப்படி பின் எடுத்தால் நிச்சயம் நீரையும் எடுத்து பின் அதாவது அருந்தி விடலாம்!!!
நிச்சயம் உடம்புக்குள் புகுத்தி விடலாம்!!
என்று வாக்குகளில் கூறியிருந்தார் இதன் பொருள் விளக்கத்தை அதாவது சாதாரண தமிழில் கூறிய இந்த வாக்கினை வாக்கில் இருக்கும் பொருளை உணர முடியவில்லை..
இதற்கு என்ன அர்த்தம்??..
என்று சிலருக்கு உணர்ந்து கொள்ள முடியவில்லை.
புரியவில்லை என்றெல்லாம் அடியவர்கள் பேசியிருந்தார்கள். உண்மைதான்..
வாக்குகள் இடையே இது போன்ற தத்துவங்களையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் சாதாரண தமிழில் வாக்குகள் வந்தால்....இது எப்படி? என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்.
வாக்குகள் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்ற பட வேண்டும் என்பதற்காக தான் சித்தர்கள் தங்கள் வாக்குகளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைக்கின்றார்கள்.
உண்மையில் சித்தர்கள்
புரியாததை தெரியாததை ரகசியங்களை புரியும்படி எடுத்துரைத்து மனிதர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தி வாக்குகள் தந்து கொண்டிருப்பதை....
இது சித்தர்கள் வாக்கு அல்ல!!!... சித்தர்கள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள் என்றெல்லாம் ஏதேதோ தமது கற்பனைக்கு தீனியிட்டு... கருத்துக்களை முன் வைக்காதீர்கள்.
ராஜராஜ சோழனுக்கு எந்த தமிழில் வாக்குகள் தந்திருப்பார்கள்?? ராஜராஜ சோழனிடம் பேசிய தமிழில் இப்பொழுது பேசினால் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா???
மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து பாதையை மாற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது!!!
காலத்தால் கணக்கிட முடியாத சித்தர்கள் அந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப மக்களின் மனோ நிலைக்கு ஏற்ப கலியுகத்தின் பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப புரியும் படி வாக்குகள் தருவதை உணர்ந்து கொள்ளுங்கள்.
சித்தர்கள் நமது மொழியில் நமக்கு புரியும் வகையில் கருணையோடு மனமிரங்கி நமக்கு புரிய வைப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி தெரிவித்து வணங்குங்கள்.நன்றி.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தய்யன் அருள்.....தொடரும்!
அன்புடன் அகத்தியர்
Monday, 27 January 2025
சித்தன் அருள் - 1787 - அன்புடன் அகத்தியர் - சிங்காரவேலன் திருக்கோயில். மாணிக்க கங்கை நதிக்கரை. ஊவா மாகாணம் மொனராகலை. ஸ்ரீலங்கா
17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: கதிர்காமம் சிங்காரவேலன் திருக்கோயில். மாணிக்க கங்கை நதிக்கரை. ஊவா மாகாணம் மொனராகலை. ஸ்ரீலங்கா.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே பல விசித்திர திருத்தலங்கள் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே.
ஆனாலும் அதை அப்பனே மனிதனால் பின் கண்டு உணர்வதில்லை என்பேன் அப்பனே.
அதற்கும் பல பல புண்ணியங்களும் தேவைப்படுகின்றது அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் அப்பனே நிச்சயம் அதாவது பின் ஈசன் அப்பனே உலகத்திற்கு அனுப்பும் பொழுதே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே புண்ணியத்தை வைத்து!!!
ஆனாலும் அப்பனே அதை தன் சரியாகவே மனிதன் பயன்படுத்தாமல் அப்பனே எதை எதையோ பயன்படுத்தி கடைசியில் அப்பனே பின் நிச்சயம் எதற்காக வந்தோம்?? என்று தெரியாமலே அப்பனே சென்று மீண்டும்..இவ் ஆன்மா பிறப்பெடுத்து அப்பனே மீண்டும் மீண்டும்.
அப்பனே நிச்சயம் எதற்காக வந்தோம்?? என்று தெரிந்து கொண்டால் அப்பனே பின் நிச்சயம் மோட்சமப்பா!!!
ஆனாலும் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் மீண்டும் மீண்டும் பின் அதாவது பிறவி எடுத்து இவ் ஆன்மா பின் கஷ்டங்களை பின் பட்டு கொண்டு தான் இருக்க வேண்டும்.
இதற்காகத்தான் நிச்சயம் தன் பக்தர்களைக் கூட நல்விதமாக தெரிந்துகொண்டு வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே.
அதாவது இறைவன் எங்கு இருக்கின்றான்?? பின் எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் அப்பனே பின் நன்கு உணர்ந்து கொண்டாலே.. வெற்றிகள் மிகப்பெரிய வெற்றிகள் காத்துக் கொண்டே!!!!!!
அப்பனே நிச்சயம் பின் அதாவது குழந்தை பிறக்கும் பொழுது அப்பனே சிறிது காலத்திற்கு தந்தையானவனையும் தெரியும் தாயானவளையும் தெரியும்.
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு தெரிந்த பின்பு பின் தந்தையே தாயே என்றெல்லாம்!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் போக போக தெரிந்து விடும்...
இது போலத்தான் இறைவன் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனை பின் அதாவது அதற்கடுத்து அப்பனே நிச்சயம் அப்பனே குருவாகவும் அதாவது குருவானவனை இறைவனாகவும் அப்பனே இதனை தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் பின் உங்களை யாராலும் வெல்ல முடியாதப்பா!!!
அதனால் முதலில் பின் அம்மா என்று!! பின் அப்பா என்று!!! நிச்சயம் அப்பனே ஒரு குழந்தை அதன் பின் அப்பனே நிச்சயம் அப்பனே குரு என்ற ஸ்தானத்தை அதாவது குரு என்பவன் இறைவனாகவும் இருக்கலாம் என்பேன் அப்பனே!!
இதனை அப்பனே பின் நிச்சயம் அக் குழந்தை அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வளர வளர அப்பனே யாராலும் பின் நிச்சயம் அப்பனே எவ் கிரகங்களாலும் அப்பனே எவ் சக்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் தாய் தந்தையை தெரிந்து கொண்டு ஆனாலும் அப்பனே உண்மை பொருளை நிச்சயம் பின் மறந்து பின் விடுகின்றது இவ் ஆன்மா.
அப்பனே அறிந்தும் கூட இதற்கெல்லாம் யார் காரணம்? என்றால் நிச்சயம் மனிதனே!!!
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இதற்கு தான் நிச்சயம் தாய் தந்தையர் அப்பனே நிச்சயம் குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே நிச்சயம் தன்னில் கூட இறைவன் இருக்கின்றான்.. இறைவன்!! அதாவது தவறு செய்தால் நிச்சயம் தன்னில் கூட இறைவன் தண்டிப்பான்... என்றெல்லாம் (சொல்லி வளர்க்க வேண்டும்)
அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் அப்பனே இவ்வாறாகவே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பழைய பின் கல்விக்கூடங்களில் எல்லாம் நிச்சயம் சத்தியம் செய்வார்கள்.. இப்படித்தான் வாழ்வேன் என்று!!
(முந்தைய காலகட்டத்தில் எல்லாம் குருகுலங்களில் பள்ளிக்கூடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்வது)
ஆனாலும் அப்பனே பின் அதிலிலே பொய் சொல்லி அப்பனே மனிதன் பின் அதாவது சிறு வயதிலே பொய் சொல்லி அப்பனே பின் பொய்களாக்கி பொய்களாக்கி அதையே அப்பனே வேலையாக செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
எப்படியப்பா வெற்றிகள் கிடைக்கும்???
அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் பின் பொய் சொல்லி கொண்டே வந்தால் அப்பனே பின் தோல்வி அடைந்து கொண்டே வருவீர்கள் என்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் அப்பனே நன் முறைகளாகவே இறைவனிடத்தில் அன்பை காட்டிக் கொண்டே வந்தால் அப்பனே இறைவன் உங்கள் மீது அன்பை பன்மடங்கு காட்டிக் கொண்டே வருவான் அப்பனே.
ஆனாலும் அப்பனே நீங்கள் காட்டுவதில் அப்பனே பின் நிச்சயம் எது? உண்மை? எது? பொய் ? என்றெல்லாம் இறைவனுக்கு தெரியும் அப்பா!!
ஆனாலும் அப்பனே இறைவன் மறைமுகமாக உங்கள் மேல் பின் அன்பை செலுத்தி செலுத்தி கடைசியில் உண்மை பொருளை தெரிவித்து விடுவான் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே பல வகையிலும் கூட கந்தன் அப்பனே பின் சுற்றி திரிந்தான் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே விளக்கங்கள் இன்னும் இன்னும் அப்பனே பின் சித்தர்கள் செப்புகின்ற பொழுது... நிச்சயம் உண்மை பொருளையும் கூட அப்பனே தெரியவரும் என்பேன் அப்பனே.
உண்மை பொருளை தெரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் நீங்களே நிச்சயம் அறிந்தும் கூட பின் உங்களை வென்றிட்டு அப்பனே பின் உங்கள் பின் அதாவது குழந்தைகளும் கூட நல்வாழ்க்கையும் கூட அப்பனே நீங்களும் தீர்மானித்து அப்பனே நன்முறைகளாகவே உங்கள் குடும்பங்களே செழிக்கும் என்பேன் அப்பனே.
அப்படி இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலும் கஷ்டங்கள் அப்பனே நிச்சயம் தாய் தந்தையரை மதிக்காமல் போதல் என்று தன் பிள்ளைகள் அப்பனே என்றெல்லாம் போய்க் கொண்டே இருக்குமப்பா.
பின் அச் சூழ்நிலை அப்பனே நிச்சயம் இக்கலி யுகத்தில்..
அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் அப்பனே மனிதன் தவறு செய்தாலும் அவனை திருத்திக் கொண்டு உண்மை பொருளை என்னவென்று? பின் விளக்கிக் கொண்டே வருகின்றோம் சித்தர்கள் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் நற்பண்புகள் அப்பனே யாங்களே.. வரும் காலத்தில் பின் கொடுத்து கொடுத்து அப்பனே மாற்றுவோம்!!!
அப்பனே கந்தன் அழகாகவே அப்பனே பின் சுற்றி கொண்டிருந்தானப்பா!!!
அப்பனே எங்கு?? என்றால் இங்கு தான் என்பேன் அப்பனே!!
அப்பனே இங்கும் கூட பின் அப்பனே பின் ஈசனுடைய சாம்ராஜ்யம் அப்பனே.
ஒரு கயிலை மலையே (கைலாச மலை போன்று) என்று சொல்லலாம் அப்பனே.... இங்குதான் அப்பனே பின் இங்கு தான் அப்பனே பெரிய மலை அப்பனே நிச்சயம் பின் அது தன் கூட பனிக்கட்டியாகவே அப்பனே இறைவன்.
அதாவது அப்பனே பின் அனைத்து தேவாதி தேவர்களும் கூட இதன் அருகிலே அப்பனே பின் அதாவது சிறிது தொலைவிலே அப்பனே பின் இன்னும் கூட அப்பனே அடியில் ஒளிந்துள்ளதப்பா!!!
( கதிர்காம கோயிலில் இருந்து 3 அரை கிலோமீட்டர் தொலைவில் கதிரை மலை என்ற இடம் உள்ளது அங்கு ஏழு மலைகள் சூழ்ந்த பகுதி அங்கும் கோயில் இருக்கின்றது அதன் அருகில் ஈசனுடைய சாம்ராஜ்யம் பனிக்கட்டியாக இருக்கும் மலை அடியில் உள்ளது)
அப்பனே நிச்சயம் இங்கு தான் அப்பனே பின் பிடித்தமான ஒன்று!!!
பின் அதிகாலையிலே கந்தன் அப்பனே சுற்றிக் கொண்டே வருவான்.
ஆனாலும் அப்பனே காலப்போக்கில் அப்பனே பின் அனைவரும் கூட இங்கு வந்தார்கள் என்பேன் அப்பனே..
ஈசனை காண அப்பொழுதெல்லாம் அப்பனே கைலாயம் அங்கே இருக்கின்றது...(பாரத பூமியில்) ஆனாலும் அப்பனே பின் கைலாயம் இங்கும் இருக்கின்றதப்பா!!!(இலங்கையில்)
அப்பனே நிச்சயம் எங்கும்!!!! அதாவது விளையாட்டாகவே சொல்கின்றேன்....
எங்கும் நிறைந்தது கைலாயமே!!!!!
அப்பனே ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் ரகசியங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே.
அதை நிச்சயம் அப்பனே என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
என்னை அகத்தியனே என்று வணங்குகின்றீர்களே!!!!!!
ஏன்???
எதற்காக???? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தெரிந்து வணங்க வேண்டும்!! அதனால்தான் என் பக்தர்களுக்கு நிச்சயம் அனைத்தும் சொல்லி பக்குவங்கள் ஏற்படுத்தி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கொடுத்திடுவேன் என்பேன் அப்பனே.
அதாவது மாயையை தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பவை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... ஆனாலும் உண்மை பொருளை கேளுங்கள் அப்பனே.
நிச்சயம் பின் அனைத்தும் நிச்சயம் அப்பனே பின் கேட்டாலும் அப்பனே இத் தந்தை உங்களுக்கு என்னவோ பின் அதைத்தான் கொடுப்பேன்!!
சொல்லிவிட்டேன் அப்பனே.
இதனால் அப்பனே... சரியாகவே ஆனாலும் இதற்கு தகுந்தார் போல் அறிந்தும் கூட !!!
இதனால் அப்பனே நிச்சயம் பின் ஆனாலும் பின் ஈசனுக்கு நிச்சயம் பின் பார்வதியும் நிச்சயம் அறிந்தும் கூட இதை என்று பின் சொல்ல இதையன்றி யான் சொல்ல !! இவை என்று உணரும் பின் பொருளுக்கும் கூட பின் அப்படியே!!
இதனால் நிச்சயம் கலியுகம் தொடங்குகின்றது!!! (கலியுகம் தொடங்கும் நேரத்தில்) அதாவது பின் பார்வதி தேவியிடம் ஈசனாரும் கூட
தேவியே!! கலியுகம் தொடங்குகின்றது தேவியே!!
இதனால் பின் இங்கிருந்து........இதனால் பின் இங்கிருந்து அதாவது இது மூழ்கும்!!
ஆனாலும் இது பின் இன்னும் இன்னும் பின் அறிந்தும் கூட இவ் மலை கீழ்நோக்கி செல்கையில் நிச்சயம் பின் மனிதனும் கீழ்நோக்கி சென்று கொண்டே இருப்பான்.. இதனால் நிச்சயம் இன்னும் அதாவது நம் பாதைக்கு செல்வோம்.. இதுதான் நிச்சயம் என்று.
இதனால் நிச்சயம் ஆனால் கந்தனோ !? ...... பின் ஒத்துப் போகவில்லையே!!!
தந்தையே!!! நில்லுங்கள்! பின்! உலகத்திற்கே நிச்சயம் பின் தொண்டு செய்து அனைத்து உயிர்களையும் கூட தன்போல் என்று எண்ணி நிச்சயம் காத்தருள்வாயே!!!
நிச்சயம் எங்கு செல்வோம்?? என்று!!
ஈசனார்.
வேலவா!!! கேள்!!!
அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் இவை எல்லாம் ஏற்கனவே யானே.. நிச்சயத்ததுதான். தீர்மானித்தது தான்!! இவ்வாறு (கலியுகம்) தொடங்குகின்ற பொழுது பின் அதாவது யுகங்கள் இன்னும் இன்னும்!!!
(ஒவ்வொரு யுகத்திலும் என்னென்ன இருக்க வேண்டும் என்னவெல்லாம் இருக்கக் கூடாது என்பதை எல்லாம் ஈசன் தீர்மானித்து எழுதிய விதிப்படி தான் ஒவ்வொரு யுகம் நடக்கும்)
(அகத்தியர் தற்போது)
அப்பா சொல்கின்றேன் ஒவ்வொரு யுகம் என்ன? ஏது?... அவ் அவ் யுகத்தில் என்னென்ன நடந்தது என்பதை எல்லாம் நிச்சயம் சொல்வேன் அப்பனே!!
அனைவருக்குமே அப்பனே!! அனைவரும் தெரிந்து கொண்டு உண்மை பொருளை பின் நிச்சயம் தேர்ந்தெடுத்து நிச்சயம் உண்மையாக வாழ்ந்து நிச்சயம் பின் அறிந்தும் பின் அதாவது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பின் புவியில் படைத்து விட்டான் அல்லவா!!!
நிச்சயம் அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொள்ளாதவரிடத்தில் நிச்சயம் அறிந்தும் கூட பின் யாங்கள் எவை எதை என்று நிச்சயம் பின் தெரிந்து கொண்டு வாழ்ந்திட்டு நிச்சயம் மோட்ச கதியை அடையுங்கள்!!
நிச்சயம் பின் அதாவது வேலவனும் கூட பின்
வேலவன்
தந்தையே நில்லும்!! ஏன்? எதற்கு? இப்படி என்று!!
ஈசனார்.
வேலவா!! உனக்கு ஒன்றும் தெரியாது!!
நிச்சயம் கலியுகத்தில் பின் நிச்சயம் பின் நீங்கி விட்டு நாம் வேறு தேசத்திற்கு செல்வோம் என்றெல்லாம் நிச்சயம்.
வேலவன்.
இல்லை!! இல்லை!! யான் இல்லை!!! இங்குதான் இருப்போம் என்று!
பின் பார்வதி தேவியும் கந்தனை பார்த்து
பார்வதி தேவி
குகனே!!! அறிந்தும் தந்தை சொல் கேள்!!! என்று!!
வேலவன்.
நிச்சயம் தாயே கேட்கின்றேன்... எனக்கு இங்கே தான் பிடித்தார் போல் இருக்கின்றது அதாவது யான் இங்கேதான் இருப்பேன் என்று!! அறிந்தும் இதை என்று உணர்ந்தும் கூட!
ஆனாலும் பின் கணபதியும் கூட!!!
கணபதி!!
பின் குழந்தாயே!!! தந்தை தாய் சொல்கின்றார்கள் அல்லவா!!! நிச்சயம் நாம் சென்று விடுவோம் என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் கூட அறிந்தும் ஆனாலும் இவை தன் கூட பின் அறிந்தும் கூட ஆனாலும்...சரி!!! என்று ஈசனாரும் கூட சரி!!
ஈசனார்
குகனே!!... இங்கே பின் இருக்கின்றாய் அல்லவா... சரி!! இரு!!... யார் வேண்டாம் என்று சொன்னது!!!
ஆனாலும் நிச்சயம் உந்தனக்கு புரியாது இப்பொழுது!!
பின் அதாவது யாங்கள் செல்கின்றோம்... அதாவது இன்னொரு கைலாயத்திற்கு!! என்றெல்லாம்!! அங்கிருந்து!!
பின் அங்கிருந்து பின் இது போல் இருக்கும் என்று..
ஆனாலும் பின் கந்தனும் யான் வரமாட்டேன்.. வரப்போவதில்லை நீங்கள் சென்று வாருங்கள்.
ஆனாலும் நிச்சயம் பின் கந்தனும் இங்கிருந்து!!!
ஆனாலும் மனது வரவில்லை!! பின் அறிந்தும்...(சித்தர்கள்) யாங்களும் வந்து!!!
சித்தர்கள்
பின் கந்தா!!!....வா!!!!.... அறிந்தும் பின் அனைவருமே உன்னை அழைக்கின்றோம் அல்லவா!!.. வா நாம் வேறு கைலாயத்திற்கு சென்று விடுவோம் என்று!!
வேலவன்
ஆனால் பின் இதுவும் கைலாயம் தானே.... யான்.. ஏன்?? எதற்கு??? அங்கு வரவேண்டும் ?? என்று
ஆனாலும் பின் பிரம்மனும் கூட....
பிரம்மன்
முருகா!!!... நீ இவ்வாறு பின் சொல்லலாமா???
ஏன் அடம் பிடிக்கின்றாய்??? என்று!! எங்களுடன் வா என்று!!!
பின் விஷ்ணுவும் கூட
விஷ்ணு
பின் கந்தனே... அறிந்தும் ஏன் சிறுவனாக இருக்கின்றாய்!!! இன்னும் நீ சிறுவனாகவே இருக்கின்றாயா?? என்று!!
பின் அனைத்து தேவாதி தேவர்களும் இந்திரனும் வந்து இங்கு அறிந்தும் கூட பின்.... முருகனை அழைத்த பொழுது..
முருகன் யான் வருவதில்லை... இதுதான் எந்தனுக்கு சொந்தம் என்று.பின் இங்கே அமர்ந்திட்டான்!!!
சரி!!... பின் ஆனாலும் பார்வதி தேவியும்!!
பார்வதி தேவி
குகனே நிச்சயம் இவ்வளவு பேர்கள் உன்னை அழைக்கின்றார்கள் அல்லவா!!!
ஏன் ?உனக்கு மட்டும் இவ்வளவு ?... இப்படி அடம் பிடிக்கும் மனமா??? என்றெல்லாம்.
வேலவன்
யான் வரப்போவதில்லை... இதுதான் எனக்கு கைலாயம் என்று.
சரி என்று ஈசனும் அறிந்தும் இதை தன் கூட நிச்சயம்
ஈசனார்
கந்தா!!!.... சரி!!! உன்னுடைய விருப்பம்.. நிச்சயம் நிறைவேறட்டும்!! யாங்கள் அங்கு செல்கின்றோம்...
உந்தனுக்கு மனதிருந்தால் வா!!!
அதாவது இத் தாயையும் தந்தையையும்.. பின் அனைவரையும் பார்க்க!!
இல்லையென்றால் இங்கேயே தங்கிவிடு என்று!!
வேலவன்
நிச்சயம் யான் வருகின்றேன்... ஆனாலும் நிச்சயம் இங்கே தான் எந்தனுக்கு பிடித்தது..
ஆனாலும் பின் கணபதியும் கூட பின் !!!
கணபதி
முருகா!!! அறிந்தும் கூட.. உனக்கு மட்டும் தான் இங்கு பிடித்தது !!
நீ மட்டும் தான் தனியாக இங்கு விளையாடுவாய்! யாங்கள் எல்லாம் கிளம்புகின்றோம் என்று!!
வேலவன்
பின் சென்றிட்டு வா என்று பின் முருகனும் கூட!!
அறிந்தும் இவைதன் கூட... இதனால் அனைவருமே மனம் வருந்தி அதாவது முருகனை விட்டுவிட்டு பின் மனம் !!!
அறிந்தும் கூட... பின் அதாவது பின் அனைவருமே... பார்வதி தேவியும் கூட மகனே!! மகனே!!
என்றெல்லாம் !! (மனம் வருந்தி)
நிச்சயம் பின் அதாவது இங்கிருந்து இன்னும் (பாரத பூமியில் இருக்கும்) கைலாய மலைக்கு அனைவரும் சென்றனர்.
அங்கு பின் அங்கிருந்தே அழைத்தனர்.... முருகா! முருகா! என்று!!
வேலவன்
ஆனாலும் பின் எந்தனுக்கு கேட்கின்றது... நீங்கள் அனைவருமே என்னை விட்டு விட்டு சென்று விட்டீர்கள் அல்லவா!! நிச்சயம் என்றெல்லாம்!
பின் ஆனால் கணபதியே நீயும் இப்படித்தான் எப்பொழுதும் பேசுவாய்...
ஈசனும் பின் அனைவரும்
சரி பின் இங்கிருந்தே யாங்கள் பார்க்கின்றோம்!! பின் நீ அறிந்தும் கூட!!!
இதனால் பின் அதாவது பின் ஈசனாரும்!!!
எனை (அகத்தியரை) அழைத்து பின் அகத்தியனே!!!... அறிந்தும் பின் அதாவது.. அவனுக்கு துணையாக இரு...
அவந்தன் வேலவன் பிடிவாதக்காரன் அல்லவா!!
நிச்சயம் அவந்தனக்கு துணையாக இரு!
இங்கே நிச்சயம் அதாவது அனைத்தும் நீயே அறிந்தவன். பின் நிச்சயம் கலியுகம் தொடங்குகின்றது
இதனால் பின் அக்கிரமங்கள் அநியாயங்கள் என்றெல்லாம் நிச்சயம்..
அதனால் முருகனை பின் கவனமாக பார்த்துக் கொள்! என்று!!
பின் யானும் சொன்னேன்.... அவன் வேலவன் அறிவில் வல்லவன்!!! அனைத்து விஷயங்களும் தெரிந்தவன்!!! பின் உந்தனுக்கு தெரியாதா? என்ன ஈசனாரே என்று!!
ஈசனார்
நிச்சயம் நீ அங்கு செல்!! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்று!!
ஆனாலும் அறிந்தும் நிச்சயம் இங்கு வந்தேன்...
(குருநாதர் அகத்தியர் இலங்கை கண்டி கதிர்காமம் வருகை)
அழகாகவே மீண்டும் பின் முருகா என்று அழைத்தேன்!!!
வேலவன்!!
அகத்தியனே பின் அறிந்தும்... பின் நீ கூட!!! அதாவது பின் அறிந்தும் விளையாட்டாகவே என்னிடத்தில் இருந்து என்னை விட்டிட்டு நீ கூட சென்று விட்டாயே என்று!!!
அகத்திய பெருமான்
அய்யய்யோ!!!! முருகா!!! பின் நான் உன்னை எப்படி பின் விட்டு செல்ல????????
பின் என் செல்ல குழந்தையைக் கூட எப்படி இங்கு விட்டுட்டு செல்வேன்???
அதனால்தான் பின் அதாவது உன் தாயும் தந்தையும் பின் சென்றனர் அதனால்... யானும் சென்றுவிட்டேன்.
ஆனாலும் மனதில் ஒரு கவலை முருகனை விட்டுவிட்டோமே!!!... அதாவது விட்டு விட்டு வந்து விட்டோமே என்று!!!
ஆனாலும் உன் தந்தை அதை சரியாக கணித்து பின் எனை அழைத்து பின் ஆனாலும் பின் ஈசன் என்ன சொல்லப் போகின்றான்?? என்பதை கூட யான் அறிவேன்!!!
அதைத்தான் சொல்லப் போகின்றான் என்று யான் சந்தோஷம் கொண்டேன்!!!.. மனம் வருத்தத்தோடு இருப்பதைப் போல் முகத்தை காட்டி கொண்டேன்!! முருகா என்றெல்லாம்!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எவை என்று கூட
வேலவன்.
அகத்தியரே!!! நிச்சயம் உன்னை விட இங்கு அறிவாளி யார்??
நிச்சயம் தெரிகின்றது நிச்சயம் அனைவரையும் கூட இப்படித்தானே காப்பாய் என்றெல்லாம்!!
அகத்தியர் பெருமான்
நிச்சயம் சரி!! அனைவரும் சென்று விட்டனர். பின் நீ மட்டும் இங்கு இருப்போமா? என்று!!!
நிச்சயம் அறிந்தும் பின் அதாவது முருகா!!! நிச்சயம் பின் அதாவது இங்கு நிச்சயம் அறிந்தும் கூட இங்கே... இருந்து பின் ஏன்?? உன் தந்தையும் பின் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டார்கள் என்றால்?!....
நிச்சயம் அதாவது அறிந்தும் கூட இவ் பனிமலையும் கூட அப்படியே உள் செல்லப் போகின்றது... இதுதான் கலியுகத்தின் ஆரம்பம்!!! இதனால் நிச்சயம் பின் அதாவது
வேலவன்
அகத்தியரே !!!பின் ஏன் உன்னால் தடுக்க முடியாதா???
அகத்திய பெருமான்
நிச்சயம் உன்னாலும் தடுக்க முடியும் குகனே!! நிச்சயம் இவ்வாறு தான் படைக்கப்பட்டது என்று
வேலவன்
அதாவது இங்கே விலங்கினங்கள் இன்னும் சிறிய சிறிய நிச்சயம் அன்புக்குரியவைகள்!! இன்னும் அறிந்தும் கூட மரங்கள் செடிகள் இன்னும் பின் அழகாக இருக்கின்றதே இவையெல்லாம் பின் நிச்சயம் அடியில் சென்றுவிடுமா???
அகத்திய பெருமான்
நிச்சயம் பின் முருகா!!! பின் நாம் சென்று விடுவோம்.. என்றெல்லாம்!! நிச்சயம் அறிந்தும் கூட பின்...பார்!!!
அதோ வருகின்றதே... பலத்த காற்று பின் புயலும் கூட!! நிச்சயம் அறிந்தும் கூட பின்.. இவை வந்தால் இன்னும் அடியில் சென்று விடுவோம் என்றெல்லாம்! நிச்சயம் அறிந்தும் கூட!
வேலவன்
பின் அகத்தியரே!! உந்தனுக்கு புரியும் உந்தனுக்கு தெரியும் அல்லவா!!!
நிச்சயம் அதனை தடுத்து நிறுத்து!!! நிச்சயம்!!
அகத்திய பெருமான்
முருகா!!! நிச்சயம் பின் தடுத்து நிறுத்த முடியும்!! ஆனாலும் பின் அங்கிருந்து சொல்வார்கள்!! பின் யான் நிச்சயம் தடுத்து நிறுத்தினால்!!!.... அகத்தியனே!!! உன்னை எதற்காக??? இங்கே அதாவது முருகனிடத்தில் போகச் சொன்னேன்?? என்றெல்லாம் நிச்சயம் ஈசன் கேட்பார்!
அதனால் அழிவு நிச்சயம் ஆரம்பித்துவிட்டது!!!
வேலவன்
நிச்சயம் யான் வரப்போவதில்லை என்றெல்லாம் அறிந்தும் கூட!!!
பின் அதாவது வேடிக்கையை பார்!! அகத்தியனே என் வேடிக்கையை பார்!! இப்பொழுது வருவதை அங்கேயே தடுத்து நிறுத்துகின்றேன் என்று!!
முதலில் அறிந்தும் பின் வேல் ஒன்றை கையில் பின் அதாவது பின் எதை நினைக்கின்றானோ!!!! அதை தன் நிச்சயம் கையில் வரவழைக்கும் திறன் நிச்சயம் அதாவது அனைத்து திறன்களையும் கூட பெற்றவன் தான் முருகன்!!!
இதனால் கையில் வேலை வரவழைத்து வேலை எடுத்தான்!!! நிச்சயம் அதை நோக்கி (பலத்த காற்றை) பின் வேகமாக வீசினான்!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் வேலை எதிர்த்து அவ் காற்றும் வந்து கொண்டே இருந்தது...
அகத்திய பெருமான்
பின் முருகா பார்த்தாயா!!! இதனால் நிச்சயம் இன்னும் உன் தந்தைக்கு கோபம் தான் வரப்போகின்றது!! பின் அதாவது... யான் தான் சொல்லிக் கொடுத்தேன் என்று உன் தந்தை என் மீது கோபம் கொள்ள போகின்றான்...
இதனால் நிச்சயம் நீ வந்துவிடு என்று!!!
வேலவன்
அகத்தியனே நிச்சயம் யான் வரப்போவதில்லை!! இதுதான் எனக்கு சொர்க்கம்!!! நீ வேண்டுமானால் செல். ஆனால் யான் நிச்சயம் இதை தடுத்து நிறுத்துகின்றேன்!!!
மீண்டும் என் தந்தையையும் தாயையும் கூட இங்கே அழைத்து வாருங்கள்.. அனைவரையும் கூட என்று!!
அகத்திய பெருமான்
நிச்சயம் முடியாது!!!
வேலவன்
பின் அகத்தியனே நிச்சயம் முடியாது என்பதை கூட நீ சொல்கின்றாயா??????
நிச்சயம் இதனை யான் ஏற்கப் போவதில்லை!!!
அகத்திய பெருமான்
பின் சில நேரங்களில் சொல்லித்தான் ஆக வேண்டும் முருகா!!! அறிந்தும்!!
ஏனென்றால் உன் தாயும் தந்தையும்... யான் என்ன பேசுகின்றேன் ? என்று அங்கே இருந்து பின் செவி கொடுத்து கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள்!!! அறிந்தும் இதை தன் உணர்ந்தும் கூட!
இதனால் நிச்சயம் முருகா வந்துவிடு என்று!!!
வேலவன்
நிச்சயம் சரி...
வேல் மீண்டும் பின் வந்துவிட்டது..
முருகன் வேலுடன் பேசினான்... பின் இவை என்று அறிய!!! மீண்டும் பின் சரியாகவே வந்து நிச்சயம் தன்னில் கூட இங்கே புதைந்தது மர்மமாகவே!!! இன்னும் இப்பொழுது மறைமுகமாக இருக்கின்றதே !! (கருவறையில்)அங்கு அடியில் வேல் ஒன்று அதாவது திரும்பி வந்து விட்டதே...அவ் வேல் நிச்சயம் உள்ளே சென்றுவிட்டது!!! அறிந்தும் கூட!!!
இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன்!!! ஆனாலும் கடைசியில் தான் விளக்கி விளக்கி சொல்வேன்!!!
((குருநாதர் குறிப்பிடும் மறைமுகமான இடம் கதிர்காமம் ஆலய கருவறை .ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார் கருவறை வாயிலில் திரைச்சீலை ஓவியம்
எந்த இந்துக் கோயில்களிலும் இல்லாத வழக்கமாக, எந்நேரமும் கருவறையை மறைத்தபடி கருவறை வாயிலில் திரையிட்டு இருப்பது கதிர்காமம், கந்தன் கோயிலில் மட்டுமே காணப்படும் நடைமுறை.பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர்.
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது.
குருநாதர் குறிப்பிடும் மறைமுகமான கருவறையில் முருகன் வேல் அடியில் உள்ளது இந்த ரகசியம் குருநாதர் மூலம் நமக்கு தெரிய வருகின்றது)
இதனால் பின் வேல் உள்ளே சென்று விட்டது!! அங்கே!!!
இருப்பினும் பின் அறிந்தும் கூட மீண்டும்!! முருகன் என்னை பார்த்து
வேலவன்
அகத்தியனே நிச்சயம் பார்த்தாயா!!! என் தந்தை தான் இதற்கு காரணம் !!!
பின் அதாவது யான் இதைக் கூட வெல்ல மாட்டேனா!!!???
என் தந்தை தான் அங்கிருந்து இயக்குகின்றான் என்று!!!
அகத்திய பெருமான்
யார்? இயக்குகின்றார்கள்? என்று தெரிகின்றதா முருகா!!!!...
இதனால் நிச்சயம் நீ வந்துவிடு!!! நாம் சென்று விடுவோம் என்று!!!
வேலவன்
விடப்போவதில்லை!!! என்று
இதனால் பின்( யந்திர) தகட்டை சடாசரத்தை எடுத்தான்!!!
பெரிய ஒரு தகட்டை நிச்சயம் பின் அதாவது வீசினான்!!! அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட!!
(சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரவணபவ மந்திரத்தின் பிரயோகம்)
பின் மீண்டும் அச் சடாச்சர பின் அதாவது தகடு அறிந்தும் எதை என்று அறிய அறிய மீண்டும் பின் பின் அதாவது எவ்வளவு பின் வேகத்தில் வீசினானோ!!!!... அவ்வளவு பின் வேகத்தில் பின் திரும்பி வந்து மீண்டும் அங்கே விழுந்தது!!
இப்பொழுது ... அருவமாக அதாவது எதையும் காட்டவில்லையே!!!
(தரிசனத்தின் போது திரை சீலை இட்டு எதையும் காட்டாமல்)
(கதிர்காம கருவறையில் திரைச்சீலை விட்டு மூடி எதையும் காட்டாமல் எதையும் பார்க்க முடியாமல் இருக்கும் இடத்தில் வேலுடன் சேர்ந்து அந்த ஷடாக்சர எந்திர தகடு இரண்டும் அங்கே உள்ளே மறை பொருளாக இருக்கின்றது)
அதில் என்னென்ன ?? உள்ளது என்பதை கூட யாங்கள் அறிவோம்!!!
பின் மீண்டும் அங்கே வந்துவிட்டது!!!!
வேலவன்
பின் அகத்தியனே ஏன் இந்த நிலைமை????
பின் அதாவது என் தந்தையிடம் சொல்!!! நிச்சயம் யான் சாதிப்பேன் என்று!!!
அகத்திய பெருமான்
அப்பப்பா!!!!.... எந்தனுக்கு ஒன்றும் தெரியாதப்பா!!!... பின் ஈசன் என்னை அனுப்பினான்... யான் அமைதியாக தான் காத்திருப்பேன் என்று!!!
வேலவன்.
அகத்தியனே உன்னால் முடியும் அல்லவா!! நீ ஏதாவது செய்!! என்று!!
அகத்திய பெருமான்
நிச்சயம் யான் செய்யப் போவதில்லை! ஏனென்றால் கலியுகம் பின் நிச்சயம் அதாவது.. உன் தந்தைக்குத் தெரியும்... எப்படி எல்லாம் மனிதர் இருப்பார்கள்!! எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை எல்லாம்....
இதனால் யான் அமைதியாகவே!!! அதாவது அமைதி காக்கின்றேன்!
அதாவது... பின் நீ செய்வதெல்லாம் யான் விளையாட்டாக எண்ணி பின் நிச்சயம் பார்க்கத்தான் போகின்றேன்.. அவ்வளவுதான் என் வேலை!! நிச்சயம்.
வேலவன்
பின் அகத்தியனே!!!! நிச்சயம் பின் அதாவது யான் அதாவது பின் அறிந்தும் கூட இவ்வாறு யான் செய்வதெல்லாம் உந்தனுக்கு விளையாட்டாக தெரிகின்றதா????
அகத்திய பெருமான்
அய்யய்யோ!!! பின் அப்படி இல்லை முருகா!! அப்படி யான் பேசவில்லை முருகா... யான் உந்தனுக்கு உதவினால் நிச்சயம் உன் தந்தையானவன் அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றான்.. பின் என்றெல்லாம் நிச்சயம்!!
அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய... பின்பு மீண்டும் எதை என்று அறிய அறிய பின்
யானே செல்கின்றேன்!!!! அதாவது... மீண்டும் மயில் ஒன்றை அனுப்பினான். நிச்சயம் மயிலும் கூட திரும்பி வந்துவிட்டது.. அறிந்தும் எதை என்று புரிய.. இதனால் எப்படி ஏது என்று அறிய!!!
வேலவன்
நிச்சயம் பின் அகத்தியனே!!! நிச்சயம் அவ்வளவுதானா!! அவ்வளவுதானா!!! பின் அனைத்தும் திரும்பி வந்து விட்டது!!
பின் இனி யான் என்ன செய்வேன்??? என்றெல்லாம்!!!....
அகத்தியர் பெருமான்
நிச்சயம் தெரிகின்றதல்லவா முருகா!! வா நிச்சயம் நாம் சென்று விடுவோம் என்று!! பின் அறிந்தும் எதை என்று புரிய புரிய!!
ஆனாலும் நிச்சயம் பின் செல்வோமா என்று!!!
ஆனாலும் முருகன் நிச்சயம் பின் என் கையைப் பிடித்து... அறிந்தும் கூட என்னை இழுத்து!!!
ஆனாலும் எனக்கும் மனம் வரவில்லை!!! ஏனென்றால் நிச்சயம் அறிந்தும் கூட பின் அவை வந்து விட்டால் நிச்சயம் பின் அதாவது பாதி அளவு நீராகவே இருக்கும் என்று!!!(கடல் வந்து மூடிவிடும்) ஆனாலும் நிச்சயம் ஆனாலும்!!
ஈசனாரும் கூட அறிந்தும் கூட!!!
பின் அதாவது மீண்டும் ஒரு முயற்சி எடுப்போம் என்று முருகனும் கூட!!!
மீண்டும் எதை என்று அறிய நிச்சயம் பின்...
வேலவன்
அகத்தியனே !!! அதாவது நிச்சயம் உன் சக்தி எவ்வளவு என்று யானே உணர்வேன்.
அதனால் நிச்சயம் தன்னில் கூட யான் மயில் மீது அமருகின்றேன்.. நீ என் பின்னாலே அமர்... போதுமானது.
அகத்திய பெருமான்
நிச்சயம் ஐயையோ!!! அறிந்தும் கூட பின் முருகா!! இப்படி எல்லாம் நீ என்னை சோதித்து விடாதே!!!
நிச்சயம் தன்னில் கூட உன் தந்தைக்கு கூட... எந்தன் ஆற்றல் தெரியும்... இதனால்தான் அறிந்தும் கூட ஈசன் அதாவது உன் தந்தையானவன் என்னை அனுப்பினான்!!!
வேலவன்
பின் நிச்சயம் அகத்தியனே என்னுடன் நீ வரத்தான் வேண்டும். நிச்சயம் பின் என் தந்தை தேவையா??? யான் தேவையா??? என்று!!
(நான் உந்தனுக்கு வேண்டுமா? அல்லது என் தந்தை ஈசன் உந்தனுக்கு வேண்டுமா என்று முருகன் குருநாதரிடம்)
அகத்தியர் பெருமான்
நிச்சயம் நீங்கள் இருவருமே தேவை!!!
வேலவன்
அப்படி என்றால் நீ என்னுடன் வா என்று!!!
அகத்திய பெருமான்
ஆனாலும் உன் தந்தை அங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.. பின் எப்படி யான் வருவது?? என்று!!
வேலவன்.
நிச்சயம் மறைத்து விடுவோம் என்று!!
அகத்திய பெருமான்
பின் வேலவா.. நிச்சயம் உன் தந்தை எப்பேர்பட்டவன்?? எதை என்று புரிய என்று!!
வேலவன்
நிச்சயம் பின் யான் சிறுவன் அல்லவா...
அகத்திய பெருமான்
நிச்சயம் நீ சிறுவன் தான்!
யான் சொன்னேன்!! அறிந்தும் கூட!!!
வேலவன்
அப்படி என்றால் நிச்சயம் பின் விளையாடுவது போல் நிச்சயம் அறிந்தும் கூட இங்கிருந்து நிச்சயம் யான் நினைக்கின்றேன்!!!
பின் அதாவது உனை கேட்கின்றேன்... என் தந்தை ஏமாந்து போவான்...
நிச்சயம் அகத்தியனே!!!!! நாம் விளையாடுவோமா!!! மயில் மீது என்று!!!!!!!!!!!!!
நிச்சயம் நீயும் கூட பின் அதாவது விளையாடுவோம் என்று!!! (விளையாடுவது போல் விளையாடி அகத்தியரை மயில் வாகனத்தில் ஏற்றி எதிரே வரும் ஆபத்தை தடுக்க முருகன் திட்டம்)
அகத்தியர் பெருமான்
அடடா!!! பின் முருகா!!! இப்படி எல்லாம் நிச்சயம் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கின்றான் உன் தந்தை..!!!
. இதனால் ஒன்றும் செய்ய முடியாது யான் அமைதியாக இங்கே அமருகின்றேன்.. என்றெல்லாம்!!
நிச்சயம் பின் அறிந்தும் அதனுள்ளே நிச்சயம் அதாவது பின் அதாவது மேல் நோக்கி விஸ்வரூபம் போல் நீர் வந்து கொண்டே இருந்தது.
ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் எவை என்று கூட ஒரு பெரிய மலை. அவ் மலையை சுற்றி கிராமங்கள் நிச்சயம் இவைதன் உணர்ந்த.. பின் அளவிற்கும் கூட நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் நிச்சயம் எதை என்று புரிய... நிச்சயம் பின் அனைத்தும் கூட... பின் கடல் நீர் கொடும் காற்றும் வந்துவிட்டதே என்றெல்லாம்..
. பின் இங்கு வரை வந்துவிட்டது (கதிர்காமம் வரை)
வேலவன்.
ஆனாலும் அகத்தியனே!!! பின் நிச்சயம் நீ ஏதாவது செய்ய வேண்டும்!!! என்று!!
இதனால் நிச்சயம் இதை என்று புரிய புரிய பின் இவ்வாறு அழிந்துவிட்டதே.. பாசத்துடன் (முருகன் பாசம் காட்டிய அனைத்தும்) என்றெல்லாம் பின் நிச்சயம்...
அப்பனே இதன் அடியில் உள்ளதப்பா!!!....
இதனால்தான் அப்பனே பெரிய பெரிய ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் அப்பனே பின் இவ் கைலாய மலை அப்பனே... பின் சூட்சமமாகவே உள்ளதப்பா.
பின் அதாவது பல பல யோகிகள் ஞானிகள் அப்பனே இங்கு வந்து அப்பனே பின் வணங்கி விட்டு செல்வார்களப்பா..
அக் கைலாயம் அவர்களுக்கு தெரியும்.. அவர்கள் கண்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
யார்?? நிச்சயம் பின் எவை என்று கூட ஞானிகளுக்கு தெரிகின்றதோ!!?? அவந்தன் மோட்ச நிலையை அடைந்து அப்பனே நிச்சயம் பின் எதை என்று புரிந்து உண்டு அப்பனே இவ்வுலகத்தை காக்க மறு பிறவியை அப்பனே.. இறைவனிடத்தில் கேட்டு வரலாம் என்பேன் அப்பனே..
அதாவது கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பெரிய கைலாயம்!! அறிந்தும் கூட...!!!!
இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் புரிய.. எவை என்றும் அறிய அறிய.. அப்பனே இதனால் நிச்சயம்... இனிமேலும் பின் அதாவது... முருகன் பேசினான்!!!
வேலவனின் பேச்சு!!
கடல் நீர் இனிமேலும் இதைத் தாண்டி வரக்கூடாது!!! நிச்சயம்... இதுதான் என் வழி என்று... யான் இங்கேயே தங்குகின்றேன் என்று...
(கதிர்காம கருவறையில்)
குருநாதர் வாக்கு
அங்கே அழகாக முருகன் அமர்ந்திட்டானப்பா!!!
இதனால் அப்பனே அங்கே (மூலஸ்தானத்தில்) ஒரு வழி இருக்கின்றதப்பா!!
அதை மீறி அப்பனே நிச்சயம் முதல் வழியில்!!!! அப்பனே இன்னும் அப்பனே பின் எவை என்று கூட வருகின்றது...
ஆனாலும் அப்பனே நிச்சயம் முருகனுக்கு பின் பயந்து பின் கடல் நீரும் கூட அங்கே நின்கின்றது...
(பொங்கி வந்த கடல் வெள்ளம் அப்படியே நிற்கின்றது)
இரண்டாவது வழி அப்பனே திருச்செந்தூர் என்பேன் அப்பனே!!!
முதல் வழி கதிர்காமம்
இரண்டாவது வழி திருச்செந்தூர்.
(உலகத்தில் கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகி அதன் மூலம் இறைவனால் கோபம் கொள்ளப்பட்டு பொங்கி வந்த கடல் நீர் சுனாமி அனைத்தையும் அழித்த பொழுது திருச்செந்தூரில் கடல் பயந்து பின்னே சென்று ஒரு அலை கூட வராமல் நின்றது நினைவுக்கு வரும்
கலியுக தொடக்கத்தில் இதேபோன்று கடல் பொங்கி வந்த பொழுது கதிர்காமத்தில் அமர்ந்து நீரை தடுத்து நிறுத்திய முருகனின் கருணை திருச்செந்தூரிலும் நடந்திருக்கின்றது)
அப்பனே இன்னும் அப்பனே விளக்குகின்றேன் அப்பனே!!! மூன்றாவது வழியையும் கூட!!
பின் அதாவது நீங்கள் சரியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே பின் அறிவு படைத்தவராக இருக்க வேண்டும்... அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்... அப்பனே அன்பு கருணை அப்பனே இருக்க வேண்டும்... அனைத்து உயிர்களையும் கூட அப்பனே தன் உயிர் போல் எண்ண வேண்டும்!!
இப்படி நினைத்தால் அப்பனே வரும் காலத்தில் பின் உங்களுக்கு அனைவருக்குமே கற்றுக் கொடுத்து அப்பனே.. உங்களுக்கு என்ன தேவையோ??? அதை நீங்களே பெற்றுக் கொள்வீர்கள் என்பேன் அப்பனே!!!
ஒவ்வொரு ரகசியத்தையும் சொல்கின்றேன்.. இதனால்தான் அப்பனே பின்... ஆதிசங்கரனும் கூட!!
அப்பனே நிச்சயம் பின் அனுமானும் கூட!!
சீதையும் கூட!!
ராமனும் கூட!!
கிருஷ்ணனும் கூட... அப்பனே இன்னும் புத்தனும்(கௌதம புத்தர்) கூட அப்பனே பின் இன்னும் சித்தர்களும் கூட
ஏன் இங்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அப்பனே!!!..
இங்கு அப்பனே பின் கைலாய மலை அப்பனே அழகாகவே!!! அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட... பின் மூழ்கி கிடக்கின்றது என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே பின் அங்கிருந்து அதாவது மறைந்து பின் இருக்கின்றானே!!!........(கருவறையில்)
அங்கிருந்து...
கீழ்நோக்கி அவ் பனிமலைக்கு சென்று கொண்டே இருக்கின்றான் என்பேன் முருகன் அப்பனே!!
(கதிர்காம மூலஸ்தானத்தில் மறைமுகமாக அமர்ந்திருக்கும் முருகன் தினமும் கைலாய மலைக்கு கீழ் நோக்கி சென்று வந்து கொண்டிருக்கின்றார்)
அப்படி நிச்சயம் அவ்வாறு இங்கு (கதிர்காமத்திற்கு வந்து) வணங்கினாலே உங்கள் கர்மாவை அப்பனே எடுத்துச் சென்று அதில் விட்டு (மூழ்கி இருக்கும் கைலாச மலையில்) விடுவானப்பா!!! முருகன் அவ்வளவுதான் என்பேன் அப்பனே விஷயம்.
அப்பனே இதை என்று புரிந்து கொண்டு அப்பனே ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய... அப்பனே இதனால் அப்பனே பின்
அங்கு என்ன உள்ளது?? என்பதைக் கூட அப்பனே.. பின் அதாவது சொல்லிவிட்டேன்!!
இதுவும் கூட பாதி தான் என்பேன் அப்பனே!!
நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட பின் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு.
இதனால் அப்பனே இவையெல்லாம் அப்பனே ஈசன் விளையாட்டா?? என்றெல்லாம் அப்பனே...
நிச்சயம் அப்பனே!!! (ஆம் ஈசனின் விளையாட்டு ஈசனின் விதி)
இதனால் தான் அப்பனே... பின் கந்தன் அப்பனே.. நிச்சயம்(பொங்கி வரும் கடல்) நீரை அப்பனே... அதாவது கடல் நீரை அப்பனே பின் தடுத்துக் கொண்டே இருக்கின்றான் இன்னும்.. வர வர!!!
எவை என்று கூட அவ் முதல் வழியிலே (கடல் நீர்) நுழைந்து விட்டால் அப்பனே நிச்சயம் பின் அனைத்திலும் கூட பின் நுழைந்து விடும்!! என்பேன் அப்பனே வந்துவிடும்!! என்பேன் அப்பனே!! அப்படியே பின் அறிந்தும் கூட!!!
(கடல் பொங்கி வருவது அதாவது சுனாமி போன்று கலியுகத்தில் அழிவுகள் கடலால் வருவதை முருகன் அங்கு இருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றார் இலங்கையையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்)
இதனால்தான் அப்பனே நிச்சயம் கந்தன் காத்துக் கொண்டிருக்கின்றான் அங்கிருந்து!!... அனைவரையும் கூட அப்பனே!!
இன்னும் விளக்கங்கள் சொல்வேன் என்பேன் அப்பனே... பல ரகசியங்கள் இங்கு ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே...
நிச்சயம் பின் கந்தனே இங்கு வரவழைத்து அப்பனே இன்னும் வாக்குகள் பின் கற்பிப்பான்..
அப்பனே இன்னும் போதனைகள் எல்லாம் அப்பனே... மக்கள் தெரிந்து கொள்ளவே அப்பனே சித்தர்கள் உரைப்பார்கள் அப்பனே...
இப்போதைய நிலைமைக்கு இது போதுமப்பா!!!
எம்முடைய ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!! கோடிகளப்பா!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே... குருநாதர் உரைத்த இவ்வாக்கின் தொடர்ச்சியாக... கதிர்காம ஆலயத்தில் இருந்து மூணரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கதிரை மலையில் வாக்குகள் நலகினார்...அவ் வாக்குகள் பாகம் இரண்டில் வரும்.
ஆலயம் பற்றிய தகவல்கள்.
கதிர்காமம் கந்தன் திருக்கோவில் - இலங்கை.கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலம், என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இங்கு பூஜை செய்பவர்களை ‘கப்புராளைமார்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாம் தரும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் திருப்பித் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரைமீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும்.அமைவிடம் : இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது..
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Tuesday, January 28, 2025
உலகின் அனைத்து மொழிகளிலும்
Tuesday, 28 January 2025
சித்தன் அருள் - 1789 - உலகின் 100+ மொழிகளில் முதன் முறையாக!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே,
உலகம் முழுவதும் நம் குருநாதர், சித்தர்கள் வாக்குகள் சென்று அடையவேண்டும். சித்தன் அருள் வலைத்தளத்தை Google Translate links மூலமாக இங்குப் பல இந்திய மொழியில் அடியவர்களுக்காகத் தொகுத்து வழங்கியுள்ளோம். அடியவர்கள் இதனை இதர இந்திய மொழி அடியவர்களுக்குப் பகிரவும்.
Below are the direct Google Translate links for the blog https://siththanarul.blogspot.com for all supported Indian languages:
1. [Hindi](https://translate.google.com/translate?sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com)
2. [Telugu](https://translate.google.com/translate?sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com)
3. [Kannada](https://translate.google.com/translate?sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com)
4. [Malayalam](https://translate.google.com/translate?sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com)
5. [Marathi](https://translate.google.com/translate?sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com)
6. [Gujarati](https://translate.google.com/translate?sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com)
7. [Punjabi](https://translate.google.com/translate?sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com)
8. [Bengali](https://translate.google.com/translate?sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com)
9. [Assamese](https://translate.google.com/translate?sl=auto&tl=as&u=https://siththanarul.blogspot.com)
10. [Odia](https://translate.google.com/translate?sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com)
11. [Urdu](https://translate.google.com/translate?sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com)
12. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
13. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
14. [Maithili](https://translate.google.com/translate?sl=auto&tl=mai&u=https://siththanarul.blogspot.com)
15. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
16. [Mizo](https://translate.google.com/translate?sl=auto&tl=miz&u=https://siththanarul.blogspot.com)
17. [Bhojpuri](https://translate.google.com/translate?sl=auto&tl=bho&u=https://siththanarul.blogspot.com)
18. [Dogri](https://translate.google.com/translate?sl=auto&tl=doi&u=https://siththanarul.blogspot.com)
19. [Santali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
20. [Nepali](https://translate.google.com/translate?sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com)
21. [Sindhi](https://translate.google.com/translate?sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com)
22. [Kashmiri](https://translate.google.com/translate?sl=auto&tl=ks&u=https://siththanarul.blogspot.com)
23. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
24. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)
25. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
26. [Santhali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
27. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
28. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
29. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)
=================================================
Plesde find the Translation links for all 100+ global languages
Creating direct Google Translate links for all ISO-639 language codes for a specific blog (e.g., https://siththanarul.blogspot.com) involves generating URLs that use Google Translate to translate the blog into each language. Below is a list of such links for all ISO-639-1 language codes (2-letter codes):
### Google Translate URL Format:
https://translate.google.com/translate?hl=&sl=auto&tl=&u=
- : The target language code (e.g., en for English, es for Spanish).
- : The URL of the blog (e.g., https://siththanarul.blogspot.com).
### List of Direct Google Translate Links for All ISO-639-1 Languages:
Replace with the appropriate language code and with https://siththanarul.blogspot.com.
Here’s the list:
1. *Afrikaans* (af):
https://translate.google.com/translate?hl=af&sl=auto&tl=af&u=https://siththanarul.blogspot.com
2. *Albanian* (sq):
https://translate.google.com/translate?hl=sq&sl=auto&tl=sq&u=https://siththanarul.blogspot.com
3. *Amharic* (am):
https://translate.google.com/translate?hl=am&sl=auto&tl=am&u=https://siththanarul.blogspot.com
4. *Arabic* (ar):
https://translate.google.com/translate?hl=ar&sl=auto&tl=ar&u=https://siththanarul.blogspot.com
5. *Armenian* (hy):
https://translate.google.com/translate?hl=hy&sl=auto&tl=hy&u=https://siththanarul.blogspot.com
6. *Azerbaijani* (az):
https://translate.google.com/translate?hl=az&sl=auto&tl=az&u=https://siththanarul.blogspot.com
7. *Basque* (eu):
https://translate.google.com/translate?hl=eu&sl=auto&tl=eu&u=https://siththanarul.blogspot.com
8. *Belarusian* (be):
https://translate.google.com/translate?hl=be&sl=auto&tl=be&u=https://siththanarul.blogspot.com
9. *Bengali* (bn):
https://translate.google.com/translate?hl=bn&sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com
10. *Bosnian* (bs):
https://translate.google.com/translate?hl=bs&sl=auto&tl=bs&u=https://siththanarul.blogspot.com
11. *Bulgarian* (bg):
https://translate.google.com/translate?hl=bg&sl=auto&tl=bg&u=https://siththanarul.blogspot.com
12. *Catalan* (ca):
https://translate.google.com/translate?hl=ca&sl=auto&tl=ca&u=https://siththanarul.blogspot.com
13. *Cebuano* (ceb):
https://translate.google.com/translate?hl=ceb&sl=auto&tl=ceb&u=https://siththanarul.blogspot.com
14. *Chinese (Simplified)* (zh-CN):
https://translate.google.com/translate?hl=zh-CN&sl=auto&tl=zh-CN&u=https://siththanarul.blogspot.com
15. *Chinese (Traditional)* (zh-TW):
https://translate.google.com/translate?hl=zh-TW&sl=auto&tl=zh-TW&u=https://siththanarul.blogspot.com
16. *Corsican* (co):
https://translate.google.com/translate?hl=co&sl=auto&tl=co&u=https://siththanarul.blogspot.com
17. *Croatian* (hr):
https://translate.google.com/translate?hl=hr&sl=auto&tl=hr&u=https://siththanarul.blogspot.com
18. *Czech* (cs):
https://translate.google.com/translate?hl=cs&sl=auto&tl=cs&u=https://siththanarul.blogspot.com
19. *Danish* (da):
https://translate.google.com/translate?hl=da&sl=auto&tl=da&u=https://siththanarul.blogspot.com
20. *Dutch* (nl):
https://translate.google.com/translate?hl=nl&sl=auto&tl=nl&u=https://siththanarul.blogspot.com
21. *English* (en):
https://translate.google.com/translate?hl=en&sl=auto&tl=en&u=https://siththanarul.blogspot.com
22. *Esperanto* (eo):
https://translate.google.com/translate?hl=eo&sl=auto&tl=eo&u=https://siththanarul.blogspot.com
23. *Estonian* (et):
https://translate.google.com/translate?hl=et&sl=auto&tl=et&u=https://siththanarul.blogspot.com
24. *Finnish* (fi):
https://translate.google.com/translate?hl=fi&sl=auto&tl=fi&u=https://siththanarul.blogspot.com
25. *French* (fr):
https://translate.google.com/translate?hl=fr&sl=auto&tl=fr&u=https://siththanarul.blogspot.com
26. *Frisian* (fy):
https://translate.google.com/translate?hl=fy&sl=auto&tl=fy&u=https://siththanarul.blogspot.com
27. *Galician* (gl):
https://translate.google.com/translate?hl=gl&sl=auto&tl=gl&u=https://siththanarul.blogspot.com
28. *Georgian* (ka):
https://translate.google.com/translate?hl=ka&sl=auto&tl=ka&u=https://siththanarul.blogspot.com
29. *German* (de):
https://translate.google.com/translate?hl=de&sl=auto&tl=de&u=https://siththanarul.blogspot.com
30. *Greek* (el):
https://translate.google.com/translate?hl=el&sl=auto&tl=el&u=https://siththanarul.blogspot.com
31. *Gujarati* (gu):
https://translate.google.com/translate?hl=gu&sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com
32. *Haitian Creole* (ht):
https://translate.google.com/translate?hl=ht&sl=auto&tl=ht&u=https://siththanarul.blogspot.com
33. *Hausa* (ha):
https://translate.google.com/translate?hl=ha&sl=auto&tl=ha&u=https://siththanarul.blogspot.com
34. *Hawaiian* (haw):
https://translate.google.com/translate?hl=haw&sl=auto&tl=haw&u=https://siththanarul.blogspot.com
35. *Hebrew* (he or iw):
https://translate.google.com/translate?hl=he&sl=auto&tl=he&u=https://siththanarul.blogspot.com
36. *Hindi* (hi):
https://translate.google.com/translate?hl=hi&sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com
37. *Hmong* (hmn):
https://translate.google.com/translate?hl=hmn&sl=auto&tl=hmn&u=https://siththanarul.blogspot.com
38. *Hungarian* (hu):
https://translate.google.com/translate?hl=hu&sl=auto&tl=hu&u=https://siththanarul.blogspot.com
39. *Icelandic* (is):
https://translate.google.com/translate?hl=is&sl=auto&tl=is&u=https://siththanarul.blogspot.com
40. *Igbo* (ig):
https://translate.google.com/translate?hl=ig&sl=auto&tl=ig&u=https://siththanarul.blogspot.com
41. *Indonesian* (id):
https://translate.google.com/translate?hl=id&sl=auto&tl=id&u=https://siththanarul.blogspot.com
42. *Irish* (ga):
https://translate.google.com/translate?hl=ga&sl=auto&tl=ga&u=https://siththanarul.blogspot.com
43. *Italian* (it):
https://translate.google.com/translate?hl=it&sl=auto&tl=it&u=https://siththanarul.blogspot.com
44. *Japanese* (ja):
https://translate.google.com/translate?hl=ja&sl=auto&tl=ja&u=https://siththanarul.blogspot.com
45. *Javanese* (jv):
https://translate.google.com/translate?hl=jv&sl=auto&tl=jv&u=https://siththanarul.blogspot.com
46. *Kannada* (kn):
https://translate.google.com/translate?hl=kn&sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com
47. *Kazakh* (kk):
https://translate.google.com/translate?hl=kk&sl=auto&tl=kk&u=https://siththanarul.blogspot.com
48. *Khmer* (km):
https://translate.google.com/translate?hl=km&sl=auto&tl=km&u=https://siththanarul.blogspot.com
49. *Kinyarwanda* (rw):
https://translate.google.com/translate?hl=rw&sl=auto&tl=rw&u=https://siththanarul.blogspot.com
50. *Korean* (ko):
https://translate.google.com/translate?hl=ko&sl=auto&tl=ko&u=https://siththanarul.blogspot.com
51. *Kurdish* (ku):
https://translate.google.com/translate?hl=ku&sl=auto&tl=ku&u=https://siththanarul.blogspot.com
52. *Kyrgyz* (ky):
https://translate.google.com/translate?hl=ky&sl=auto&tl=ky&u=https://siththanarul.blogspot.com
53. *Lao* (lo):
https://translate.google.com/translate?hl=lo&sl=auto&tl=lo&u=https://siththanarul.blogspot.com
54. *Latin* (la):
https://translate.google.com/translate?hl=la&sl=auto&tl=la&u=https://siththanarul.blogspot.com
55. *Latvian* (lv):
https://translate.google.com/translate?hl=lv&sl=auto&tl=lv&u=https://siththanarul.blogspot.com
56. *Lithuanian* (lt):
https://translate.google.com/translate?hl=lt&sl=auto&tl=lt&u=https://siththanarul.blogspot.com
57. *Luxembourgish* (lb):
https://translate.google.com/translate?hl=lb&sl=auto&tl=lb&u=https://siththanarul.blogspot.com
58. *Macedonian* (mk):
https://translate.google.com/translate?hl=mk&sl=auto&tl=mk&u=https://siththanarul.blogspot.com
59. *Malagasy* (mg):
https://translate.google.com/translate?hl=mg&sl=auto&tl=mg&u=https://siththanarul.blogspot.com
60. *Malay* (ms):
https://translate.google.com/translate?hl=ms&sl=auto&tl=ms&u=https://siththanarul.blogspot.com
61. *Malayalam* (ml):
https://translate.google.com/translate?hl=ml&sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com
62. *Maltese* (mt):
https://translate.google.com/translate?hl=mt&sl=auto&tl=mt&u=https://siththanarul.blogspot.com
63. *Maori* (mi):
https://translate.google.com/translate?hl=mi&sl=auto&tl=mi&u=https://siththanarul.blogspot.com
64. *Marathi* (mr):
https://translate.google.com/translate?hl=mr&sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com
65. *Mongolian* (mn):
https://translate.google.com/translate?hl=mn&sl=auto&tl=mn&u=https://siththanarul.blogspot.com
66. *Myanmar (Burmese)* (my):
https://translate.google.com/translate?hl=my&sl=auto&tl=my&u=https://siththanarul.blogspot.com
67. *Nepali* (ne):
https://translate.google.com/translate?hl=ne&sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com
68. *Norwegian* (no):
https://translate.google.com/translate?hl=no&sl=auto&tl=no&u=https://siththanarul.blogspot.com
69. *Nyanja (Chichewa)* (ny):
https://translate.google.com/translate?hl=ny&sl=auto&tl=ny&u=https://siththanarul.blogspot.com
70. *Odia (Oriya)* (or):
https://translate.google.com/translate?hl=or&sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com
71. *Pashto* (ps):
https://translate.google.com/translate?hl=ps&sl=auto&tl=ps&u=https://siththanarul.blogspot.com
72. *Persian* (fa):
https://translate.google.com/translate?hl=fa&sl=auto&tl=fa&u=https://siththanarul.blogspot.com
73. *Polish* (pl):
https://translate.google.com/translate?hl=pl&sl=auto&tl=pl&u=https://siththanarul.blogspot.com
74. *Portuguese* (pt):
https://translate.google.com/translate?hl=pt&sl=auto&tl=pt&u=https://siththanarul.blogspot.com
75. *Punjabi* (pa):
https://translate.google.com/translate?hl=pa&sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com
76. *Romanian* (ro):
https://translate.google.com/translate?hl=ro&sl=auto&tl=ro&u=https://siththanarul.blogspot.com
77. *Russian* (ru):
https://translate.google.com/translate?hl=ru&sl=auto&tl=ru&u=https://siththanarul.blogspot.com
78. *Samoan* (sm):
https://translate.google.com/translate?hl=sm&sl=auto&tl=sm&u=https://siththanarul.blogspot.com
79. *Scots Gaelic* (gd):
https://translate.google.com/translate?hl=gd&sl=auto&tl=gd&u=https://siththanarul.blogspot.com
80. *Serbian* (sr):
https://translate.google.com/translate?hl=sr&sl=auto&tl=sr&u=https://siththanarul.blogspot.com
81. *Sesotho* (st):
https://translate.google.com/translate?hl=st&sl=auto&tl=st&u=https://siththanarul.blogspot.com
82. *Shona* (sn):
https://translate.google.com/translate?hl=sn&sl=auto&tl=sn&u=https://siththanarul.blogspot.com
83. *Sindhi* (sd):
https://translate.google.com/translate?hl=sd&sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com
84. *Sinhala (Sinhalese)* (si):
https://translate.google.com/translate?hl=si&sl=auto&tl=si&u=https://siththanarul.blogspot.com
85. *Slovak* (sk):
https://translate.google.com/translate?hl=sk&sl=auto&tl=sk&u=https://siththanarul.blogspot.com
86. *Slovenian* (sl):
https://translate.google.com/translate?hl=sl&sl=auto&tl=sl&u=https://siththanarul.blogspot.com
87. *Somali* (so):
https://translate.google.com/translate?hl=so&sl=auto&tl=so&u=https://siththanarul.blogspot.com
88. *Spanish* (es):
https://translate.google.com/translate?hl=es&sl=auto&tl=es&u=https://siththanarul.blogspot.com
89. *Sundanese* (su):
https://translate.google.com/translate?hl=su&sl=auto&tl=su&u=https://siththanarul.blogspot.com
90. *Swahili* (sw):
https://translate.google.com/translate?hl=sw&sl=auto&tl=sw&u=https://siththanarul.blogspot.com
91. *Swedish* (sv):
https://translate.google.com/translate?hl=sv&sl=auto&tl=sv&u=https://siththanarul.blogspot.com
92. *Tagalog (Filipino)* (tl):
https://translate.google.com/translate?hl=tl&sl=auto&tl=tl&u=https://siththanarul.blogspot.com
93. *Tajik* (tg):
https://translate.google.com/translate?hl=tg&sl=auto&tl=tg&u=https://siththanarul.blogspot.com
94. *Tamil* (ta):
https://translate.google.com/translate?hl=ta&sl=auto&tl=ta&u=https://siththanarul.blogspot.com
95. *Tatar* (tt):
https://translate.google.com/translate?hl=tt&sl=auto&tl=tt&u=https://siththanarul.blogspot.com
96. *Telugu* (te):
https://translate.google.com/translate?hl=te&sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com
97. *Thai* (th):
https://translate.google.com/translate?hl=th&sl=auto&tl=th&u=https://siththanarul.blogspot.com
98. *Turkish* (tr):
https://translate.google.com/translate?hl=tr&sl=auto&tl=tr&u=https://siththanarul.blogspot.com
99. *Turkmen* (tk):
https://translate.google.com/translate?hl=tk&sl=auto&tl=tk&u=https://siththanarul.blogspot.com
100. *Ukrainian* (uk):
https://translate.google.com/translate?hl=uk&sl=auto&tl=uk&u=https://siththanarul.blogspot.com
101. *Urdu* (ur):
https://translate.google.com/translate?hl=ur&sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com
102. *Uyghur* (ug):
https://translate.google.com/translate?hl=ug&sl=auto&tl=ug&u=https://siththanarul.blogspot.com
103. *Uzbek* (uz):
https://translate.google.com/translate?hl=uz&sl=auto&tl=uz&u=https://siththanarul.blogspot.com
104. *Vietnamese* (vi):
https://translate.google.com/translate?hl=vi&sl=auto&tl=vi&u=https://siththanarul.blogspot.com
105. *Welsh* (cy):
https://translate.google.com/translate?hl=cy&sl=auto&tl=cy&u=https://siththanarul.blogspot.com
106. *Xhosa* (xh):
https://translate.google.com/translate?hl=xh&sl=auto&tl=xh&u=https://siththanarul.blogspot.com
107. *Yiddish* (yi):
https://translate.google.com/translate?hl=yi&sl=auto&tl=yi&u=https://siththanarul.blogspot.com
108. *Yoruba* (yo):
https://translate.google.com/translate?hl=yo&sl=auto&tl=yo&u=https://siththanarul.blogspot.com
109. *Zulu* (zu):
https://translate.google.com/translate?hl=zu&sl=auto&tl=zu&u=https://siththanarul.blogspot.com
---
### Notes:
- Replace with the appropriate ISO-639-1 code for each language.
- Google Translate may not support all languages perfectly, and the quality of translation may vary.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Friday, January 24, 2025
அகத்திய பெருமானின் விளக்கம்
பூமிக்கு மேலே இருக்கும் கிரகங்களில் எல்லாம் வேற்று கிரக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் புண்ணியங்கள் அடிப்படையில் மேலே சந்திரனிலும் மற்ற கிரகங்களிலும் மேலே லோகங்கள் இருக்கின்றது அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே பல வாக்குகள் தந்திருந்தாலும்... சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் விநாயகர் உருவம் போன்று ஒரு புகைப்படம் தெரிந்தது அருகிலேயே கற்களால் ஆன ஆலயம் போன்றும் இருந்தது இது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
இதன் உண்மை தன்மையை குறித்து குருநாதரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட முறையில் கேள்வியாக கேட்ட பொழுது
அப்பனே மேலோகத்தில் கிரகங்களில் எல்லாம் சித்திரக்குள்ளர்கள் ஞானிகள் ரிஷிகள் அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே சந்திரன் செவ்வாய் அங்கும் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே
அங்கு திருத்தலங்கள் இருக்கின்றது அதாவது கிரகங்களில் .
ஆனால் புண்ணிய நதிகள் அங்கு இல்லை .
அதனால் கீழே இங்கு வந்து மானசரோவர் கங்கோத்திரி காசி கங்கா காவேரி தாமிரபரணி புஷ்கர் புனித ஏரி நர்மதா தபதி சிந்து மற்றும் புனித நதிகள் அனைத்திலும் நீராடி செல்வார்கள் பிரம்ம முகூர்த்தத்தில்...
அன்புடன் அகத்தியர் - புடா புஷ்கர் வாக்கு!
Friday, 24 January 2025
சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா.
8/1/2025 அன்று திருமூலர் சித்தர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பனன் இந்தோனேஷியா.
பாரெங்கும் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் இறைவா போற்றி!!!
போற்றியே நின் தாள் பணிந்து பின் பரப்புகின்றேன் மூலனவனே!!!
நமச்சிவாய! நமச்சிவாய!! நமச்சிவாயனே!!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
அல்லலன்றி போகும்போது உன்னையன்றி யாரும் இல்லை நமச்சிவாயனே!!
அன்பு என்ற சொல்லுக்கு அடைக்கலமானவனே!!!
உண்மைப் பொருளுக்கு விளக்கமானவனே!!
துயரம் துன்பம் போக்குபவனே நமச்சிவாயனே!!
நமச்சிவாயனே!!
அன்பு கருணை நிறைந்தவனே நமச்சிவாயனே!!
நமச்சிவாயனே!!
அன்பு தன்னில் காட்டி தன்னை அணைத்துக்கொள்ளும் நமச்சிவாயனே!!!
இருளை நீக்கி ஒளியை புகுத்தும் நமச்சிவாயனே
உலகத்தை காத்தருளும் நமச்சிவாயனே
துன்பம் அதை போக்கி நின்று இன்பத்தை அளிக்கும் நமச்சிவாயனே!!
அன்பு உள்ளம் கொண்டவனே நமச்சிவாயனே
ஊழி எங்கும் நின்றபோதிலும் நமச்சிவாயனே
இன்பம் துன்பம் யாவையும் நமச்சிவாயனே
இன்பத்தை அளிப்பவனே நமச்சிவாயனே
துன்பத்தை அழித்து பின் இன்பத்தை கூட்டிடும் நமச்சிவாயனே
ஆறு எங்கும் ஏழு எங்கும் எட்டு எங்கும் நவ என்பது என்னவென்று புரிந்த தந்தையே
புரிந்த பொழுதும் மக்களுக்கு புரியவில்லையே
உன்னை தாள் வணங்கியும் என்று மக்களுக்கு புரியவில்லையே.. நமச்சிவாயா என்று சொல்லி உன்னை அழைக்கவே!!! உன்னை அழைக்கவே!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!
பல மக்கள் உன்னைப் தொழுது நமச்சிவாய மந்திரத்தை ஓதுகின்றனர்.
ஆனாலும் புத்தி கெட்டு அறிந்து உண்மை தெரியாமல் பேசுகின்றனர்.
அன்பை மட்டும் உன்னிடத்தில் செலுத்தினால் மட்டும் போதுமே நமச்சிவாயனே
வேறொன்றும் தேவையில்லை என்று உணர்வதில்லையே மனிதனே
மனிதனே அனைத்தும் வேண்டும் அனைத்தும் வேண்டும் என்று உன்னிடத்தில் வருகின்றார்.
நமச்சிவாயா நமச்சிவாய அன்பு நிறைந்தவனே.
அனைவரும் வந்து உன்னை தொழுதெய்தினால் நமச்சிவாயம் அனைத்திலும் இருப்பவனே
வேறொன்றுமில்லை அனைத்தும் நீயே என்று மனிதர் இருந்தால் மட்டும் போதுமே
அனைத்தையும் கருணை மிகுந்து அளித்திடும் நமச்சிவாயனே!!
அன்பு கொண்டு நமச்சிவாயம் என்று ஓதுமே அனைத்தும் கொடுத்து அருளிடுவான் நமச்சிவாயனே
மனதில் என்ன நினைத்தாலும் அதை தன்னை கொடுத்திடாது நமச்சிவாயனே...
அன்பு மட்டும் போதும் என்று நமச்சிவாயனே!!
அன்பு மட்டும் போதும் உன்னை மட்டும் தொழுகையில் எந்தனுக்கு எதுவும் தேவையில்லை என்று வணங்கினால் மட்டும் போதுமே போதுமே நமச்சிவாயனே
கருணை மிகுந்தவனே நமச்சிவாயனே
மானிடர்கள் எல்லாம் உன்னை நினைத்து நினைத்து நமச்சிவாய நமச்சிவாய என்று தொழுது ஒன்றுமில்லாமல் நீயும் கூட அமைதி காத்திடுவாய்.
ஏன் எதற்கு என்று மனிதன் தெரிவதில்லையே!!! அறிவதில்லையே!!!
புரிவதில்லையே!!!
நீ மட்டும் காதினால் அன்பை மட்டும் செலுத்து என்று அவர்களுக்கு ஓதிட அவர்கள் அவ் பக்தியில் நிலையில்லாமல் அதைக் கேட்காமல் நிச்சயம் தன்னில் எங்கெங்கோ ஓட!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே!!
உலகத்தை தன் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் நமச்சிவாயனே
சூல்வினை பெருமூளை பெரு குடல் சிறு குடல் அனைத்தும் இயக்குபவனே. பெருங்குடல் சிறுகுடல் அங்கே இருக்கும் நமச்சிவாயனே.. அதிலிருந்து அனைத்தும் தரும் நமச்சிவாயனே
மனிதனை படைத்து மனிதனை இயக்கி மனிதனை அழிப்பதில் வல்லமையானே
கொடுப்பதிலும் வல்லமையானே கொடுப்பதில் வல்லமை உள்ளோன்தானே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே
உண்மை பொருளே நமச்சிவாயமே உண்மை பொருள் நமச்சிவாயமே
பாவங்களை கொடுத்து தன் புண்ணியங்களை தீர்ப்புடன் சரியாக பாவம் தனையும் புண்ணியம் தனையும் சேர்த்து தன்னை பின் நல்லோர்க்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் நமச்சிவாயனே நமச்சிவாயனே
பாவம் ஆயினும் புண்ணியம் ஆயினும் இவை இரண்டும் நிச்சயம் தன்னில் மனிதனை தாக்கும் என்பதை நிரூபித்து சரியான போக்கை காட்டி உய்ய வைத்திடும் நமச்சிவாயனே
உயர்வு தன்னை மக்களுக்கு கொடுத்திடும் நமச்சிவாயனே
படைத்தலும் காத்தலும் அழித்தலும் நமச்சிவாயனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே
கிரகங்களை ஆட்டிப்படைக்கும் நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!!
உலகமெங்கும் அன்பு பெருக... அன்பு தனில் இருந்தால் அனைத்தையும் வெல்லும்.. சாதனையை கொடுக்கும் நமச்சிவாயனே
திறமையே நமச்சிவாயனே
திறமையை நமச்சிவாயனே
வெற்றியே நமச்சிவாயனே
அன்பனே நமச்சிவாயனே
நண்பனே நமச்சிவாயனே
அகால மரணம் அடைந்திருந்தும் தன் கருணையால் வந்து நின்று நிச்சயம் இல்லாதவர்களை தன் பால் அணைக்கும் சொந்தக்காரனே...
சொந்த பந்தங்கள் அனைத்தும் விட்டொழித்தாலும் கட்டி அணைத்து கொள்ளுபவன் அன்பு நிறைந்த நமச்சிவாயனே.
மக்களுக்கு புரியாமல் அலைந்து திரிந்து நமச்சிவாயனே... புத்தி கெட்ட மனிதர்கள் தன்னை நமச்சிவாய நமச்சிவாய!! என்று புரியாமல் அழைக்கின்றார்களே!!
புரியும்படி நிச்சயம் தன்னில் நீயும் தன்னை பல மடங்கு நிச்சயம் தன்னை பல ஆண்டுகள் நமச்சிவாயனே
நமச்சிவாயன் என்ற நாமத்தை சொல்லி சொல்லி பக்குவங்கள் பட்டுப்பட்டு அன்பு என்னும் உள்ளத்தில் உதிக்கும் நமச்சிவாயனே
உதித்த பிறகு ஒன்றும் தேவையில்லை என்று மனிதன் நின்ற பொழுது
அப்பொழுதுதான் அனைத்தும் தருவாய் நமச்சிவாயனே.
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே.
நிற்பதும் நடப்பதும் உன் செயலாலே!! உயிரையும் இயக்குவது உன் செயலாலே!! அள்ளிக் கொடுப்பதில் வல்லமை படைத்த அருளாளனே
நின் மனதில் பரிசுத்தமானவனே
பிரபுவே! கீர்த்தியே! நமச்சிவாயனே!
உண்மை பொருள் என்பது மெய்ப்பொருள் காண்பதே நமச்சிவாயனே
அன்பனையும் கந்தனையும் ஒன்று சேர்த்து பின் பொறுத்த போதிலும் நமச்சிவாயனே
படைத்தலும் காத்தலும் அழித்தலும் இதனை ஒன்றாக சேர்த்து தொழில் செய்யும் நமச்சிவாயனே
எவ் நிலையில் மனிதன் இருந்தாலும் மோட்சத்தை அளிக்கும் நமச்சிவாயனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே.
துன்பம் ஒன்றை போற்றி அதன் மூலம் வெற்றியை கொடுக்கும் நமச்சிவாயனே
இன்பம் ஒன்றை கொடுத்து வாழ்க்கை ஒன்றும் இல்லை என்று தீர்மானித்த பிறகும் அனுபவிக்கும் வல்லமை பின் கொடுப்பதில் வல்லமையானவனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயமே எங்கும் நிறைந்த நமச்சிவாயனே எதிலும் நிறைந்த நமச்சிவாயனே அகிலம் நிறைந்த நமச்சிவாயனே
கடலில் நிறைந்த நமச்சிவாயனே
சூரியனே
சந்திரனே
ராகுவே
கேதுவே
குருவே
புதனே
நமச்சிவாயனே
செவ்வாயே
சனியே
நமச்சிவாயனே
சுங்கனே
நமச்சிவாயனே
மாந்தியே
நமச்சிவாயனே
மனிதர்கள் ஜாதகங்கள் எப்படி என்று அறியாமல் தெரியாமல் பின் உலவுகின்ற போதிலும் நமச்சிவாயனே
மாந்தி ஒன்று மறைமுகமாக செயல்படுகின்றது என்று தெரியாமல் போனதற்கு காரணங்கள் பல உண்டு நமச்சிவாயனே!!!!
மாந்தியை சொருகியே மனிதன் சொல்வதெல்லாம் உண்மை என்று நிரூபிக்க ஜாதகத்தில் மாந்தியை புகுத்துபவனே!!
வகுத்தவனே வல்லமையில் வல்லமைக்காரனே!!!
வல்லமை தள்ளாமை நேர்மையை பிடித்த போதிலும் இதன் தன்மை நிச்சயித்த வாழ்க்கை தன் அமைக்க முடியவில்லையே
ஏன் இந்த மாற்றங்கள் என்றெல்லாம் மனிதனுக்கு தோன்றுகின்ற பாதையில் மனிதனே அன்பை காட்டி அணைத்து கொண்டமை.. அணைத்து கொண்டு அனைத்தும் தருபவனே நமச்சிவாயனே!!
ஈடு இணை இல்லாத வல்லமை கொண்டவனே
அன்பு மட்டும் போதும் என்று இங்கே அமர்ந்தாய்!! அன்பு மட்டும் போதும் என்று இங்கே அமர்ந்தாய்!!
ஏதும் எனக்கு தேவையில்லை அன்பு மட்டும் காட்டி என்னை தொழுவோருக்கு ஆசிகளை வழங்கி இன்னும் பன்மடங்கு உயர்வுகள் கொடுக்கும் நமச்சிவாயனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
உன்னிலே யான் இருந்தபோது அனைத்தும் நீ காட்ட நமச்சிவாயனே
ஊழ்வினை அகற்றுபவனே நமச்சிவாயனே
இன்பமும் துன்பமும் ஆணும் பெண்ணும் அனைத்தும் நமச்சிவாயனே!!
இரவும் பகலும் நமச்சிவாயனே!!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
பிரம்மாவே !!
விஷ்ணுவே !!
முருகனே !!
கணபதியே !!
சபரியே !!
ஈசனே!!
போற்றியே !! போற்றியே!! போற்றியே!! போற்றியே!!
காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி அனைத்தும் நமச்சிவாயனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
பைரவனை !!துர்கையை !!
நிச்சயம் தன் தலைமுடியில் சுற்றி இருக்கும் நமச்சிவாயனே... வராகியும் அனைத்து உருவையும் காக்கும் ஈசனே
அனைத்தும் நிரூபிக்கும் இறைவன் ஒன்றே நமச்சிவாயனே!!!! அனைவரும் ஒன்றே நமச்சிவாயனே!!!
அனைத்தும் நமச்சிவாயனே!!!
அனைத்தும் நமச்சிவாயனே!!!
திறமையும் சோம்பேறித்தனமும் இருந்தபோதிலும் அனைத்தும் இவைதன் கூட்டி நல்முறையாக்க வெற்றியை தருவதில் பின் வல்லவனே!! வல்லவனே!!!
இங்கெல்லாம் உனையெல்லாம் காண ஆள் இல்லையே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!!
ஆளில்லாமல் நீ இங்கு இன்று தனியாக நிற்க யாங்கள் நிச்சயம் தன்னில்
இங்கோ அமர்ந்து நிச்சயம் உன்னை சுற்றி உள்ளோம்..
இதற்காகவாவது வருவாய் காப்பாய் மனிதனை நமச்சிவாயனே..
ஈசனே நமச்சிவாயனே பெருமானே நமச்சிவாயனே
அனாதையே நமச்சிவாயனே
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயனே!!
மனிதர்கள் தவறு செய்வோரை பொறுத்தருளும் நமச்சிவாயனே!!!
தந்தை போல் இருந்து காக்கும் நமச்சிவாயனே!!
தாயைப் போன்றுதனையும்... நமச்சிவாயனே.
அனைவரையும் சமமாக பார்க்கும் நமச்சிவாயனே
அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!!
அனைத்தும் நீயே நமச்சிவாயனே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 9:47 am 3 comments:
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Share to Pinterest
Wednesday, 22 January 2025
சித்தன் அருள் - 1784 - அன்புடன் அகத்தியர் - அர்கா குபாலா. இந்தோனேஷியா
6/1/2025 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்.அர்கா குபாலா. இந்தோனேஷியா.
ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!
அப்பனே ரகசியத்தை இப்பொழுது சொல்லப் போகின்றேன் அப்பனே நலன்களாகவே.
அப்பனே ஒரு பெரிய கிராமம் அப்பனே இங்கு உண்டு அப்பனே
அப்பனே இதை தன் நிச்சயம் அப்பனே அதாவது பின்.. யான் நன்மைக்காக இவ்வுலகத்தின் நன்மைக்காக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே இவை தன் உணர்ந்தேன் அப்பனே.
பின் அதாவது இன்னும் இரு வருடம் தான் பின் மிஞ்சி காணப்படுகின்றது.
இதனால் பின் நிச்சயம் அனைத்தும் கூட அப்பனே பின் எதை என்று யான் கூற!!!.... அப்பனே
இதனால் அப்பனே அறிந்தும் கூட.. பின் இவர்கள் எல்லாம் அழிவார்கள் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே.
ஆனால் நிச்சயம் சில விஷயங்களை கூட யான் பின் மறைத்து சொல்ல வேண்டிய சூழ்நிலை.
அப்பனே ஏனென்றால் அப்பனே அவையும் கூட சாபமாக போய்விடும்...
குருநாதர் இன்றைய சூழ்நிலை வாக்கு
அதனால் தான் அப்பனே நிச்சயம் அதிக பேர் அப்பனே பின் ஏன் எதற்கு சரியாக விடை அறிந்தும் கூட...!!!
(குருநாதர் அடியவர்களுக்கு வாக்குகள் தரும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யான் பார்த்துக் கொள்கின்றேன்!!! யான் பார்த்துக் கொள்கின்றேன்... என்று கூறுவதன் முழு அர்த்தம் புரியாமல் குருநாதர் சரியான விடையை கூற மறுக்கின்றாரே... என்ற எண்ணங்கள் இருக்கின்றது அதற்கு குருநாதர் கூறிய விளக்கங்கள்)
அப்பனே ஏனென்றால் அதை சொல்லி அப்பனே யான் பார்த்துக் கொள்கின்றேன் என்றால்? அப்பனே!!!! பெரிய விஷயங்கள் அப்பனே பின் நிற்கின்றது என்பேன் அப்பனே (பெரிய விஷயங்கள் என்றால் கர்மாக்கள் பாவங்கள்)
அதாவது விதி தனில் கூட அப்பனே பெரிய பாவங்கள் நிற்கின்றது.
இதனால்தான் அப்பனே அவையெல்லாம் எப்படி? நீக்க வேண்டும்?? ஏது பின் எப்படி? பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் யான் அறிந்து தான் செய்வேன் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே நிச்சயம் பின்.... ஆனால் மனிதர்களோ பின் அவை இவை என்று அதற்குள்ளே அப்பனே!!! நிச்சயம் பின் சென்று அப்பனே தோல்வியை சந்தித்து மீண்டும் வந்து அப்பனே பின் அனைத்தும் இழந்து பின் என்னிடத்தில் வருகின்றார்கள் அப்பனே.
(குருநாதர் பொறுத்திரு!! யான் பார்த்துக் கொள்கின்றேன் என்பதை முழுமையாக உணராமல் அங்கு அதைச் சொல்கின்றார்கள் இங்கு இதைச் சொல்கின்றார்கள் அதை பின்பற்றி பல பரிகாரங்கள் செய்து அது தோல்வியில் முடிந்து அதன் மூலம் கர்மாக்களை சம்பாதித்து மீண்டும் குருநாதரிடம் வருகின்றார்கள் இதை தனிநபர் வாக்குகளில் பல பேருக்கு சில தேவையற்ற இடங்களுக்கெல்லாம் சென்று தேவையில்லாத பரிகாரங்களை எல்லாம் செய்ததால் மேலும் கர்மாக்கள் அதிகரித்து விட்டது என்று கூறி இருக்கின்றார் அதன் அடிப்படையில் இங்கு இந்த விளக்கம்)
இதனால் அப்பனே என்ன பயன்?????
அகத்தியன் பார்த்துக் கொள்கின்றேன் என்றால்..
.(குருநாதர் பக்தர்களுக்கு உரைக்கும் வாக்கில் அப்பனே நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று உரைப்பது)
அப்பனே அகத்தியன் பார்த்துக் கொள்வான் என்ற அப்பனே நம்பிக்கை வர வேண்டும் என்பேன் அப்பனே..
இந்தோனேஷியா தேசத்தில் ஏற்கனவே குருநாதர் வந்த பொழுது நடந்த சம்பவம்
அப்பனே இதனால் அப்பனே இங்கு வந்து விட்டேன்... அப்பனே இங்கு அனைவருக்கும் போதனைகள் இட்டேன் அப்பனே.
இவ்வாறு இருந்தால் நன்மை!!!
இதனால் பின் உங்கள் குழந்தைகளோடு வாழலாம் என்றெல்லாம்.. அப்பனே
ஆனாலும் அப்பனே யாரும் கேட்கவில்லையப்பா!!
ஆனாலும் நிச்சயம் வந்து விட்டான் இவன்...(அகத்தியரை பார்த்து)
இவந்தனுக்கு என்ன தெரியும் ??
என்றெல்லாம் சிலர்.
பின் சிலர் இவன் சொல்வதெல்லாம் பொய்...
பின் அறிந்தும் கூட இன்னொருவன் கூட இப்படி எல்லாம் அதாவது இவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட. !!!
குருநாதர் இன்றைய சூழ்நிலையில் வாக்கு
அதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக உங்களுக்கு பக்குவப்படுத்தி எது உண்மை?? எது பொய்?? என்பதையெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே சரியாகவே பக்குவங்கள் பட்டுவிட்டால்... அப்பனே அனைத்தும் நீங்களே வெல்வீர்களாக!!!
இதனால் அப்பனே அனைவரையும் கூட இங்கு இருப்பவர்கள் (இந்தோனேசியாவில் குருநாதர் ஏற்கனவே முன்பு வந்து அவர்களை நல்வழிப்படுத்த அதாவது அழிவை முன்கூட்டியே அறிந்து நல்வழிப்படுத்த) அதாவது அழிவு நிலைக்கு செல்கின்ற பொழுது யான் சொல்லியதை இங்கிருந்தே இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே !!
அந்த சமயத்தில் இந்தோனேசியாவில் உள்ள அந்த மக்களுக்கு குருநாதர் கூறிய உபதேசம்
அனைவருமே தியானத்தில் சரியாகவே அமர்ந்து பின் மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். வெளியிட வேண்டும். என்பதையெல்லாம் அப்பனே சொன்னேன் அப்பனே.
ஏன் இதற்கும் அப்பனே பின் கிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டப்பா.
அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே சரியாகவே அப்பனே ஆபத்து காலத்தில் அமைதியாகவே பின் உட்கார்ந்து விட்டால்.. அப்பனே நிச்சயம் அறிந்தும் பின் எதை என்று புரிந்தும்.. நிலைமைகள் கூட அப்பனே அனைத்தும் மாறி விடுமப்பா.
இதனால் பின் சில மாதங்கள் அமைதியாக தியானங்கள் செய்யுங்கள் என்று சொன்னேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் பின் நிச்சயம் பின் அவரவர் குலதெய்வத்தை எல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே சில ரகசியங்கள் பின் சொன்னேன் அப்பனே.
ஆனாலும் யாரும் அதை பொருட்படுத்தவில்லை அப்பா.
ஆனாலும் நிச்சயம் அப்பனே.. ஈசன் என்னிடத்தில் முறையிட்டு விட்டான்.
அகத்தியனே!!!! அழிவுகளை ஏற்ப்படுத்த போகின்றேன்!!!
உன்னால் முடிந்தால் தடுத்துக்கொள் என்று!! பின் அழகாகவே.
ஆனாலும் நிச்சயம் பின் வந்து விட்டேன் அப்பனே..
குருநாதர் இன்றைய சூழ்நிலை வாக்கு
இது போன்று தான் அப்பனே மக்கள் இக்கலி யுகத்தில் அப்பனே... நல்லதை சொன்னால் பின் நம்ப மாட்டார்கள் என்பேன் அப்பனே.
தீயவை சொன்னால் நம்பி விடுவார்கள் என்பேன் அப்பனே.
அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் முதலில் அப்பனே நிச்சயம் அதாவது மாமிசத்தை உட்கொள்ளாதீர்கள்.. இதை நிச்சயம் நீங்கள் உட்கொள்ளாமல் இருந்தாலே.. நீங்கள் காக்கப்படுவீர்கள் என்று. (பிழைத்துக் கொள்வீர்கள் என்று)
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!
அப்பனே பின் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் கூட அப்பனே.. அதாவது ஒவ்வொரு அறிந்தும் கூட அப்பனே பல வகைகள் அப்பனே பின் அதாவது இன்னும் ஆடுகள் அப்பனே பசுமாடுகள் இன்னும் அப்பனே பின் பல ஜீவராசிகள் உள்ளது என்பேன் அப்பனே.
அப்பனே அதற்கு தெரியும் அப்பா... ஒவ்வொரு விதத்திலும் கூட பின் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது... அதை உட்கொள்ளும் என்பேன் அப்பனே.. நிச்சயம் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அதனால்... பலமான உணவுகளை தான் அவை உட்கொள்ளும் என்பேன் அப்பனே.
அப்படி உட்கொள்ளும் பொழுது அப்பனே பின் அதனை மனிதன் தின்றால் அப்பனே நிச்சயம் பின் பலமாக உள்ளே மோதல் ஏற்படுமப்பா..
ஆனாலும் பின் பல வாக்குகளிலும் செப்பி விட்டேன் அப்பனே நிச்சயம் அதை தன் கிரகங்கள் கூட அப்பனே!!...
(பஞ்சவடி வாக்கு பாகம் 2 சித்தன் அருள் 1225
சித்தன் அருள் 16 42 மீர்காட் காசிவாக்கு
சித்தன் அருள் 1662 முன்னேஸ்வரம் வாக்கு
இவ் வாக்குகளில் எல்லாம் அசைவம் உண்டால் அந்த ஜீவராசிகளின் அணுக்கள் மனித உடலுக்குள் இருக்கும் அணுக்களோடு சேராமல் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதை புழுக்கள் உருவாகும் என்பதை ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார் அனைவரும் மீண்டும் படித்து உணர்ந்து கொள்ளவும்)
அப்பனே பின் அதி வேகமாக இங்கே அப்பனே பின் அதை இயக்குமப்பா!!
இவ்வாறு இயக்குகின்ற பொழுது கோபங்கள் காமங்கள் அப்பனே இன்னும் தீய எண்ணங்கள் எல்லாம் பின் மனதில் உதித்து விடுமப்பா
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அவை மட்டுமில்லாமல் பின் அதாவது நீ பக்கத்தில் உள்ளாயா... உன் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அப்பனே சரியான இயக்கத்தில் இயங்க விடாமல் அது வேகமாக இயங்கி கொண்டிருக்கும் என்பேன் அப்பனே.
இதனால் அவந்தனுக்கும் அக் கர்மா என்பேன் அப்பனே...
(ஒருவர் அசைவம் உண்ணுகின்றவர் அருகாமையில் இருந்தாலும் அவருடைய இயக்கங்கள் மற்றவரையும் தாக்கும் கர்மாக்கள் ஏற்படும்)
அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய அப்பனே
கெடு!!... நீ மட்டும் கெடு!!
அப்பனே மற்றவர்களை கெடுக்காதே!!!... அறிந்தும் எதை என்று புரிய!!!
அதாவது அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் தான் இங்கு சொல்லிக் கொண்டிருந்தேன்..(இந்தோனேஷியாவில் முன்பு குருநாதர்)
கெடு... மற்றவரை கெடுத்து பின் சாய்க்காதே!! என்றெல்லாம்!!
ஆனாலும் அனைத்தும் என்னால் முடியும் அப்பா... அறிந்தும் கூட!!
எதை என்று கூட இதனால் அப்பனே
ஒருவனை திட்டினேன். (அந்த ஊரில் இருந்த குருநாதர் பேச்சை மதிக்காமல் இருந்த ஒருவனை)
நீ மட்டும் பின் சொன்னால் கேட்க மாட்டேன் என்கின்றாய் அதனால் பின் நிச்சயம் நீ மட்டும் விலகிவிடு!!!! என்றெல்லாம்... ஆனாலும் அவனும் கூட நிச்சயம்... எங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் கூட அனைவரும் சொந்தக்காரர்கள் தான்.
இதனால் நிச்சயம் இவை எல்லாம் ஏற்கப் போவதில்லை என்று!!
ஆனாலும் நிச்சயம் பின் ஆடு மாடுகள் பின் அனைத்தையும் வெட்டுவோம் பார்ப்போம் என்று!!...
பின் அதாவது அப்பனே வந்தது கோபம்!!!...
ஆனாலும் பின் ஈசனோ பின்.... அகத்தியனே!!! பொறுத்திரு!!!
பின் இதற்கெல்லாம் விடை நிச்சயம் அறிந்தும் கூட!!! இதனால் தான் இவையெல்லாம் வரும் காலத்தில் இங்கு உள்ளோர்கள் திருந்துவார்கள் என்றெல்லாம்.
பின் யானும் நிச்சயம் சிவபெருமானே!!!! நிச்சயம் அறிந்தும் கூட பின் பொறுத்திரு!!!...
ஏன் எதை என்று கூட பல கோடி அறிந்தும் கூட இவ்வுலகத்தில் மக்கள் இருக்கின்றார்கள்... ஏன் இங்கெல்லாம் விளையாடுகின்றாய்... என்பதையெல்லாம்!!
ஈசன் !!!
நிச்சயம்.. பின் எங்கெல்லாம் நிச்சயம் அதிகம் என்னுடைய வாகனமான பசு மாடுகளை கொன்று குவித்து வருகின்றார்களோ... அங்கெல்லாம் நிச்சயம் உண்மை இருக்காது... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அறிந்தும் கூட பின் எவ்வளவு படிப்புக்கள் படித்தாலும் அவன்... ஞானம் உள்ளவனாக இருக்க மாட்டான்.
அவை மட்டுமில்லாமல் பின் எவ்வளவு பின் அறிவுகள் இருந்தாலும் இழி (கீழான )செயல்களை கூட பின் செய்து கொண்டிருப்பான்... என்பவையெல்லாம் அப்பனே... ஈசனே!!!
இதனால் தான் அப்பனே ஆனால் பின் ஈசன் சொல்லிவிட்டான்.
ஆனாலும் சில நேரத்தில் கூட நன்மைகளாக. செய்வேன் விட்டுவிடுவேன் பிழைத்துக் கொள் என்று..(ஈசன் சில நேரங்களில் கருணையோடு விட்டு விடுகின்றார்)
ஆனாலும் அதே போல் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது ஈசன் சொன்னான் ஒரு வார்த்தை!!!!
அறிந்தும் எதை என்று புரியப் புரிய பின் அகத்திய மாமுனிவரே!!!!
நிச்சயம் அறிந்தும் கூட பின் படைத்தவனுக்கு தெரியாதா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் எப்பொழுது படைப்பது??? எப்பொழுது அழிப்பது??... என்று.
ஒழுங்காகத்தான் படைத்தேன்... இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று!!
நிச்சயம் ஆனால் மீண்டும் யான் அப்பனே நன்மைகளையே சொன்னேன் மனிதனுக்கு.
ஆனாலும் இதில் கூட ஒருவன் அவை பொய் இதையெல்லாம் செய்து விடாதே... என்றெல்லாம் அப்பனே...(குருநாதர் செய்த உபதேசங்களை எல்லாம் பொய் என்று)
குருநாதர் தற்போதைய சூழ்நிலையில் கூறிய வாக்கு
இதனால்தான் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் கூட அப்பனே...... ஆனாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே...
ஒருவன் இருக்கின்றான் அப்பா... அவன் அதாவது அவனுக்கு நல்லதை பின் சொன்னேன் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே....
ஆனால் அவன் இவையெல்லாம் நம்பக்கூடாது பொய் என்று அப்பனே...
இப்படி இருந்தால் எப்படியப்பா உலகம் திருந்துமப்பா???
அப்பனே அறிந்தும் கூட இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதை சொன்னால்... பின் எதை என்று அறிய அறிய அப்பனே.... யார் வேண்டுமானாலும் எதை என்று கூட நல்லதை சொல்லலாம் என்பேன் அப்பனே.
அப்பொழுதெல்லாம் அப்பனே உயர்ந்தவர்கள் நல்லதை சொன்னார்கள் அப்பனே அறிந்தும் கூட பின் உயர்ந்தவர்கள் சொன்னால் கேட்க வேண்டும்.
ஆனால் பின் அப்பனே தீயவைகளை எல்லாம் செப்பி விட்டு சென்று விட்டார்களப்பா!!
அதேபோலத்தான் இக்கலி யுகத்தில் கூட யாங்கள் நிச்சயம் தர்மம் ஏந்துபவர்களாக நிச்சயம் அப்பனே ஏதும் இல்லாமல் அப்பனே கிழிந்த சட்டைகளோடு அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... பின் அறிந்தும் கூட அதாவது நீராடாமல் கூட பின் நிச்சயம் வருவோம் அப்பனே.... சில கர்மங்களை கூட எடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம் அப்பனே
இன்னும் அப்பனே இப்படித்தான் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய ஒரு பெண்மணிக்கும் கூட அழகாக காட்சியளித்து அப்பனே தந்தேன்.
சில சில பாவங்களைக் கூட நிச்சயம் யான் இருக்கின்றேன் யான் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.
ஆனாலும் அவள் கேட்கவில்லை... அதனால் உண்மையில் சென்று நிச்சயம் அவளிடத்தில் பின் தேநீர் அருந்திவிட்டு அப்பனே சென்று விட்டேன் சில கர்மாக்களையும் கூட எடுத்து சென்று விட்டேன் அப்பனே.
இந்தோனேஷியாவில் முன்பு குருநாதர் வந்து அவர்களுக்கு செய்த உபதேசம்
எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் இங்கே பல மனிதர்களுக்கு கூட இவ்வாறு உரைத்தேன் அப்பனே.
ஆனாலும் எவரும் நம்பவில்லையப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் எதை என்று கூட!!!
பின் இவன் சொல்கின்றான்...(அகத்தியர்)
இவன் சொன்னால் நாம் கேட்க வேண்டுமா????? என்று நிச்சயம் பின் அனைத்து ஜீவராசிகளையும் கொன்று குவியுங்கள் என்று
ஆனாலும் பின் அனைவரும் கொன்று குவித்து ஒரு ஆட்டமே... பின் இட்டிட்டு...
பின் வேண்டாம் என்று சொன்னேன் அப்பனே..!!!
நிச்சயம் பின் ஆடி பாடி அப்பனே பின் அனைத்தையும் கூட கொன்று விட்டு இவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
ஈசனுக்கு உடனடியாக கோபம் வந்தது... அனைத்தையும் அழித்து விட்டான் அப்பனே.
அப்பனே புரிகின்றதா???
அப்பனே அதனால்தான் மீண்டும் இத் தேசம் அழிந்து கொண்டே செல்கின்றது.
அதனால்தான் அப்பனே அங்கங்கு நிச்சயம் அப்பனே பின் என்னுடைய எவை என்று அறிய அறிய அப்பனே சிலைகளை ஏற்படுத்தி அப்பனே நல்வழிப்படுத்த போகின்றேன் அப்பனே
நிச்சயம் மாறும் அப்பா..
அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் யான் காத்திட அதாவது எந்தனுக்கும்( சக்திகள் உண்டு)எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய!!!
அப்பனே பல வழிகளில் கூட அப்பனே ஈசன் எவை என்று புரிய சொல்லிக் கொண்டே இருப்பான்...
இவ்வாறு அழிக்கப் போகின்றேன்!!!.. அவ்வாறு அழிக்கப் போகின்றேன்.. என்று!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஆனாலும் என்னாலும் காக்க முடியும் நிச்சயம் இவ் உலகத்தை அப்பனே எதை என்று புரிய புரிய.
ஆனால் அப்பனே மனிதனால் தான் அப்பனே!!! (அழிவுகள்)
ஆனாலும் பின் நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றேன் யான்!!!
ஆனாலும் கேட்கவில்லையே... என்று அறிந்தும் கூட!
இதனால்தான் அப்பனே இன்றளவும் கூட அப்பனே ஏங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... பல பரிசுத்தர்கள்!!!
அப்பனே மீண்டும் அவர்களுக்கு அப்பனே பின் ஆன்மாக்களுக்கு (பரிசுத்த ஆன்மாகளுக்கு) அப்பனே பின் முக்தியும் அப்பனே எவை என்று அறிய அறிய பின் புண்ணியத்தையும் கொடுத்து... மீண்டும் இங்கே எல்லாம் பிறப்பெடுத்து உள்ளார்கள் அப்பா.
இதனால் அப்பனே அவர்கள் எல்லாம் அப்பனே எவை என்று கூட தீய வழிகளில் செல்வோரை எல்லாம் நல்வழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எவை என்று புரிந்தும் கூட இன்னும் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.
அதனால் தான் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய அப்பனே.. நல் மாற்றங்கள் அப்பனே இன்னும் அப்பனே.. அங்கங்கு அப்பனே நிச்சயம் யானே வந்து அப்பனே தவக்கோலத்தில் அமர்வேன்... அப்பனே அப்படியே கல்லாக மாறிவிட்டு அப்பனே.. பின் சக்திகளை விட்டுவிட்டு சென்று விடுவேன் அப்பனே.
வணங்கினால் நன்று!!!
அதாவது அப்பனே வணங்கச் சொல்லவில்லை... எதை என்று கூட அதாவது பின் என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டாலே கர்மா நீங்கிவிடும் என்று!!! யான் அமர்ந்து எவை என்று கூட கல்லாகவே!!!
சிலர் அப்பனே பிடித்தனர்!!!... தப்பித்துக் கொண்டனர் என்பேன் அப்பனே... சிலர் பிடிக்காததால் அப்பனே வேதனை அடைந்து அப்பனே... எதை என்று கூட இப்பொழுது கூட எதை என்று அறிய அறிய!!.....
இதனால் தான் அப்பனே நன் முறைகளாக அப்பனே நிச்சயம் எவை என்று கூட... இன்னும் நோய்களும் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அழிவுகள்.. கூட பின் விபத்துக்குள்ளாவதும் கூட நிச்சயம் அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் அதாவது....
மனிதன் சொல்வதை !!!??????!
அப்பனே.... அதாவது ஈசன் கோபம் கொண்டிருந்தான்!...
(மனிதர்கள் சொல்வது) பின் நீ சொல்வது நடந்து விடுமா? என்று!!
நிச்சயம் அப்பனே அடுத்த வகையில் ஏதோ வகையில் அப்பனே பின் எவை என்று கூட அப்பனே செய்கின்றான் அப்பனே.
அதனால் அப்பனே... பின் மனிதர்கள் அப்பனே இன்னும் அவை இவை என்றெல்லாம் நடக்கும் என்று அப்பனே இதெல்லாம் பொய் என்பேன் அப்பனே.
நிச்சயம் மனிதனால் அப்பனே பின் எதை என்று கூட எதையும் கணிக்க முடியாதப்பா!!! அனைத்தும் பொய் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் இன்னும் குறிப்பாக அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே மாற்றம் ஏற்படுவது உறுதி!!
ஆனாலும் அப்பனே... நிச்சயம் அப்பனே அழிவுகள் வருவதும் உறுதி.
ஆனாலும் அப்பனே நீங்கள் என்ன எதை என்று புரிய.. அப்பனே எதை என்று அறிய அறிய... நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அப்பனே.. நல் முறையாகவே நல்மனதாகவே பின் செயல்பட்டுக் கொண்டிருந்தாலே அப்பனே பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே.
எவை என்று அறிய அறிய கவலைகள் இல்லை.. அப்பனே.
நிச்சயம் அப்பனே யானும் எவை என்று புரிய அப்பனே எதை என்று அறிய இங்கெல்லாம் மக்களை பின் பண்படுத்தி அப்பனே எப்படி எல்லாம் சிறப்புக்கள்.. இறைவனிடத்தில் பின் எவை என்று.. கூறி காக்க வேண்டுமோ...... அப்பனே அவ்வாறெல்லாம் நிச்சயம் உங்களை காத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. நிச்சயம் அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதையே கேளுங்கள்!!! அப்பனே பின் அதாவது பின் அதாவது நல்லதை கேளாமல் இருந்தாலும் அப்பனே காதுகளில் நோய்கள் வந்துவிடும் அப்பா...
அப்பனே நன்றாகவே நல்லதையே முகர வேண்டும் மூக்கின் வழியே அப்பனே.
அவ்வாறு முகரவில்லை என்றால் அப்பனே பின் மூக்கும் எதை என்று அறிய அறிய அதன் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும் அப்பா.
அப்பனே நல்லதையே காண வேண்டும் அப்பனே கண்களால் எதை என்று அறிய அறிய இவைகள் எல்லாம்.. சொல்லிவிட்டார்கள் அப்பனே..
மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே அவ்வாறே காணாவிட்டால் அவ்வாறே பின் எவை என்று.. அறிய அறிய கண்களில் நோய்கள் வரும் அப்பா. அப்பனே பற்கள் பின் அதாவது நல்லதையே பின் எவை என்று அறிய அறிய பொய்கள் சொல்லக்கூடாது என்பேன் அப்பனே... அவ்வாறு அதற்கு மாறாக சொன்னால் அப்பனே.. பற்களும் கூட விழுந்து விடும் என்பேன் அப்பனே... வயதான காலத்தில் உண்ணவும் முடியாது என்பேன் அப்பனே.
நிச்சயம் இதே போல தான் அப்பனே அழகாக திருத்தலங்களை நோக்கி காலடி வைக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் அப்பனே கால்களில் நோய்கள் அப்பனே!!
இறைவனை அப்பனே துதித்து பாட வேண்டும் அனுதினமும்... படைத்தவனையும் கூட பின் கையெடுத்து வணங்க வேண்டும் அப்பனே இறைவனை கூட எதை என்று அறிய அறிய!!
அதனால் தான் அப்பனே அதாவது... நன்றி அதாவது அப்பனே பின் எதை என்று அறிய... எதை என்று கூட !!!
இறைவனை யாரும் வணங்கச் சொல்லவில்லை அப்பனே !!! அதாவது நன்றி கூற வேண்டும் !!
நிச்சயம் இறைவா நன்றாக படைத்தாய்!!! என்று!!!
என்று அப்பனே நிச்சயம் அப்பனே நன்றாகத் தான் அனைவரையும் படைத்திருக்கின்றான்... ஆனாலும் அப்பனே மனிதன் நிலைப்பாடு !! நிலைப்பாட்டிற்கு மாறாகவே எவை என்று தோன்றி அப்பனே எவை என்று அறிய அறிய அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!!
அதனால் இரு கரம் கூப்பி அப்பனே நன்றி செலுத்துதல் வேண்டும் என்பேன் அப்பனே.
அவ்வாறு நன்றி செலுத்தாத கைகள் அப்பனே இருந்தும் பயனில்லை... கால்கள் பின் நல்லதை நோக்கி செல்ல.. அப்பனே பின் இயலாமல் அவ்வாறு கால்கள் இருந்தும் பயனில்லை... அப்பனே எவை என்று கூட அனைத்திற்கும்.. இதே போலத்தான் என்பேன் அப்பனே.
இன்னும் எப்படி? எல்லாம் நோய்கள் ஏற்படுகின்றது என்பதை எல்லாம் அப்பனே பின் கூர்ந்து அப்பனே பின் எவை என்று கூட பின் எவை என்று கூட கவனியுங்கள் அப்பனே... நிச்சயம் சொல்வேன் என்பேன் அப்பனே..
இங்கெல்லாம் அழிவுகள் அப்பனே எதை என்று... எப்படி எல்லாம் தடுக்கலாம் என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே.
யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நோய்களின் காலமப்பா.. நோய்களின் காலமப்பா..
ஆனாலும் அப்பனே அதனைக் கூட எவை என்று புரிய அப்பனே!!!
நிச்சயம் அப்பனே அனைவருக்கும் எம்முடைய நல்லாசிகள் என்பேன் அப்பனே..
நிச்சயம் இங்கிருந்தே அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய.. அப்பனே எவை என்று கூட என் பக்தர்களுக்கும் கூட வர முடியவில்லையே... அகத்தியனை பின் காண செல்ல முடியவில்லையே.. என்றெல்லாம் பின் உண்மையான பக்தர்கள் கூட இருக்கின்றார்கள்... அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே தருகின்றேன் என்பேன் அப்பனே.
ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!! என்னை நினைத்தாலே போதும்ப்பா!
யான் வருகின்றேன் அழகாகவே... ஆசிகளோடு அப்பனே!!..
ஆசிகள்!!! ஆசிகள்!!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 9:25 pm 6 comments:
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Share to Pinterest
Tuesday, 21 January 2025
சித்தன் அருள் - 1783 - அகத்தியப்பெருமானின் விளக்கம்!
அப்பனே! அனைவருக்கும் சொந்தக்காரன் யான் என்பேன். இருப்பவன், இல்லாதவன், பொய் சொல்பவன், பொய் சொல்லாதவன், ஏழை, பணக்காரன், இவ்மதம், அவ்மதம் என்ற வித்யாசம் எந்தனுக்கு இல்லை அப்பா. அனைத்தும் ஒன்றுதான் என்பேன். தவறு செய்தானாலும் தன் பிள்ளையை ஏற்றுக்கொள்ளும் தாய் போல, அவ்வாறே அகத்தியனும் தான்.
அடியவர்: எங்கோ கேள்விப்பட்டேன், இனி வரும் காலங்களில் சனியவனே, சந்திரனை சார்ந்து தான் வேலை செய்யும் என்று!
அகத்தியர்: அதனால் தான் மனிதன் கூட பைத்தியக்காரன் போல் உளறுவான் என்பேன். அதனால் தான் சந்திரனை நெருங்கி வந்த சனியவனை யான் சற்று தள்ளிவிட்டேன். இது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இனி வரும் காலங்களில் மனிதனுக்கு பல புதுமையான விஷயங்களை கற்று கொடுப்பேன். அப்பனே! இவை எல்லாவற்றையும் சுவடிகளில் எழுதி வைத்துள்ளேன். ஆனால், காசுக்காக கைபற்றி வெளிநாட்டவரிடம்......... விற்றுவிட்டார் அப்பா. அதனை கொண்டு புதுப் புது விஷயங்களை கண்டு பிடித்து விட்டார்கள் அப்பா. அப்பனே! யாங்கள் செய்யாதது இவ்வுலகத்தில் ஏதும் இல்லை அப்பா.
அப்பனே! மனிதனாக பிறந்து விட்டாலே, குடும்பத்தில் பிரச்சினை வரும், நோய்கள் வரும். இவை எல்லாம் நீங்களே தீர்த்துக் கொள்ளவேண்டும். திருமணம் எப்பொழுது நடக்கிறதோ, அப்பொழுதே பாபம் ஏறிவிட்டது என்று பொருள். ஏதன் மீது நீ ஆசை கொள்கிறாயோ, அதன் வழி பாபத்தை ஏற்படுத்துவான் இறைவன். இப்படியே மனித வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பின் எங்கப்பா, இறைவனை பற்றி யோசிப்பான். ஆகவே, திருமணம் என்பது கர்மா தான்.
மனிதன் கோபப்பட்டால், உடல் வலுவிழந்து போகும். அப்பனே! கோபப்பட்டால் நீ அடைவது என்ன? அப்பனே அழிவுதான் நிச்சயம். முக்கால் பங்கு அழிவு, கோபத்தினால் தான் வருகிறது என்பேன். இதை யாரும் உணர்வதில்லை அப்பா. உண்மையான ஞானி அறிவானப்பா. பக்தியில் இருந்து கொண்டே கோபபடுபவர் உண்டு. ஆதலால், அவனுக்கே நோய்கள் வரும்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வேலை இருக்கின்றதப்பா. அதை தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் அப்பா!
இனி வரும் காலங்களில், கூறப்படுவதை யார் யாரோ எடுத்து செல்வார்களப்பா. புத்தகமாக வெளியிடுவார்களப்பா.
குடும்பத்தில் இருந்தும், கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்றால், முக்தி கிட்டும். திருமணம் செய்துவிட்டு, அனைவரையும் தவிக்கவிட்டு, கடமைகளை செய்யாமல் சென்றால், அது தான் மிக கொடிய கர்மாவை ஒருவனுக்கு சேர்க்கும். திருமணம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு ஆன்மீக உணர்வே இல்லை என்றால், அப்பொழுது அந்த ஒருவருக்கு தெரியும், இவ்வுலகில் அனைத்தும் பொய் என்று. அப்போது தானாக இறைவனிடம் வந்து தான் ஆகவேண்டும்.
இறைவனை வணங்கினாலும் கர்மாவை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதே பல ஞானிகளின் வாழ்க்கை உணர்த்துகிறது. ரமண மஹரிஷியின் வாழ்வு அப்படிப்பட்டதுதான்.
அண்ணாமலையாரிடம் அருகில் இருந்தாலுமா?
அப்பனே! இறைவன் நியாயமானவன். தன் பிள்ளையே தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பான். உடம்பை எடுத்துவிட்டால், கர்மாதான். அதேபோல் தான் மனிதன். தன் பிள்ளை தவறு செய்தால், தண்டித்தால், வெற்றி என்பது அப்பிள்ளைக்கு நிச்சயம் உண்டு.
மனிதனின் கட்டுப்பாடு கிரகங்கள் கையில் உள்ளது. ஆகவே, கிரகங்கள் விலகி வழிவிட்டால் தான் இறைவனிடமே செல்ல முடியும். இறைவனை நெருங்க நெருங்க, கிரகங்கள் தடுக்குமப்பா. அடித்து போடுமப்பா. அப்படியும் இறைவன் தான் வேண்டும் என்று சென்றால், போய் தொலையட்டும் என்று விட்டுவிடும். அப்பொழுதுதான் உண்மையான பக்தி பிறக்கும், உண்மையான ஞானம் பிறக்கும்.
தெய்வத்தின் பெயரை வைத்துக்கொண்டு தவறு செய்கிறவனுக்கு கர்மா வேகமாக ஏறும். அதனால் தான் அப்பா! "நாயினும் கடையேன்" என்று சொல்லிவிட்டான் அப்பா. புரிகின்றதா அப்பா?
தெய்வத்துக்கும் எனக்கும் பூசை செய்துவிட்டு, புண்ணியத்தை தெடிக் கொள்கிறேன் என்று, யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன், "அகத்தியா எனக்கு இதை அருளேன், இதை கொடேன்!" என்று வேண்டிக் கொள்கின்றனர். இறைவனுக்கும், அகத்தியனுக்கும், எதை எப்போது கொடுக்க வேண்டும் என தெரியும் என்று உணர்வதே இல்லை.
அப்பனே! அனைத்தையும் உணர்ந்தவர்கள், சித்தர்கள்.
யான் தீபம் ஏற்ற சொன்னதே மற்றவர்களுக்காகத்தான்.
அடியவர்: ஜோதிடம் பார்ப்பவனுக்கு கர்மா வந்து சேரும் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இந்த ரகசியத்தை வேறு யாருமே இதுவரை சொன்னதில்லை, நீங்கள்தான் முதலில் சொல்கிறீர்கள். இப்படிப்பட்ட கலையை ஏன் இறைவன் பூமிக்கு கொண்டுவந்தார்? அதுவுமின்றி, சாதாரண மனிதரிடம் ஏன் இதை படிக்க கொடுத்தார்?
அப்பனே! சொல்கின்றேன். முன் காலங்களில் ஜாதகன் 48 நாட்கள் விரதமிருந்து பின்னர் தான் சோதிடனிடம் ஜாதகம் பார்க்க போக வேண்டும். அதுமட்டும் அல்லாமல், நவகிரகங்களின் காயத்ரி மந்திரத்தை உருவிட்டபடி, ஏதேனும் ஒரு உயிரினத்துக்கு தினமும் உணவளித்தபின் செல்ல வேண்டும் அப்பா! அது மட்டும் இல்லாமல் நன் முறைகளாகவே தாய் தந்தையரையும் மதித்து, குரு சொல்வதையும் கேட்க வேண்டும் அப்பனே! இவை எல்லாம் முன்னரே செய்தபின்தான், ஜாதகத்துடன் செல்வார்கள் அப்பா. இதனால், சொல்பவனுக்கு நிச்சயம் கர்மா இல்லை அப்பா. இப்பொழுது அப்படியா நடக்கின்றது அப்பா? அப்பனே கிரகங்கள் கூட, தர்மத்தை கடைபிடித்தால், அனைத்து நன்மைகளையும் செய்யும் அப்பனே. இப்படித்தான் முன் காலங்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்பனே. இவைகளை எல்லாம் சொல்பவன் ஜாதகனிடம் கூறவேண்டுமப்பா! இல்லாவிடில், அந்த ஜாதக தோஷ பலன், சொல்பவன் முதுகில் ஏறுமப்பா. இப்பொழுதெல்லாம் காசுக்காக செய்கிறார்கள், சொல்கிறார்கள். போகட்டும் என்று விட்டு விடுகிறேன் நான்.
அகத்தியப் பெருமானுக்கு மிக்க நன்றி! விளக்கம் நிறைவு பெற்றது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 3:01 pm 5 comments:
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Share to Pinterest
Monday, 20 January 2025
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு!
5/1/2025 அன்று கொங்கணர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பானன் காண்டி.இந்தோனேஷியா.
அண்ட சராசரத்தை எல்லாம் ஆளுகின்ற ஈசனாரே!!!!
உந்தனை பணிந்து அழகாக குருநாதனின் புகழை எடுத்து எடுத்து பின் மனதிலே பின் நின்று பின் அனைத்தும் காக்கும் இறைவா!!!! அகத்தியரே!!!
ஞான அகத்தியரே!!!!
குருமுனியே அகத்தியரே!!
விஷ்ணு அவதாரத்தின் மறு உருவமே!!!!
மறு உருவமே!!! ஆனந்த
ஆனந்தத்தில் இருக்கும் ஆனந்த பத்மநாபனே!!!
இருள் உள்ள வாழ்வை அழிப்பவனே!!! அகத்தியரே!! அகத்தியரே!!
துன்பமில்லா பெருவாழ்வு அளிப்பவரே!!!
அனைத்திற்கும் காரணமானவராக திகழ்பவரே!!!
தொண்டினையே தன் முழு முயற்சியாக கொண்டு அனைவருக்கும் நல்லதை செய்ய காத்திருக்கும் அகத்தியரே!!!!
அகத்தியரே குருமுனியே அகத்தியரே!!
காசி தன்னில் அழகாக குடி கொண்டிருக்கும் அகத்தியரே!!!
மீனாட்சி தன் மடியில் வளர்ந்தவரே அகத்தியரே
அண்ணாமலையின் உண்ணாமுலை தேவியுடன் மனமுவந்து மனமுவந்து மடியின் மீது அமர்ந்திருக்கும் அகத்தியரே!!!
தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவரே அகத்தியரே!!!
அகத்தியரே அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!!!
அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!!
நினைப்பவர்களுக்கெல்லாம் வந்து அருள்பவரே!!
தீய மனதையும் நல்மனதாக்கி அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று வழிகாட்டுபவரே!!!
நல்லோரையும் தீயோரையும் ஒரு மனதாக நினைத்து நல்லோரையும் தீயவர்களுடன் இணைத்து அவர்களையும் மாற்றி தரும் மனம் படைத்த குணம் படைத்த அகத்தியரே!!!
அகத்தியரே கருணை வடிவான அகத்தியரே
பாசமிகு வடிவான அகத்தியரே
அன்பு வடிவான அகத்தியரே
நினைத்தாலே வந்து அருள் பாலிக்கும் அகத்தியரே
இன்பமெல்லாம் கொடுப்பவரே அகத்தியரே
துன்பமெல்லாம் நீக்குபவரே அகத்தியரே
பாவம் இருந்தாலும் தன் கூடவே இருந்து கடை நாள் வரையிலும் அவர்களுக்கெல்லாம் பின் துன்பம் இருந்தாலும் அதனையும் கூட படிப்படியாக விலக்கும் அகத்தியரே!!!
குருமுனியே அகத்தியரே
வருவாய் அகத்தியரே
பின் உலகம் ஏழேழு உலகம் அழியப் போகின்ற நேரத்தில் கூட மனிதர்களுக்கு நற்செய்திகள் அளிக்கும் அகத்தியரே
அகத்தியரே அனைத்திற்கும் காரணமாக விளங்கும் அகத்தியரே
இன்பம் எல்லாம் அளிப்பவரே அகத்தியரே
துன்பத்தை எல்லாம் போக்குபவரே அகத்தியரே
தீய நெஞ்சோடு இருப்பவர்களை எல்லாம் பின் அணைத்து கொண்டு நல்லோர்களாக மாறச் செய்யும் அகத்தியரே!!
அகத்தியரே குருமுனியே அகத்தியரே கருணைமிகு அகத்தியரே
அண்ணாமலை உண்ணாமலை தேவியுடன் அழகாக பின் திகழும் அகத்தியரே!!
அகத்தியரே பழனி தன்னில் வீற்றிருக்கும் அழகாக குருமுனியே!!
குருமுனியே செந்தூரில் வீற்றிருக்கும் குருமுனியே
திட்டை தன்னில் வாழும் குருமுனியே!!
சூரியனார் கோயில் அமைத்து பின் அதில் தங்கி
இருக்கும் கிரகங்களுக்கெல்லாம் மோட்சத்தை அளிக்கும் மோட்சத்தை அளித்த குரு முனியே !
ஞானியருக்கெல்லாம் குருமுனியே!!
அனைத்து உலகாகும் பின் இயக்கத்தையும் பல வழிகளில் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவரே
இந்திரனுக்கும் தலைவரே
தலைவரே தேவர்களுக்கும் தலைவரே
உன்னை வணங்குபவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி அருள் தந்து...!!!
பிரம்மா ஆயினும் விஷ்ணு ஆயினும் ஈசனாயினும் அவர்களிடத்தில் சொல்லிச் சொல்லி கர்மத்தை அழித்து நிச்சயம் பின் மோட்சத்தை அளிக்கும் உனக்கு இணை யாரவரே?????! யாரவரோ????
நெஞ்சில் நிறைந்த குரு முனியே அகத்தியரே!!
அகத்தியரே அகத்தியரே அனைத்திலும் காரணமாக விளங்குபவர் அகத்தியரே
உலகத்தில் பல மனிதர்களுக்கு எல்லாம் அனைத்தும் செப்பி உலகத்தை மாற்ற வந்த ஞானியே!!!
குரு முனியே... விஷ்ணு அகத்தியரே!!! பிரம்மா அகத்தியரே!!! ஈசனே அகத்தியரே!!!
கணபதி அகத்தியரே!!
முருகா அகத்தியரே!!
சபரி அகத்தியரே!!
மீனாட்சி அகத்தியரே!!
அகத்தியரே அனைத்து சித்தர்களுக்கெல்லாம் இன்னும் இப்படித்தான் மனிதர்களை ஆட்கொண்டு அனைத்து விஷயங்களையும் செப்ப வேண்டும் என்று அழைத்து அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கும் அகத்தியரே!!!
ஞான அகத்தியரே
மோட்ச அகத்தியரே
சக்தி அகத்தியரே
சூல அகத்தியரே
பல பாவ வினைகளை அகற்றி மனிதனுக்கு புண்ணிய வினைகள் சேர்த்து இதனின்று சிலர் துன்பம் அகற்றி கொண்டு வரும் அகத்தியரே
அகத்தியரே குருமுனியே
குருமுனியே அருள்வாய் குரு முனியே
மக்களெல்லாம் தீய சக்திகளில் கூட தீய மனதாக ஆட்கொண்டு இருப்பினும் இருந்த போதிலும் நல் ஒழுக்கத்தையும் நல் மனதையும் தந்து காத்திடும் அகத்தியரே
தந்து காத்திடு கடை நாள் வரையிலும் நிச்சயம் தன்னில் அவர் மனதை திருத்தி உண்மை பொருள் எதுவென்று கூட கூறி அவந்தனையும் உயர்த்தி வைக்கும் அகத்தியனே
அகத்தியனே
அனைவரையும் சமமாக பார்க்கும் அகத்தியனே!!!
அனைவரையும் பின் சேய்கள் என்று நினைக்கும் அகத்தியரே
உன் கருணைக்கு எல்லையில்லா அகத்தியரே
தந்தையே அகத்தியரே
தாயே அகத்தியரே
குருவே அகத்தியரே
இறைவா அகத்தியரே
ஞான அகத்தியரே
இன்ப அகத்தியரே
துன்ப அகத்தியரே
கருணை அகத்தியரே
புண்ணிய அகத்தியரே
அகத்தியரே பல அரசர்களை எல்லாம் நல்வழிப்படுத்தி இப்படி ஆட்சி செய்தால் மக்களும் திருந்தி உன் வாழ்க்கையும் இன்னும் கூட சிறக்கும் என்று அரசர்களுக்கெல்லாம் உத்தரவிட்ட அகத்தியரே
கலியுகத்தில் வந்து உலகை எல்லாம் ஆளப் போகின்ற அகத்தியரே
அகத்தியரே ஏழ்மையில் இருந்தாலும் பின் அகத்தியனை நினைப்பவருக்கு வந்து இவன் தன் அறிந்தும் கூட பன்மடங்கு உயர்த்துபவரே
உயர்த்துபவரே
அகத்தியனை தெரியாதவராயினும் அகத்தியரை திட்டி தீர்ப்பவரையும் கூட நின்று மீண்டும் பின் அவர் தம் மனதில் அன்பை விளைவிக்கும் அகத்தியரே
பின் அகத்தியரே காட்டிக்கொள்ளும் அகத்தியரே உயர்ந்தவரே உயர்ந்தவரே மனதில் ஆளும் உயர்ந்தவரே கருணைமிக்க உகந்தவரே
தேவாதி தேவருக்கெல்லாம் அருள் தந்த இப்படி நடந்தால் ஞானமும் மோட்சமும் பெறலாம் என்று பின் அருள்பவரே
அருள் தந்தையே
விஞ்ஞானத்தின் தந்தையே
இன்னும் இவ்வுலகத்தில் என்ன என்ன ? பின் நடக்க போகின்றது? என்பதை எல்லாம் உணர்ந்தவரே!!!
எல்லா நாட்டவருக்கும் சொந்தங்கள் போன்று அனைவரையும் காப்பவரே
எப்படி அழிவு இருக்கும் என்பதை எல்லாம் அறிந்தும் கூட சில கஷ்டங்கள் பட்டு அனைவரையும் மீட்டெடுத்து கரையில் சேர்ப்பவர் அகத்தியரே
அகத்தியரே குருமுனியே!!
குருமுனியே!!
தேவாதி தேவனே
தேவாதி தேவர்கள் அன்பாக என் நெஞ்சில் அழகாக குடி கொண்டிருக்கும் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் கூட நீயில் ஒருவனே அகத்தியரே
படைத்த அகத்தியரே ஏழ்மை ஆயினும் பின் பிறந்தோருக்கெல்லாம் பின் செல்வத்தை பக்குவங்கள் பட்டு பட்டு பின் இப்படி இருந்தால்தான் வாழ முடியும் என்று சொல்லும் அகத்தியரே
அகத்தியனுக்கு இணை யார்?? என்று சொல்ல கூறு?? என்றெல்லாம் பின் பின்... முருகனை வளர்த்தவரே!!! கணபதியை வளர்த்தவரே!!!
எங்களுக்கெல்லாம் அருள் நிறைந்த வாழ்க்கையையும் கொடுத்தவரே கொடுத்தவரே கொடுத்தவரே நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தையும் உலகத்தில் சாதிக்கலாம் என்று சொல்பவரே
நல் மனதாக இருந்தால் இவ்வுலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம் என்று சொல்பவரே அகத்தியரே
குருமுனியே அகத்தியரே
குரு முனியே அகத்தியரே
ஆனந்த கண்ணீரில் இவையெல்லாம் செப்புகின்றேன் அகத்தியரே
உன்னை இன்னும் போற்றி பாட !!!!
நீ அதையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் இருப்பவரே
குருமுனியே குருமுனியே
உயர்ந்தவரே அனைத்து விஷயங்களும் தெரிந்தவரே அகத்தியரே போற்றி
ஈசனே அகத்தியரே போற்றி
பிரம்மனே அகத்தியரே போற்றி
விஷ்ணுவே அகத்தியரே போற்றி
துர்கா அகத்தியரே போற்றி
பைரவா அகத்தியரே போற்றி போற்றி
சித்தர்களே அகத்தியரே போற்றி
ஞானிகள் அகத்தியரே போற்றி
ரிஷிமார்களின் அகத்தியரே போற்றி
போற்றி போற்றி நின் தாள் பணிந்தேன் அகத்தியரே
நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!!
நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam நேரம் 11:09 pm 6 comments:
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Share to Pinterest
Sunday, 19 January 2025
சித்தன் அருள் - 1781 - அன்புடன் அகத்தியர் - புடா புஷ்கர் வாக்கு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே.... அஜ்மீர் ராஜஸ்தான் புஷ்கரில் குருநாதர் அகத்தியர் பெருமான்... சாவித்திரி காட் ரத்தனகிரி மலையில் பொது வாக்கு தந்த மறுநாள். 31/12/2024..புடா புஷ்கர் எனும் தீர்த்தக்கரையில் வைத்து குருநாதர் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வாக்குகள் தந்தார் அதன் தொகுப்பு !
குறிப்பு!
குருநாதர் சில பக்தர்களுக்கு மட்டும் கூறிய பதில் வாக்காக இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்...
குருநாதருடைய வாக்குகளை பெற்றவர்கள்!! அவர்களுக்கு குருநாதர் சொன்ன முற்பிறவி ரகசியங்கள் எல்லாம் அவரவருக்கு தனித்தனியாக கூறியது எல்லாம் அனைவருக்கும் தெரியும் !
அவரவருக்கு சில சந்தேகங்கள் சில கேள்விகள் இருக்கும்.
குருநாதர் இந்த வாக்கில் கேள்விகளுக்கு பதில் உரைத்த வாக்கு அனைவரின் தன் முற்பிறவி ரகசியங்கள் மற்றும் மனதில் இருக்கும் சந்தேகங்கள் கேள்விகள்
குருநாதர் கூறிய வாக்குகளின் சாராம்சத்தோடு பொருந்தி போகும் சந்தேகங்கள் விலகும். அதனால் இதை தனிநபர் வாக்குகளாக பார்க்க கூடாது அதில் உள்ள பொதுவான விஷயங்கள் என்ன என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வாக்கு வெளியிடப்படுகின்றது.
அப்பனே என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே.. ஆசிர்வாதங்கள் அப்பனே மிகுந்து கொண்டே போகும் அப்பா...
இதனால் அப்பனே எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே.. சில மன மாற்றங்கள் அப்பனே நல்விதமாகவே நிச்சயம் அப்பனே யானே செய்திடுவேன் என்பேன் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!
அப்பனே நிச்சயம் அப்பனே பல வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே அவை அனைத்தும் நிச்சயம் அப்பனே போக போக எவ்விடத்தில் என்பதையெல்லாம் தீர்மானித்து யான் எடுத்துரைப்பேன் அப்பனே கவலைகள் இல்லை
அப்பனே பின் அனைத்தும் இப்பொழுது கூட யான் சொல்லலாம்.. ஆனாலும் அப்பனே கேள்விகளாக நீங்கள் கேட்கத்தான் போகின்றீர்கள்... இதனால் கேளுங்கள்!!
குருவே முக்தி என்றால் என்ன மோட்சம் என்றால் என்ன இரண்டிற்கும் என்ன வேறுபாடு?????
அப்பனே நிச்சயம் அனைத்தும் இழந்தால் முக்தி!!!!...... அப்பனே இதன் மூலம் வருவது மோட்சம்!!!
குருவே முக்தி அடைந்த ஆத்மா எங்கு இருக்கும்???
மோட்சம் அடைந்த பின் ஆத்மா எங்கு செல்லும்???
அப்பனே முக்தி ஆன பிறகு அப்பனே நிச்சயம் அப்பனே மனம் இறைவனிடத்தில் சென்றடைந்து விடும் என்பேன் அப்பனே.
மோட்சம் என்றால் அப்பனே நிச்சயம் பின் உடம்பும் அப்பனே ஆன்மாவும் தனித்தனி அப்பனே... ஆன்மா நிச்சயம் இறைவனிடத்தில் கூட... அப்பனே அதாவது அப்பனே பின் உடம்பும் கூட அப்பனே பின் இறைவனால் அனுப்பப்பட்ட அப்பனே... சில உயிர்கள் அப்பனே பின் உண்ணும் அப்பா... இதுதான் அப்பனே
பின் அதனால் உடம்பும் பின் எவை என்று கூற ஆன்மாவும் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனுக்கு சொந்தமானது அப்பனே... அவனே எடுத்துக் கொள்வான்.... இதுதான் மோட்சம்.
குருவே மனம் ஆத்மா என்று நீங்கள் கூறுகின்றீர்கள் மனம் மற்றும் ஆத்மாவிற்கு என்ன வித்தியாசம்??
அப்பனே வித்தியாசம் இல்லையப்பா... ஆனால் இவ் ரகசியத்தை இப்பொழுது யான் சொல்லப்போவதில்லை!!
குருவே அப்படி என்றால் மனமும் ஆத்மாவும் இறைவனிடத்தில் செல்கின்றதா???
அப்பனே பின் மனமும் கூட ஆத்மாவும் கூட ஒன்றே என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே இப்பொழுது இதை யான் தெளிவுபடுத்தவில்லை!!
குருவே எங்கள் வாக்குகளில் மனிதனுடைய ஆத்மா உடலில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் என்று கூறி இருந்தீர்கள் அதைப் பற்றி விளக்கமாக கூறுங்கள்!!!
அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய ஒவ்வொருவருக்கும் ஆன்மா உடலில் பல பாகங்களில் இருக்கும் அப்பனே சிலருக்கு கண்களில் சிலருக்கு மூக்கு நுனியில் சிலருக்கு முதுகில் சிலருக்கு வயிற்றில் சிலருக்கு அவரவர் குறிகளிலும் கூட இருக்கும் அப்பனே.
அப்பனே இவ்வாறு நிச்சயம் குறிகளில் இருந்தால் அப்பனே பின் அதிக காம உணர்வுகள் வந்து கொண்டே இருக்கும்.. அப்பனே பின் முதுகில் பின்னே இருந்தால் அப்பனே நிச்சயம் பின் அதாவது அனைத்தும் தெரிந்து கொள்வார்கள் அப்பனே ஆனாலும் வெளிகொள்ள மாட்டார்கள்.
அப்பனே நுனியில் அதாவது மூக்கின் நுனியில் இருந்தால் அப்பனே கோபங்கள் அதிகமாக வரும் அப்பனே நிச்சயம் வயிற்றில் இருந்தால் அதிக அளவு உண்பார்கள் அப்பனே.
அப்பனே நிச்சயம் அப்பனே எங்கெங்கும் உள்ளதோ அதன்படியே அப்பனே ஆசைகள் வரும் அப்பா!!!
அதை அப்பனே நிச்சயம் அதாவது புருவம் மத்தியில் வைக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே உடலில் அங்கங்கு இருக்கும் ஆன்மாவை புருவ மத்தியில் இவ்வாறு வைத்தால்தான் முக்தியும் கிடைக்கும் மோட்சமும் கிடைக்கும்!!
அப்பனே அங்கு வைப்பதற்கு பல கஷ்டங்கள் என்பேன் அப்பனே.....
அப்பனே பல தவங்கள் பல தியானங்கள் பல யோகாசனங்கள் இறைவனை வணங்கினாலும் முடியாதப்பா!!!!
அப்பனே இவ் ஆன்மா எத்தனை பிறப்புக்கள் எடுத்துள்ளதோ? பின் அத்தனை பிறவிகளில் எங்கெல்லாம் இறைவனை கண்டுள்ளதோ... அவ்வவ் இடங்களுக்குச் சென்றால் தான் அப்பனே தானாக மேலே ஏறுமப்பா!!!
ஆனால் இன்றய அளவில் யாரும் செல்வதில்லை... அப்பனே பின் யாரோ ஒருவருக்குத்தான் முக்தியும் மோட்சமும் கிடைக்கின்றது என்பேன்.
அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அங்கு (புருவ மத்தியில்) வந்து விட்டால்...!!! இறைவன் என்னடா!!!! இறைவன் என்னிடத்தில் இருக்கின்றான்... போங்களடா என்று சொல்லிவிடுவீர்கள் நீங்கள்!!
இதனால் அப்பனே நீங்கள் தியானங்கள் என்ன செய்ய வேண்டும்... அப்புறம் நீங்கள் என்ன செய்தாலும் ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே... இதனால் அவை எப்படி பின் வைப்பது என்பதை யான் அறிவேன் அப்பனே.
அதனால் உங்களை (திருத்தலங்கள் திருத்தலங்களாக) அலைய வைக்கின்றேன் அவ்வளவுதான்.
அப்பனே அதனால்தான் அப்பனே உங்களை எங்கெங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் அழைத்துச் சென்று அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது அங்கே தானாகவே எழுந்து விடும் என்பேன் அப்பனே.
அப்படி சில சில இடங்களில் கூட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் சக்திகள் அதிகம்.
அப்பனே கிரகங்களின் சக்திகள் கூட பின் அதிகம்...அவ் இடங்களுக்கு சென்றாலே அப்பனே... சிறிது சிறிதாக அப்பனே... இங்கு வந்து விட்டால் (புருவ மத்தியில்) அப்பனே அனைத்து திறமைகளும் கூட அப்பனே உங்களுக்கு வந்து விடும் என்பேன் அப்பனே அடுத்தவரை பற்றி நீங்களே சொல்லலாம் என்பேன்!!
நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா.. பின் அதாவது அடுத்து என்ன நடக்கும் என்று நீங்களே கணித்து விடலாம் என்பேன் அப்பனே!!!
அப்பனே இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே இதனால் முன்னே நடப்பது கூட யான் உங்களுக்கு சரியாகவே அப்பனே எப்படியெல்லாம் நடத்திட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே.. அது சுலபம் அப்பா!!!
அப்பனே இன்னும் நாட்கள் செல்லட்டும் அப்பனே பின் உங்களுக்கு சொல்லித் தருகின்றேன்... நீங்களே அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நீங்களே பின் கணித்துக் கொள்ளலாம் என்பேன்.அப்பனே
அப்பனே இதனால் இறைவன் எவ் வடிவத்தில் ரூபத்தில் வருவான் என்பதை எல்லாம் அப்பனே யானே அறிவேன் அதனால் உங்களுக்கு செப்புவதில்லை... யானே அழைத்து செல்கின்றேன். அப்பனே...
அப்பனே இதனால்தான் அப்பனே அனைத்தும் யாம் அறிவோம் அப்பனே கவலையை விடுங்கள்.. அப்பனே பின் நிச்சயம் சொல்லியும் கொடுப்போம்.
இதனால் அப்பனே மனிதன் தவம் செய்து கொண்டு!!!!....
அப்பனே இன்னும் யோகாசனங்கள் செய்து கொண்டு!!!.....
இன்னும் அப்பனே பின் எதை எதையோ செய்து கொண்டு அப்பனே!!!.......
பின் நிச்சயம் அவ் ஆன்மாவை எழுப்பாமல் பின் தோல்வி அடைந்து விடுகின்றான் அப்பனே
இதனால் மறுபிறப்பும் பின் தோன்றுகின்றது என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் பின் இப்படி ஆத்மா மேலே வந்து விட்டால் எதற்கும் ஆசைப்பட மாட்டான் அப்பா... அமைதியாக உட்கார்ந்து விடுவான் என்பேன் அப்பனே...
ஆனாலும் இன்றளவில் தியானங்கள் அவை இவை செய்கின்ற பொழுது மீண்டும் அப்பனே பின் மனிதன் என்ன தவறுகள் பின் செய்கின்றானோ.. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான் என்பேன் அப்பனே... இவையெல்லாம் அப்பனே ஏற்க முடியாது சித்தர்கள் யாங்கள்.
அப்பனே எங்களால் முடியும் அப்பா... பின் அங்கு எழுப்புவதற்கு (புருவ மத்தியில்)...
ஆனால் அப்பனே இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே....அது தன் மாறுவதற்கு பின் நீங்கள் அப்பனே பின் எங்கெங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்... அதை அப்பனே நிச்சயம் சற்று யோசிக்க வேண்டும்.
அப்பனே இதனால் பின் சிலருக்கு கண்களில் இருக்குமப்பா!!!
கண்கள் தவறானதை எல்லாம் பார்க்கும் அப்பா இதனால் அப்பனே நிச்சயம் இன்னும் கர்மா ஏற்படும் அப்பா.
சிலருக்கு அப்பனே காதுகளில் இருக்குமப்பா.. ஆனால் காதுகளில் அப்பனே தவறானதை எல்லாம் கேட்கும் அப்பா.. இதனால் அப்பனே இன்னும் கர்மா அதிகரிக்கும் அப்பா... கஷ்டங்கள் அதிகரிக்கும் அப்பா.
சிலருக்கு கைகளில் கூட அப்பனே அதாவது வாங்குவதும் செயல்களை செய்வதும்....
சிலருக்கு கால்களில் அப்பா.... மிதிக்காத இடங்களுக்கெல்லாம் சென்று அப்பனே.....(கால்கள் வைக்க கூடாத இடங்களுக்கெல்லாம் சென்று கர்மாவை சம்பாதித்துக் கொள்வது)
அப்பனே இன்னும் இருக்கின்றதப்பா... இதனால்தான் அப்பனே பின் எவை தன் பின்... அதாவது அங்கு உள்ளதால் அப்பனே... அதனால் பின் இன்னும் அதிகரித்தால் நோய்கள் வந்து விடுகின்றது அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
உதாரணத்திற்கு மூக்கு நுனியில் சொன்னேன் அப்பனே இதனால் கோபங்கள் அதிகமாக வருமப்பா... இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே.. இல்லையென்றால் கர்மா சேர்ந்து விடும் அப்பா அவ்வளவுதான்... இது பொதுவானவை அனைத்துமே....
(உடலில் ஆத்மா இருக்கும் பாகங்கள் சார்ந்து தவறான செயல்களை செய்யும் பொழுது கர்மா சேர்ந்து விடும்)
அப்பனே பின் ஒன்றை அதாவது.. நாளை இவை நடந்து விடும் அவை நடந்து விடும்... என்று சொல்லிவிட்டு செல்லலாம் என்பேன் அப்பனே..
ஆனாலும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.. என்னுடைய கருத்து...
அதாவது அப்பனே நீங்கள் கூட... தன் பிள்ளைகள் படிப்பில் நன்றாக அதாவது படிக்க வேண்டும்.. முதல் தரத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா?!!!...
அதேபோலத்தான் அப்பனே இத் தந்தையானவனுக்கும்.. நீங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று!!!
குருவே நீங்கள் அனைத்தும் எங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள் கூடவே இருக்கின்றேன் என்று சொல்கின்றீர்கள் நாங்கள் மனிதர்கள் எங்களால் சில சில தவறுகள் ஏற்பட்டும் விடுகின்றது இதனால் கர்மா சேர்ந்து விடுமோ என்ற பயமும் இருக்கின்றது
அப்பனே யான் விடப்போவதில்லை என்பேன் அப்பனே... அதனால்தான் அப்பனே சில விஷயங்கள் நீங்கள் நினைப்பது நடக்காமல் போவதற்கும் கூட யான்தான் காரணம்!!! கர்மா சேரும் எதையும் அப்பனே உங்களை அண்ட விடுவதில்லை என்பேன் அப்பனே.
குருவே நீங்கள் வாக்குகளில் ஒரு ஆத்மா பல குறிப்பாக ஆயிரம் பிறவிகளுக்கு மேல் பிறப்பெடுத்து வரும் என்று கூறினீர்கள்... எங்களுக்கும் இதேபோன்று கூறினீர்கள் இதில் ரிஷிகளால் முனிகளால் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் எங்களுக்கு கூறியுள்ளீர்கள்.. முற்பிறவிகளில் பெற்ற இறை தரிசனம் முனிவர்களின் சித்தர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்ற எங்களுடைய. இவ்வளவு தூரம் பயணம் செய்த எங்களுடைய ஆத்மா தற்பொழுது அவற்றில் இருந்து எல்லாம் விலகி கர்மா உள்ள மனிதப் பிறவியாய் ஏன் பிறக்க நேரிட்டது?????!
அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே... ஆனாலும் இதற்கெல்லாம் பதில் இப்பொழுது இல்லை... அப்பனே நல் முறையாக... இன்னும் விவரிக்கும் பொழுது அப்பனே... நிச்சயம் அனைத்தும் வரும் அப்பா
எதை எப்பொழுது தெரிவிக்க வேண்டும் என்பதையெல்லாம் யான் அறிவேன் அப்பனே
அப்பனே இத்தனை ஆண்டுகள் பிறந்து பிறந்து வந்துள்ளதால் தான் அப்பனே... நீங்கள் என்னுடைய அருகிலே இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே.
குருவே நீங்கள் வாக்குகளில் எங்களுடைய முற்பிறவிகளில் ரிஷி முனி களோடு இருந்தோம் சித்தர்களோடு இருந்தோம் என்று இறைவன் தரிசனம் எல்லாம் உங்களுக்கு கிடைத்தது என்றெல்லாம் வாக்குகளில் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்... உங்களோடு இருந்த பொழுது ரிஷிமுனிகளோடு இருந்த பொழுது அப்பொழுதே எங்களுக்கு ஏன் முக்தி கிடைக்கவில்லை????!
அப்பனே இன்னும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பேன் அப்பனே.... அப்பனே பின் அதாவது யாங்கள் மீண்டும் அனுப்புவோம் என்போம் அப்பனே... சில நபர்களை மட்டுமே அப்பனே!!! மக்களுக்கு சேவையை செய்ய என்பேன் அப்பனே!!
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே புரிந்து கொள்ளுங்கள்.
குருவே சித்தர்களோடு ரிஷிமுனிகளோடு முற்பிறவிகளில் வாழ்ந்த ஆத்மாக்கள் மனிதப் பிறப்பு எடுத்து வரும் பொழுது அவர்களுடைய ஆத்மா புருவ மத்தியில் இருக்குமா???
மனிதப் பிறப்பு எடுத்து வந்தாலும் அப்பனே பல ஆசைகள் இருந்தால் நிச்சயம் ஆத்மா அவ் அவ் இடத்தில் தான் இருக்கும் என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே எதையும் நினைக்காமல் எதற்கும் ஆசைப்படாமல் இருந்தாலே பின் சுலபமாகவே மேலே ஏறிவிடும் தானாகவே என்பேன் அப்பனே.
குருவே முற்பிறவிகளில் இருந்த சித்தர்களின் வாசம்... தற்போது இப்பிறவிகளில் விலகி நிற்க வேண்டிய கட்டாயம் என்ன???
அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே போக போக புரியும் அப்பா... அனைத்து பின் பொருள்கள் மீதும் ஆசை கொண்டாலும் அப்பனே தெரியாதப்பா... முதலில் உங்கள் கடமைகள் விருப்பங்கள் நிறைவேறட்டும்... அதன் பிறகு ஆசையே இல்லாமல் இருக்கும் பொழுது புரியும் அப்பா
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விசுவாமித்திரன் பின் தவத்தை மேற்கொள்ளவே பின் பல ஆயிரம் ஆண்டுகள் அதாவது பல ஆயிரம் பிறப்புக்கள் எடுத்து வந்து தான்... அவந்தன் பெற்றான் என்பேன் அப்பனே... நேற்றைய பொழுதில் சொன்னேன் அல்லவா...
அதனால் அப்பனே ஒரே பிறவியில் பின் நிச்சயம் அப்பனே முக்தியும் மோட்சமும் கிடைக்காதப்பா.
அப்பனே இறைவனை வணங்குவதற்கே தகுதிகள் வேண்டுமப்பா..
அதாவது பின் பல ஆயிரம் பிறவிகள் எடுக்க வேண்டி பின் வேண்டி வந்தால்தான் அப்பனே... இவை போன்ற இடங்களுக்கெல்லாம் வர முடியும் என்பேன் அப்பனே.
குருவே என்னுடைய முற்பிறவியில் சித்தர்களோடும் ரிஷிமுனிகளோடும் பயணப்பட்ட என் ஆத்மா இந்த பிறவியில் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன் என்னுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது
அப்பனே நிச்சயம் அப்பனே பல பல முனிவர்கள் கூட தேவர்கள் கூட அப்பனே அறிந்தும் கூட எவ்வாறு வாழ்க்கை இருந்தது இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டாயா அப்பனே
அனைத்து சுகங்களும் கிடைக்காதப்பா... பின் காலில் அணிவதற்கு செருப்பு கூட கிடைக்காதப்பா!!
அப்பனே பொதுவாக சொல்கின்றேன் உங்களுக்கு வாக்குகள் தரும் பொழுது ஒவ்வொரு படியாக ஏற்றிவிட்டு கொண்டே இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொரு கர்மாவையும் தொலைத்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
குருவே நான் விரும்பும் இறைவனை அடைவது எப்படி????
யான் சொல்லியதை கேட்டு நடந்தாலே இறைவன் உங்களை தேடி வருவான் அப்பனே... இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே... யான் என்ன சொல்கின்றேனோ அதைக் கேட்டு நடங்கள் அப்பனே அப்படியே கடைப்பிடித்து வரும் பொழுது இறைவனையும் காண்பிப்பேன் அப்பனே உங்களை தேடி வர செய்வேன் என்பேன் அப்பனே.
அப்படியே நீங்கள் அதாவது மனிதர்கள் அனைவருமே.. விரும்பி விட்டால் வந்து விடுவானா இறைவன்??????????? என்ன???????
அப்பனே.. நீங்களே சொல்லுங்கள் அனைவருமே யோசித்து!!! சொல்ல வேண்டும்!!
இதை கேட்ட அடியவர்கள் ஒரு நிமிடம் அமைதிப்பொறுத்து.... உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர் பெருக்கெடுக்க !!; அப்பா அகத்தீசா!!!!! நீங்களே கருணாமூர்த்தி.... இறைவனை விட எங்கள் மீது அன்பும் கருணையும் வைத்திருப்பது நீங்கள் தான் உங்களைத் தவிர எந்த லோகத்திலும் மனிதர்கள் மீது கருணையும் பாசம் காட்டுவதற்கு ஆள் இல்லை அப்பா... உங்கள் பாதங்களே சரணம் அகத்தியப்பா!!!
அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைத்தும் செய்வேன் என்பேன் அப்பனே அதாவது பிள்ளைகள் எதை கேட்டாலும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய அப்பனே நல்லவை அப்பனே தீயவை எதை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அதாவது.. உங்கள் பிள்ளைகளுக்கு கூட !! நீங்கள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து விடுகின்றீர்களா ??என்ன
நீங்களே சொல்லுங்கள்!!!
அப்பொழுது அப்பனே குழந்தைகள் அழும் அப்பா... என் தந்தை இது பின் வாங்கி கொடுக்க வில்லையே என்று... அவ்வாறுதான் நீங்கள் இப்படி!!!
அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே உடம்பை மட்டும் விட்டு அப்பனே.. ஆன்மாவை வெளியேற்றுவது எப்படி எல்லாம் என்பதை அப்பனே இன்னும் காலங்கள் செல்லட்டும் சொல்கின்றேன் என்பேன் அப்பனே !!! அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே மற்றொரு தலத்தில் விரிவாகவே விவரிக்கின்றேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்
Subscribe to:
Posts (Atom)